முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனிதகுலம் முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதி அனைவரின் நலனுக்காகவும் பாடுபடும் ஒற்றை நம்பிக்கை மட்டுமே நிலவுகிறது; குடியரசு தலைவர்

 பல்வேறு மத பாரம்பரியங்கள் மற்றும் நடைமுறைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளன, ஆனால் மனிதகுலம் முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதி அனைவரின் நலனுக்காகவும் பாடுபடும் ஒற்றை நம்பிக்கை மட்டுமே நிலவுகிறது; குடியரசு தலைவர் கோவிந்த்.


பல்வேறு  மத பாரம்பரியங்கள் மற்றும் நடைமுறைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளன, ஆனால் மனிதகுலம் முழுவதையும் ஒரே குடும்பமாகக்  கருதி அனைவரின் நலனுக்காகவும் பாடுபடும் ஒற்றை நம்பிக்கை மட்டுமே நிலவுகிறது என்று  குடியரசு தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். ஒடிசா மாநிலம் பூரியில், கவுடிய மதத்தை நிறுவிய ஶ்ரீமத் பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி பிரபுபாத்-ன் 150-வது பிறந்த நாளின் மூன்றாண்டு காலக்  கொண்டாட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

கடவுள் பல்வேறு வடிவங்களில் வழிபடப்படுகிறார். ஆனால், பக்தி பாவத்தோடு கடவுளை வழிபடும் பாரம்பரியத்துக்கு  இந்தியாவில் முக்கியத்துவம் உண்டு. இங்கு, பல பெரும் துறவிகள் தன்னலமற்ற வழிபாட்டை நடத்தி வந்துள்ளனர். அத்தகைய பெரும் துறவிகளிலும், ஶ்ரீ சைதன்ய மகாபிரபுவுக்கு என ஒரு தனி இடம் உண்டு. அவரது அசாதாரணமான பக்தியால் ஈர்க்கப்பட்டு, ஏராளமான மக்கள் பக்தி மார்க்கத்தை தேர்ந்தெடுத்துள்ளதாக குடியரசு தலைவர் கூறினார்.

மக்கள் தங்களைப்  புல்லை விட சிறிதாக கருதிக்  கடவுளை மிகவும்  பணிவுடன் வழிபட வேண்டும் என்று ஶ்ரீசைதன்ய மகாபிரபு அடிக்கடி கூறியதை குடியரசு தலைவர் நினைவு கூர்ந்தார். மரத்தை விட அதிக சகிப்புத் தன்மையுடனும், தற்பெருமையைக்கைவிட்டு, மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பவர்களாக மனிதர்கள் இருக்க வேண்டும் என்று ஶ்ரீசைதன்ய மகாபிரபு விரும்பினார் என்றும், கடவுள் மீது அசைக்க முடியாத பக்தியும், இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்துடன், அனைவரையும் சமத்துவம் என்னும் நூலால் இணைக்கும் முயற்சியும் கொண்டிருந்தார் என்றும் குடியரசு தலைவர் கூறினார்.

பக்தி மார்க்கத்தில் ஈடுபட்ட துறவிகள் தங்கள் காலங்களில் நிலவிய மத, சாதி,பாலினம் உள்ளிட்ட பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்களாகத்  திகழ்ந்தனர். அதனால்தான் எல்லா வகுப்பையும் சேர்ந்த மக்கள் அவர்களது பாதையில் பயணித்தனர். குருநானக் தேவ் பக்தி மார்க்கத்ததில் ஈடுப்பட்டவாறே, அத்தகைய சமத்துவமான சமுதாயத்தை கட்டமைக்க முயன்றார்.

கடவுள் மீது முழு ஈடுபாடு என்னும் பக்தி மார்க்க சிறப்பியல்பு, அன்றாட வாழ்விலும் காணப்படுவதுண்டு என்று குடியரசு தலைவர் தெரிவித்தார். தேவை உள்ளவர்களுக்கு சேவை செய்வது நமது கலாச்சாரத்தில் உயர் முன்னுரிமையாகக்  கருதப்படுகிறது. கொவிட் பெருந்தொற்று காலத்தில், நமது மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் இத்தகைய சேவையை வெளிப்படுத்தினர். அவர்களில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதிலும், தங்களது தைரியத்தை இழக்காமல், மக்களுக்குச்  சிகிச்சை அளிப்பதில் ஈடுபட்டனர். கொரோனா வீர்ர்கள் பலர் தங்கள் உயிரைத் துறந்தாலும், அவர்களது சகாக்கள் அர்ப்பணிப்பு உணர்வைக் கைவிடாமல் மக்களது உயிர்களைப்  பாதுகாத்தனர். அத்தகையவர்களுக்கு நாடு பெரும் நன்றிக்கடன் பட்டுள்ளது.

ஶ்ரீசைதன்ய மகாபிரபு தவிர பக்தி மார்க்கத்தில் ஈடுபட்ட மேலும் பலரும் நமது பன்முக கலாச்சாரத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தியுள்ளதாக குடியரசு தலைவர் கூறினார்.  பக்தி மார்க்க துறவிகள் மற்றவர்களுடன் முரண்பட்டதில்லை. மற்றவர்களின் போதனைகளுக்கு மதிப்பளித்தனர். 1893-ல் சிகாகோவில் உலக சமுதாயத்தினருக்கு இந்தியாவின் ஆன்மீகச்  செய்தியை தெரிவித்தபோது சுவாமி விவேகானந்தர், பல்வேறு இடங்களில் உற்பத்தியாகும் ஆறுகள் கடைசியில் கடலில் கலப்பதைப்போல, மனிதர்களும் பல்வேறு பாதைகளை தேர்வு செய்துள்ளனர். இந்தப்பாதைகள் வேறுபட்டதாக தோன்றலாம், ஆனால் கடைசியில் அவை அனைத்தும் கடவுளையே அடைகின்றன என்று கூறினார். இந்தியாவின் இந்த ஆன்மீக ஒற்றுமையை ராமகிருஷ்ண பரமஹம்சரும், சுவாமி விவேகானந்தரும் போதித்தனர். இதை தேசப்பிதா மகாத்மா காந்தியும் பின்பற்றினார்.

மனிதகுலத்தின்  நலனை முக்கிய நோக்கமாக கொண்ட கவுடிய மிஷன், ஶ்ரீசைதன்ய மகாபிரபுவின் போதனைகளை உலகுக்கு பரப்பும் தீர்மானத்தில் வெற்றியடையும் என, குடியரசுத்  தலைவர்  நம்பிக்கை வெளியிட்டார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...