குவஹாத்தியில் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மத்திய அறங்காவலர் குழுவின் 230-வது கூட்டம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மத்திய அறங்காவலர் குழுவின் 230-வது கூட்டம், குவஹாத்தியில் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமையில் நடைபெற்றது
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மத்திய அறங்காவலர் குழுவின் 230-வது கூட்டம், குவஹாத்தியில் இன்று மத்திய தொழிலாளர் & வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழல், வனம் & பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் தலைமையில் நடைபெற்றது.
வாரியத்தின் துணைத் தலைவரான தொழிலாளர் & வேலைவாய்ப்பு இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தேலி, துறையின் செயலாளர் திரு சுனில் பர்த்வால், வைப்பு நிதி அறக்காவலர் குழுவின் உறுப்பினர் – செயலாளர் திருமதி நீலம் ஷாமினி ராவ், மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் வட்டி விகிதம் நிர்ணயம் தவிர, வைப்பு நிதி அலுவலகங்களில் விளையாட்டுத்துறை ஒதுக்கீடான 5% பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களை கொண்டு பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை வகுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் பங்கு முதலீடுகளை திரும்ப பெற்றதன் மூலம் பிப்ரவரி 2022-ல் கிடைத்த ரூ.5529.7 கோடியை 2021-22- ஆண்டுக்கான வருவாயில் சேர்க்கவும் அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்தது. அத்துடன் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை பணமாக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.7772.50 கோடி மதிப்புள்ள பங்குகளுக்கு தற்போது ரூ.8944.32 கோடி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள்