முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனிதகுலம் முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதி அனைவரின் நலனுக்காகவும் பாடுபடும் ஒற்றை நம்பிக்கை மட்டுமே நிலவுகிறது; குடியரசு தலைவர்

 பல்வேறு மத பாரம்பரியங்கள் மற்றும் நடைமுறைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளன, ஆனால் மனிதகுலம் முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதி அனைவரின் நலனுக்காகவும் பாடுபடும் ஒற்றை நம்பிக்கை மட்டுமே நிலவுகிறது; குடியரசு தலைவர் கோவிந்த்.


பல்வேறு  மத பாரம்பரியங்கள் மற்றும் நடைமுறைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளன, ஆனால் மனிதகுலம் முழுவதையும் ஒரே குடும்பமாகக்  கருதி அனைவரின் நலனுக்காகவும் பாடுபடும் ஒற்றை நம்பிக்கை மட்டுமே நிலவுகிறது என்று  குடியரசு தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். ஒடிசா மாநிலம் பூரியில், கவுடிய மதத்தை நிறுவிய ஶ்ரீமத் பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி பிரபுபாத்-ன் 150-வது பிறந்த நாளின் மூன்றாண்டு காலக்  கொண்டாட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

கடவுள் பல்வேறு வடிவங்களில் வழிபடப்படுகிறார். ஆனால், பக்தி பாவத்தோடு கடவுளை வழிபடும் பாரம்பரியத்துக்கு  இந்தியாவில் முக்கியத்துவம் உண்டு. இங்கு, பல பெரும் துறவிகள் தன்னலமற்ற வழிபாட்டை நடத்தி வந்துள்ளனர். அத்தகைய பெரும் துறவிகளிலும், ஶ்ரீ சைதன்ய மகாபிரபுவுக்கு என ஒரு தனி இடம் உண்டு. அவரது அசாதாரணமான பக்தியால் ஈர்க்கப்பட்டு, ஏராளமான மக்கள் பக்தி மார்க்கத்தை தேர்ந்தெடுத்துள்ளதாக குடியரசு தலைவர் கூறினார்.

மக்கள் தங்களைப்  புல்லை விட சிறிதாக கருதிக்  கடவுளை மிகவும்  பணிவுடன் வழிபட வேண்டும் என்று ஶ்ரீசைதன்ய மகாபிரபு அடிக்கடி கூறியதை குடியரசு தலைவர் நினைவு கூர்ந்தார். மரத்தை விட அதிக சகிப்புத் தன்மையுடனும், தற்பெருமையைக்கைவிட்டு, மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பவர்களாக மனிதர்கள் இருக்க வேண்டும் என்று ஶ்ரீசைதன்ய மகாபிரபு விரும்பினார் என்றும், கடவுள் மீது அசைக்க முடியாத பக்தியும், இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்துடன், அனைவரையும் சமத்துவம் என்னும் நூலால் இணைக்கும் முயற்சியும் கொண்டிருந்தார் என்றும் குடியரசு தலைவர் கூறினார்.

பக்தி மார்க்கத்தில் ஈடுபட்ட துறவிகள் தங்கள் காலங்களில் நிலவிய மத, சாதி,பாலினம் உள்ளிட்ட பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்களாகத்  திகழ்ந்தனர். அதனால்தான் எல்லா வகுப்பையும் சேர்ந்த மக்கள் அவர்களது பாதையில் பயணித்தனர். குருநானக் தேவ் பக்தி மார்க்கத்ததில் ஈடுப்பட்டவாறே, அத்தகைய சமத்துவமான சமுதாயத்தை கட்டமைக்க முயன்றார்.

கடவுள் மீது முழு ஈடுபாடு என்னும் பக்தி மார்க்க சிறப்பியல்பு, அன்றாட வாழ்விலும் காணப்படுவதுண்டு என்று குடியரசு தலைவர் தெரிவித்தார். தேவை உள்ளவர்களுக்கு சேவை செய்வது நமது கலாச்சாரத்தில் உயர் முன்னுரிமையாகக்  கருதப்படுகிறது. கொவிட் பெருந்தொற்று காலத்தில், நமது மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் இத்தகைய சேவையை வெளிப்படுத்தினர். அவர்களில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதிலும், தங்களது தைரியத்தை இழக்காமல், மக்களுக்குச்  சிகிச்சை அளிப்பதில் ஈடுபட்டனர். கொரோனா வீர்ர்கள் பலர் தங்கள் உயிரைத் துறந்தாலும், அவர்களது சகாக்கள் அர்ப்பணிப்பு உணர்வைக் கைவிடாமல் மக்களது உயிர்களைப்  பாதுகாத்தனர். அத்தகையவர்களுக்கு நாடு பெரும் நன்றிக்கடன் பட்டுள்ளது.

ஶ்ரீசைதன்ய மகாபிரபு தவிர பக்தி மார்க்கத்தில் ஈடுபட்ட மேலும் பலரும் நமது பன்முக கலாச்சாரத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தியுள்ளதாக குடியரசு தலைவர் கூறினார்.  பக்தி மார்க்க துறவிகள் மற்றவர்களுடன் முரண்பட்டதில்லை. மற்றவர்களின் போதனைகளுக்கு மதிப்பளித்தனர். 1893-ல் சிகாகோவில் உலக சமுதாயத்தினருக்கு இந்தியாவின் ஆன்மீகச்  செய்தியை தெரிவித்தபோது சுவாமி விவேகானந்தர், பல்வேறு இடங்களில் உற்பத்தியாகும் ஆறுகள் கடைசியில் கடலில் கலப்பதைப்போல, மனிதர்களும் பல்வேறு பாதைகளை தேர்வு செய்துள்ளனர். இந்தப்பாதைகள் வேறுபட்டதாக தோன்றலாம், ஆனால் கடைசியில் அவை அனைத்தும் கடவுளையே அடைகின்றன என்று கூறினார். இந்தியாவின் இந்த ஆன்மீக ஒற்றுமையை ராமகிருஷ்ண பரமஹம்சரும், சுவாமி விவேகானந்தரும் போதித்தனர். இதை தேசப்பிதா மகாத்மா காந்தியும் பின்பற்றினார்.

மனிதகுலத்தின்  நலனை முக்கிய நோக்கமாக கொண்ட கவுடிய மிஷன், ஶ்ரீசைதன்ய மகாபிரபுவின் போதனைகளை உலகுக்கு பரப்பும் தீர்மானத்தில் வெற்றியடையும் என, குடியரசுத்  தலைவர்  நம்பிக்கை வெளியிட்டார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த