நடிகர் விஜய் புதுச்சேரி முதல்வர் இரங்கசாமியுடன் சந்திப்பு குறித்து பல தகவல்கள் வெளியான நிலையில்
மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்றும், வேறு எந்த உள்நோக்கமும் கிடையாதெனத் தகவலும் வெளியானது. இருப்பினும் முதல்வரைத் திடீரென நடிகர் விஜய்யை சந்தித்ததற்கு பின்னணியில் சில அரசியல் காரணங்கள் இருக்கலாம் எனக் கருதப்படுகிற நிலையில் அவர்கள் இருவரும் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானதற்கு முக்கிய காரணமும் உள்ளது. நடிகர் விஜய் யாருடனாவது சேர்த்து புகைப்படங்கள் எடுத்தால் அதை வெளியில் விடாதீர்கள் என்க் கேட்டுக்கொள்வார். சமீபத்தில் தடாலடி மதுரை பைனான்சியர் அன்புசெழியன் விஜய் வீட்டிற்கு பத்திரிக்கை வைக்கச் சென்ற போது அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விஜய் வெளியில் விட வேண்டாம் எனக் கேட்டுள்ளார். காரணம் பலவிதமான படமாகத் கூட இருக்கலாம் இதுபோன்ற கொள்கையை நடிகர் விஜய் அனைவரிடமும் கடைப்பிடிப்பது வழக்கம். ஆனால் பாண்டிச்சேரி முதல்வருடன் நடந்த சந்திப்பு புகைப்படங்கள் மட்டும் மீடியாவில் உடன் வெளியாகியுள்ளது. காரணம் இது அவருக்கு நன்மை பயக்கும் என்பதே தற்போது இந்த விஷயம் தான் அரசியல் வட்டாரத்தில் சிறு சலசலப்பாகியுள்ளது. அதுவும் அந்தப் புகைப்படத்தில் விஜய் அணிந்திருந்த உடையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது அரசியலின் அடுத்த கட்டத்திற்கான ஆரம்பமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ள நிலையில் தற்போது நடந்த இந்த சந்திப்புக்குப் பின்னும் அரசியல் காரணங்கள் இருக்கிறதா என்பது போன்ற பல கேள்வியும், எதிர்பார்ப்புகளும் விஜய் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் தனது மன்றம் பிரமுகர் புஸ்ஸீ ஆனந்த்துக்கான ஆதரவாக என்று விரைவில் தெரியும்.
கருத்துகள்