முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொந்தளித்த கரூர் ஜோதிமணி, ”உங்கள் அலுவலகம் தேடி வந்தது விருந்துக்கு அல்ல, தொகுதி பங்கீட்டுக்கு. நடந்தது என்ன?

தமிழகத்தின் நகர்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸும் திமுகவும் கூட்டாக களம் கண்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் என்பதால் அந்தந்த மாவட்ட அளவில் தான் பேச்சுவார்த்தைகள்  நடக்கின்றன.


தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தல் என்பதால் கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

இச் சூழ்நிலையில் கரூர் மாவட்டம் சார்பாக திமுகவில் பேச்சுவார்த்தையை நடத்தி முடிவெடுக்கும் அதிகாரம் செந்தில் பாலாஜிக்கு அதன் தலைமையால் தரப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக அலுவலகம் சென்ற காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணியை செந்தில் பாலாஜி திடீரென்று, ”எழுந்து வெளியில் போ” என்று ஆத்திரமாக பேசியுள்ளது சர்ச்சையை உருவாக்கிய நிலையில் கொந்தளித்த ஜோதிமணி, ”உங்கள் அலுவலகம் தேடி வந்தது விருந்துக்கு அல்ல, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு. நீங்க எப்படி எழுந்திருச்சு வெளியே போ..” வென்று கூறலாம் என சத்தமிட்டவாறு வெளியே வந்த காணொளியை பலர் பார்த்துள்ளதும்



அது குறித்து காங்கிரஸ் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி  கூறும் போது, ”சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைத்து எவ்வளவு மரியாதையுடனும், பண்புடனும் பேசுகிறார். ஆனால், இங்கோ, செந்தில் பாலாஜி கொடுக்கிறதை வாங்கிட்டுப் போ, பேச்சுக்கே இடமில்லை என்ற ரீதியில் என்னை எடுத்தெறிஞ்சு பேசுகிறார்.





மாவட்ட திமுக அலுவலகத்திற்கு நானும், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சின்னச்சாமியும் தான் சென்றோம். இத்தனைக்கும் நாங்கள் அதிகம் கேட்கவில்லை. கரூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 இடங்களில் 7 கேட்டு ஐந்துக்கு இறங்கி வந்தோம். ஆனால், அவரோ ‘இரண்டுக்கு மேல் வாய்ப்பில்லை’ என கறார் காட்டினார். ‘அரவக்குறிச்சி பேரூராட்சியில் 16 க்கு இரண்டு தான் கேட்டோம்.ஒன்றுக்கு மேல் இல்லை’ என்றார். பள்ளப்பட்டி நகராட்சியில் 35 வார்டுகளில் இரண்டு மட்டுமே தரமுடியுமென்றார். எந்த நெகிழ்வுத் தன்மையும் இல்லாமல் பேசியது ஒருபுறமென்றால், உங்க கட்சியில் ஆளே இல்லை' என எகத்தாளமாக பேசி, இல்லை நீங்க போய் உங்க தலைமை கிட்ட சொல்லுங்க” என்றார்.

"எங்க தலைமை எப்படி இவ்வளவு குறைவான இடங்களை ஏற்றுக் கொண்டீர்கள் என்று தானே எங்களைக் கேட்பார்கள்? நல்ல முடிவு சொல்லுங்க” என்று பேசிக் கொண்டே வரும் போது ”இல்ல, இவ்வளவு தான், ஏற்க முடியாவிட்டால் எந்திருச்சு வெளியே போ..” என நாகரீகக் குறைவாக பேசிவிட்டார். ஜோதிமணி என்பவர் தனி மனிதராகவோ, சொந்த நலன் கருதியோ அவரிடம் பேசப் போகவில்லை. ஒரு தேசிய கட்சியின் பிரதிநிதியாகத் தான் நான் சென்றேன். தருவதும், மறுப்பதும் அவர்கள் விருப்பம். ஆனால், கண்ணியத்துடன் பேச வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு” எனத் தெரிவித்துள்ள நிலையில்.கரூர் மாவட்டத் திமுக அலுவலகத்தில் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை, திமுகவினர் வெளியேற்றிய சம்பவம் இணையத்தில் வைரலான நிலையில் அக்கட்சியினரிடையே பரபரப்பான காரணமாக.

கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து இறுதி கட்ட ஆலோசனை நடத்தப்பட்டதில்

திமுக அமைச்சரும் மாவட்ட செயலாளருமான செந்தில்பாலாஜி தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் வேட்பாளரை இறுதி செய்வதற்கு வார்டு பங்கீடு பேச்சுவார்த்தையில்

காங்கிரஸ் தரப்பில் 15 இடங்கள் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள் மேலும் துணை சேர்மன் உள்ளிட்ட இடங்களும் கேட்டு இருக்கிறார்கள் ஆனால் திமுக தரப்பில் உங்களுக்கு 5 இடங்கள் மட்டுமே கொடுக்க முடியும் மேலும் நீங்கள் கேட்கக் கூடிய இடங்களில் உங்களுக்கு வெற்றி வாய்ப்பில்லை நாங்கள் சொல்லக் கூடிய இடங்களில் உங்கள் கட்சியில் சில வேட்பாளர்களைத் தேர்வு செய்யுங்கள் என திமுக தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

இது எதிலும் எம்.பி. ஜோதிமணியிடம் கலந்து கொள்ளாமல் அவர்களாகவே தொகுதி பங்கீடு குறித்து பேசிக் கொண்டிருந்துள்ளனர் மேலும் ஜோதிமணி ஆதரவாளர்கள் யாருக்கும் சீட் கிடைக்காத சூழல் உண்டானதால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி திமுகவினரிடம் கரூரில் யார் தயவில் யார் வெற்றி பெற்றுள்ளார்கள் என அனைவருக்கும் தெரியும் நாங்கள் அடிக்கடி கட்சி மாறுபவர்கள் அல்ல உங்களைப் போல் தொகுதியை மாற்றக் கூடியவர்களுமல்ல என ஆவேசமாக பேசியிருப்பதாகவும் ஒரு தகவல் உண்டு 

அப்போது தான், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க நீ யார் வெளியே போ மாவட்டத் தலைவர்களுடன் பேசத் தான் எங்கள் கட்சித் தலைமை சொல்லியிருக்கு நீ எந்த மாவட்ட பொறுப்பில் இருக்கிறாய் என கொந்தளித்திருக்கிறார்கள்  திமுகவினர் ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. 

திமுகவினரை ஆவேசமாக திட்டிவிட்டு வெளியேறிய காங்கிரஸ் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, பேச்சவார்த்தையின் போது, திமுகவினர் வெளியேற சொன்னதாக குற்றம்சாட்டினார். பேச்சுவார்த்தைக்கு வந்த கூட்டணி கட்சியினரை வெளியே போகச் சொன்னது கூட்டணி தர்மமா என்றும் அவர் ஆவேசத்துடன் கூறிவிட்டு வெளியேறினார்.

பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியை வெளியே போகச் சொன்னதாக, திமுக அலுவலகம் முன்பு ஆவேசத்துடன் ஜோதிமணி பேசிய வீடியோ வைரலான நிலையில் இது குறித்து திமுக தரப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விளக்கம் கேட்டு இருக்கிறார்கள்.

அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் கொடுத்துள்ளார், ஆரம்பத்திலிந்தே மாவட்ட ஆட்சியர், ஆர்.டி.ஒ என நான் சொல்லும் ஆட்களை தேர்வு செய்யவேண்டும் என அழுத்தம் கொடுத்தார் ஜோதிமணி, இதில் நாங்களே தலையிடுவது இல்லை நீங்கள் கேட்கிறீர்களே எனச் சொன்னேன் அன்றிலிருந்து பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு வேண்டுமென்றே ஜோதிமணி செயல்படுகிறாரென விளக்கம் கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

இதையடுத்து காங்கிரஸ் கரூர் மாவட்ட நிர்வாகிகள் பலரே ஜோதிமணிக்கு எதிராக கட்சித் தலைமையிடம் புகார் கொடுத்துள்ளனர், திமுக கூட்டணியில் இல்லை என்றால் நம்மால் மாநிலம் முழுவதும் எத்தனை இடங்களில் வெற்றிகளைப் பெற முடியும், அவர்களே செலவையும் பார்த்துக் கொள்வதாக கூறியுள்ளனர் ஆனால் அனைத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சொந்தப் பகையின் காரணமாக உடைக்கப் பார்க்கிறாரென தகவல் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் ராகுல் காந்தியே நான் சொன்னால் கேட்பார் எனும் நிலையிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணிக்கு சொந்தக் கட்சி மாவட்டத் தலைவர்களே ஆதரவில்லாமல் இருப்பது தான் தற்போது காங்கிரஸ் கரூர் மாவட்டத்தில் கோஷ்டி பூசலால் தான் எனத் தெரியவந்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...