காவல்துறையில் உயர் பதவியான தலைமை இயக்குநர் பதவியாகும். அதற்கு கீழுள்ள ஏடிஜிபி அந்தஸ்த்தில் உள்ளவர்கள் காவல் ஆணையராக, அல்லது ஒரு துறையின் உயர்ந்தப்பட்ச அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள்.
தற்போதய நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபுவுடன் சேர்த்து 12 டிஜிபிக்கள் இருக்கின்றனர். சமீபத்தில் தான் தீயணைப்புத்துறையின் டிஜிபி கரன்சின்ஹா ஓய்வுப்பெற்றார். தற்போது 1991 ஆம் ஆண்டு பேட்ஜ் ஏடிஜிபிக்களாக உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் நான்கு பேர் டிஜிபி பதவி உயர்வுக்காக காத்திருந்த நிலையில் அவர்களுக்கு டிஜிபி பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் இந்திய காவல் பணி அதிகாரிகள் ஏ.எஸ்.பியாக பதவியில் சேர்ந்து எஸ்.பி, டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி, டிஜிபி என 5 கூட்டமாகப் பதவி உயர்வை பெருகிறார்கள். இதில் டிஜிபி பதவியை மட்டும் மாநில அரசு நேரடியாக வழங்க முடியாது. பரிந்துரை செய்தால் அது யுபிஎஸ்சியால் அங்கிகரிக்கப்பட்ட பின்னரே அவர்களுக்கான பணியிடம் வழங்க முடியும். இந்த டிஜிபிக்களில் ஒருவரே காவல்துறையின் ஒட்டுமொத்த தலைவராக (HOPF)ஆகப் பொறுப்பேற்பார். தர்போது சைலேந்திரபாபு உள்ளார்.தற்போது ஏடிஜிபிக்களாக உள்ள நான்கு பேர் டிஜிபிக்களாக பதவி உயர்வு
அளிக்கப்பட்டுள்ள அனைவரும் 1991 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகளாவர். பதவி உயர்வும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறையும் வருமாறு :-.
தமிழ்நாடு சைபர் பிரிவு ஏடிஜிபியாக பதவி வகிக்கும் அம்ரேஷ் புஜாரி ஒடிசாவை பூர்வீகமாகக் கொண்டவர். (2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெறுகிறார்). இவர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று சைபர் கிரைம் பிரிவிலேயே டிஜிபியாகத் தொடர்கிறார். சைபர் கிரைம் பிரிவு டிஜிபி அந்தஸ்த்துக்கு நிலை உயர்த்தப்படுகிறது.
எம்.ரவி (ஏடிஜிபி அந்தஸ்த்தில் உள்ளார், தற்போது தாம்பரம் காவல் ஆணையராக உள்ளார்) 2022 மே மாதம் ஓய்வு பெறுகிறார். இவர் தற்போது டிஜிபியாக பதவி உயர்வு பெற்று தாம்பரம் காவல் ஆணையராகத் தொடர்கிறார். அதற்கு ஏற்ப தம்பரம் காவல் ஆணையரகம் டிஜிபி அந்தஸ்த்துக்கு நிலை உயர்த்தப்படுகிறது.
ஜெயந்த் முரளி (சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக உள்ளார்) 2022 டிசம்பர் மாதம் ஓய்வு பெறுகிறார். இவர் தற்போது டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு டிஜிபியாகத் தொடர்கிறார். இதற்காக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு டிஜிபி அந்தஸ்த்துக்கு நிலை உயர்த்தப்படுகிறது.
கருணாசாகர் (அயல்பணியில் டெல்லியில் பணியாற்றுகிறார்) 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெறுகிறார். தற்போது டிஜிபியாக பதவி உயர்வு பெற்று அயல்பணியில் தொடர்கிறார். தற்போதுள்ள டிஜிபிக்களும், அவர்கள் ஐபிஎஸ் பணியில் இணைந்த ஆண்டும், தற்போதுள்ள பதவியும், ஓய்வு தேதியும் வருமாறு.
1987 பேட்ச் அதிகாரிகள்:
சைலேந்திர பாபு - தற்போதைய காவல் துறையின் தலைவராக (HOPF) 1987 பேட்ச்- ஜூன் 2024-ல் ஓய்வு.
1988 பேட்ச் அதிகாரிகள்:
சஞ்சய் அரோரா - டெல்லி (இந்தோ-திபெத்தியன் எல்லை பாதுகாப்புப் படை) அயல்பணியில் உள்ளார். (1988 பேட்ச்) ஜூலை 2025-ல் ஓய்வு.
சுனில்குமார் சிங் - சிறைத்துறை டிஜிபி (1988 பேட்ச்) 2022 அக்டோபரில் ஓய்வு.
1989 பேட்ச் அதிகாரிகள். கந்தசாமி - லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி (1989- பேட்ச்) - 2023 ஏப்ரல் மாதம் ஒய்வு.
ஷகீல் அக்தர் - சிபிசிஐடி டிஜிபி (1989 பேட்ச்) - 2022 அக்டோபரில் ஓய்வு .
ராஜேஷ் தாஸ் - (1989 பேட்ச்) பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் - 2023- ஆம் ஆண்டு டிசம்பரில் ஓய்வு. பிரஜ் கிஷோர் (பி.கே.ரவி) - டிஜிபி தீயணைப்புத்துறை (1989 பேட்ச்)- 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் ஓய்வு.
1990 பேட்ச் அதிகாரிகள்.
சங்கர் ஜிவால் ( சென்னை காவல் ஆணையர்). உத்தரகாண்டைச் சேர்ந்தவர். 2023 ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஓய்வு.
ஏ.கே.விஸ்வநாதன் (டிஜிபி, காவலர் வீட்டு வசதி வாரியம்) தமிழகத்தைச் சேர்ந்தவர். 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு.
ஆபாஷ்குமார் (டிஜிபி - உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு ) பிஹாரைச் சேர்ந்தவர். 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெறுகிறார்.
டி.வி. ரவிச்சந்திரன் (டிஜிபி. மத்திய உளவுத்துறை, ஐபி. சென்னை ) ஆந்திராவைச் சேர்ந்தவர். 2024 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஓய்வு பெறுகிறார்
சீமா அகர்வால் (டிஜிபி தலைமையிடம் சென்னை ) ராஜஸ்தானைச் சேர்ந்தவர். 2026 ஜூன் மாதம் ஓய்வு.தற்போதுள்ள டிஜிபிக்களும், அவர்கள் ஐபிஎஸ் பணியில் இணைந்த ஆண்டும், தற்போதுள்ள பதவியும், ஓய்வு தேதியும் வருமாறு.
1987 பேட்ச் அதிகாரிகள்: சைலேந்திர பாபு - தற்போதைய காவல் துறையின் தலைவராக (HOPF) 1987 பேட்ச்- ஜூன் 2024 ஆம் ஆண்டு ஓய்வு.
1988 பேட்ச் அதிகாரிகள்: சஞ்சய் அரோரா - டெல்லி (இந்தோ-திபெத்தியன் எல்லை பாதுகாப்புப் படை) அயல்பணியில் உள்ளார். (1988 பேட்ச்) ஜூலை 2025-ஆம் ஆண்டில் ஓய்வு.
சுனில்குமார் சிங் - சிறைத்துறை டிஜிபி (1988 பேட்ச்) 2022 ஆம் ஆண்டு அக்டோபரில் ஓய்வு.
1989 பேட்ச் அதிகாரிகள்
கந்தசாமி - லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி (1989- பேட்ச்) - 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒய்வு.
ஷகீல் அக்தர் - சிபிசிஐடி டிஜிபி (1989 பேட்ச்) - 2022 ஆம் ஆண்டு அக்டோபரில் ஓய்வு .
ராஜேஷ் தாஸ் - (1989 பேட்ச்) பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் - 2023- ஆம் ஆண்டு டிசம்பரில் ஓய்வு. பிரஜ் கிஷோர் ரவி (பி.கே.ரவி) - டிஜிபி தீயணைப்புத்துறை (1989 பேட்ச்)- 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் ஓய்வு.
1990 பேட்ச் அதிகாரிகள். சங்கர் ஜிவால் ( சென்னை காவல் ஆணையர்). உத்தரகாண்டைச் சேர்ந்தவர். 2023 ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஓய்வு.
ஏ.கே.விஸ்வநாதன் (டிஜிபி, காவலர் வீட்டு வசதி வாரியம்) தமிழகத்தைச் சேர்ந்தவர். 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு.
ஆபாஷ்குமார் (டிஜிபி - உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு ) பிஹாரைச் சேர்ந்தவர். 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு.
டி.வி. ரவிச்சந்திரன் (டிஜிபி. மத்திய உளவுத்துறை, ஐபி. சென்னை ) ஆந்திராவைச் சேர்ந்தவர். 2024 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஓய்வு.
சீமா அகர்வால் (டிஜிபி தலைமையிடம் சென்னை ) ராஜஸ்தானைச் சேர்ந்தவர். 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெறுகிறார்.
கருத்துகள்