முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொந்தளித்த கரூர் ஜோதிமணி, ”உங்கள் அலுவலகம் தேடி வந்தது விருந்துக்கு அல்ல, தொகுதி பங்கீட்டுக்கு. நடந்தது என்ன?

தமிழகத்தின் நகர்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸும் திமுகவும் கூட்டாக களம் கண்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் என்பதால் அந்தந்த மாவட்ட அளவில் தான் பேச்சுவார்த்தைகள்  நடக்கின்றன.


தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தல் என்பதால் கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

இச் சூழ்நிலையில் கரூர் மாவட்டம் சார்பாக திமுகவில் பேச்சுவார்த்தையை நடத்தி முடிவெடுக்கும் அதிகாரம் செந்தில் பாலாஜிக்கு அதன் தலைமையால் தரப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக அலுவலகம் சென்ற காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணியை செந்தில் பாலாஜி திடீரென்று, ”எழுந்து வெளியில் போ” என்று ஆத்திரமாக பேசியுள்ளது சர்ச்சையை உருவாக்கிய நிலையில் கொந்தளித்த ஜோதிமணி, ”உங்கள் அலுவலகம் தேடி வந்தது விருந்துக்கு அல்ல, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு. நீங்க எப்படி எழுந்திருச்சு வெளியே போ..” வென்று கூறலாம் என சத்தமிட்டவாறு வெளியே வந்த காணொளியை பலர் பார்த்துள்ளதும்



அது குறித்து காங்கிரஸ் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி  கூறும் போது, ”சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைத்து எவ்வளவு மரியாதையுடனும், பண்புடனும் பேசுகிறார். ஆனால், இங்கோ, செந்தில் பாலாஜி கொடுக்கிறதை வாங்கிட்டுப் போ, பேச்சுக்கே இடமில்லை என்ற ரீதியில் என்னை எடுத்தெறிஞ்சு பேசுகிறார்.





மாவட்ட திமுக அலுவலகத்திற்கு நானும், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சின்னச்சாமியும் தான் சென்றோம். இத்தனைக்கும் நாங்கள் அதிகம் கேட்கவில்லை. கரூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 இடங்களில் 7 கேட்டு ஐந்துக்கு இறங்கி வந்தோம். ஆனால், அவரோ ‘இரண்டுக்கு மேல் வாய்ப்பில்லை’ என கறார் காட்டினார். ‘அரவக்குறிச்சி பேரூராட்சியில் 16 க்கு இரண்டு தான் கேட்டோம்.ஒன்றுக்கு மேல் இல்லை’ என்றார். பள்ளப்பட்டி நகராட்சியில் 35 வார்டுகளில் இரண்டு மட்டுமே தரமுடியுமென்றார். எந்த நெகிழ்வுத் தன்மையும் இல்லாமல் பேசியது ஒருபுறமென்றால், உங்க கட்சியில் ஆளே இல்லை' என எகத்தாளமாக பேசி, இல்லை நீங்க போய் உங்க தலைமை கிட்ட சொல்லுங்க” என்றார்.

"எங்க தலைமை எப்படி இவ்வளவு குறைவான இடங்களை ஏற்றுக் கொண்டீர்கள் என்று தானே எங்களைக் கேட்பார்கள்? நல்ல முடிவு சொல்லுங்க” என்று பேசிக் கொண்டே வரும் போது ”இல்ல, இவ்வளவு தான், ஏற்க முடியாவிட்டால் எந்திருச்சு வெளியே போ..” என நாகரீகக் குறைவாக பேசிவிட்டார். ஜோதிமணி என்பவர் தனி மனிதராகவோ, சொந்த நலன் கருதியோ அவரிடம் பேசப் போகவில்லை. ஒரு தேசிய கட்சியின் பிரதிநிதியாகத் தான் நான் சென்றேன். தருவதும், மறுப்பதும் அவர்கள் விருப்பம். ஆனால், கண்ணியத்துடன் பேச வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு” எனத் தெரிவித்துள்ள நிலையில்.கரூர் மாவட்டத் திமுக அலுவலகத்தில் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை, திமுகவினர் வெளியேற்றிய சம்பவம் இணையத்தில் வைரலான நிலையில் அக்கட்சியினரிடையே பரபரப்பான காரணமாக.

கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து இறுதி கட்ட ஆலோசனை நடத்தப்பட்டதில்

திமுக அமைச்சரும் மாவட்ட செயலாளருமான செந்தில்பாலாஜி தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் வேட்பாளரை இறுதி செய்வதற்கு வார்டு பங்கீடு பேச்சுவார்த்தையில்

காங்கிரஸ் தரப்பில் 15 இடங்கள் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள் மேலும் துணை சேர்மன் உள்ளிட்ட இடங்களும் கேட்டு இருக்கிறார்கள் ஆனால் திமுக தரப்பில் உங்களுக்கு 5 இடங்கள் மட்டுமே கொடுக்க முடியும் மேலும் நீங்கள் கேட்கக் கூடிய இடங்களில் உங்களுக்கு வெற்றி வாய்ப்பில்லை நாங்கள் சொல்லக் கூடிய இடங்களில் உங்கள் கட்சியில் சில வேட்பாளர்களைத் தேர்வு செய்யுங்கள் என திமுக தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

இது எதிலும் எம்.பி. ஜோதிமணியிடம் கலந்து கொள்ளாமல் அவர்களாகவே தொகுதி பங்கீடு குறித்து பேசிக் கொண்டிருந்துள்ளனர் மேலும் ஜோதிமணி ஆதரவாளர்கள் யாருக்கும் சீட் கிடைக்காத சூழல் உண்டானதால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி திமுகவினரிடம் கரூரில் யார் தயவில் யார் வெற்றி பெற்றுள்ளார்கள் என அனைவருக்கும் தெரியும் நாங்கள் அடிக்கடி கட்சி மாறுபவர்கள் அல்ல உங்களைப் போல் தொகுதியை மாற்றக் கூடியவர்களுமல்ல என ஆவேசமாக பேசியிருப்பதாகவும் ஒரு தகவல் உண்டு 

அப்போது தான், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க நீ யார் வெளியே போ மாவட்டத் தலைவர்களுடன் பேசத் தான் எங்கள் கட்சித் தலைமை சொல்லியிருக்கு நீ எந்த மாவட்ட பொறுப்பில் இருக்கிறாய் என கொந்தளித்திருக்கிறார்கள்  திமுகவினர் ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. 

திமுகவினரை ஆவேசமாக திட்டிவிட்டு வெளியேறிய காங்கிரஸ் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, பேச்சவார்த்தையின் போது, திமுகவினர் வெளியேற சொன்னதாக குற்றம்சாட்டினார். பேச்சுவார்த்தைக்கு வந்த கூட்டணி கட்சியினரை வெளியே போகச் சொன்னது கூட்டணி தர்மமா என்றும் அவர் ஆவேசத்துடன் கூறிவிட்டு வெளியேறினார்.

பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியை வெளியே போகச் சொன்னதாக, திமுக அலுவலகம் முன்பு ஆவேசத்துடன் ஜோதிமணி பேசிய வீடியோ வைரலான நிலையில் இது குறித்து திமுக தரப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விளக்கம் கேட்டு இருக்கிறார்கள்.

அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் கொடுத்துள்ளார், ஆரம்பத்திலிந்தே மாவட்ட ஆட்சியர், ஆர்.டி.ஒ என நான் சொல்லும் ஆட்களை தேர்வு செய்யவேண்டும் என அழுத்தம் கொடுத்தார் ஜோதிமணி, இதில் நாங்களே தலையிடுவது இல்லை நீங்கள் கேட்கிறீர்களே எனச் சொன்னேன் அன்றிலிருந்து பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு வேண்டுமென்றே ஜோதிமணி செயல்படுகிறாரென விளக்கம் கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

இதையடுத்து காங்கிரஸ் கரூர் மாவட்ட நிர்வாகிகள் பலரே ஜோதிமணிக்கு எதிராக கட்சித் தலைமையிடம் புகார் கொடுத்துள்ளனர், திமுக கூட்டணியில் இல்லை என்றால் நம்மால் மாநிலம் முழுவதும் எத்தனை இடங்களில் வெற்றிகளைப் பெற முடியும், அவர்களே செலவையும் பார்த்துக் கொள்வதாக கூறியுள்ளனர் ஆனால் அனைத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சொந்தப் பகையின் காரணமாக உடைக்கப் பார்க்கிறாரென தகவல் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ராகுல் காந்தியே நான் சொன்னால் கேட்பார் எனும் நிலையிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணிக்கு சொந்தக் கட்சி மாவட்டத் தலைவர்களே ஆதரவில்லாமல் இருப்பது தான் தற்போது காங்கிரஸ் கரூர் மாவட்டத்தில் கோஷ்டி பூசலால் தான் எனத் தெரியவந்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த