பாலாற்று மேம்பால பராமரிப்புப் பணிகள் நடப்பதால் சென்னை வரும் அணைத்து வாகனங்களும் மாற்று வழியில் திருப்பி விடப்படுகிறது
செங்கல்பட்டு அருகில் மாமண்டூர் பாலாற்று மேம்பால பராமரிப்புப் பணிகள் நடப்பதால், தெற்கு மாவட்டங்களிலிருந்து, சென்னை வரும் அணைத்து வாகனங்களும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளதனால் வாகன ஓட்டிகள் மாற்று வழிதட விபரம் தெரியாமல் நெரிசலில் சிக்கிச் சிரமப்பட்டு செல்லும் நிலையில்
போக்குவரத்து நெரிசல் காரணமாக சென்னை- - திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மாமண்டூர் அருகே, பாலாற்றின் மீது இரண்டு மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.இதில், செங்கல்பட்டு மார்க்கமாகச் செல்லும் பழைய பாலம் சேதமடைந்தததையடுத்து, நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், பிப்ரவரி மாதம். 7 ஆம் தேதி முதல் சீரமைப்புப் பணி நடக்கிறது.
தெற்கு மாவட்டங்களிலிருந்து, சென்னை நோக்கி வரும் வாகனங்கள், மாமண்டூர் அருகே மெய்யூர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. பிலாப்பூர், காவூர், காவியதண்டலம், ஓரக்காட்டுப்பேட்டை மேம்பாலம் வழியாக பழத்தோட்டம் சென்று, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையை வந்து, சென்னை நகருக்கு செல்கின்றன. மேலும் பேருந்துகள், சிற்றூர்திகள் போன்ற பொது வாகனங்கள் செல்வதற்கு ஒரு வழியும், கனரக வாகனங்கள் செல்வதற்கு மற்றொரு வழியும், தற்போது ஏற்படுத்தப்பட்டது. திண்டிவனம் வழியாக வரும் கனரக வாகனங்களும், சென்னை- - திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள புக்கத்துறையருகே இடதுப்புறமாகத் திருப்பி, நெல்வாய் கூட்டுசாலை, வளத்தோடு, ஆலஞ்சேரி, குண்ணவாக்கம், மதுார், அருங்குன்றம், திருமுக்கூடல் மேம்பாலம் வழியாக பழைய சீவரம் அருகே, காஞ்சிபுரம்- - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் சேர்கிறது.
நெல்வாய் கூட்டுச்சலையில் துவங்கி, பழைய சீவரம் வரையிலான கிராம சாலைகள் குறுகிய அளவிலானது என்பதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மேம்பாலத்தின் பணிகள் முடிய ஒன்றரை மாதங்களாவதாகும் என்பதால், இப் போக்குவரத்து நெரிசல் குறித்து, பலரும் கவலை கொண்டுள்ளனர்.
ஓட்டுனர்களுக்கு புதிய இடங்கள் மற்றும் உள்ள இணைப்பு சாலை பகுதிகளில், வழி தெரியாமல், மாற்று வழியில் செல்கின்றனர். கிராம இணைப்பு சாலை பகுதிகளில், செங்கல்பட்டு மற்றும் சென்னைக்கு செல்வதற்கான வழிகாட்டும் பலகை வைப்பது மிகவும் அவசியம்
உத்திரமேரூர் சுற்று வட்டாரத்தில், ஏராளமான கல்குவாரிகள், கிரஷர்கள் செயல்படுவதால் இரவு பகலாக, நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள், திருமுக்கூடல் பாலம் வழியாகச் சென்று வருகின்றன. வலுவிழந்து காணப்படும் இப் பாலத்தில், மாமண்டூர் பாலம் சீரமைப்பு பணி காரணமாக திருப்பி விடப்பட்ட வாகனங்கள் செல்வதால், திருமுக்கூடல் பாலத்தின் ஸ்திரத்தன்மையும் பாதிக்கப்பட்டுள்ளது. பாலத்தின் மீது அதிர்வு அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் தற்போது அச்சப்படுகின்ற நிலை உள்ளது.
கருத்துகள்