உ.பி.யைச் சேர்ந்த வில்வித்தை வீரர் நீரஜ் சவுகான் ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய குழுவில் இடம் பெற்றார்
விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் நிதியுதவி பெற்று ஓராண்டுக்குப்பின், ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய குழுவில் இடம் பெற்றார் உ.பி.யைச் சேர்ந்த வில்வித்தை வீரர் நீரஜ் சவுகான்
விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் தேசிய நல நிதியில் இருந்து நிதியுதவி பெற்று சுமார் ஒன்றை ஆண்டுகளுக்குப் பின்பு, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த வில்வித்தை வீரர் நீரஜ் சவுகான், ஆசிய விளையாட்டுகளுக்கான இந்திய குழுவில் இடம் பிடித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வில்வித்தை வீரர் நீரஜ் சவுகானின் தந்தை கடந்த 2020ம் ஆண்டு கோவிட் முடக்க காலத்தில் வேலை இழந்தார். இதனால் நீரஜ் மற்றும் அவரது குடும்பம் காய்கறி விற்று வாழ்க்கை நடத்தும் நிலைக்கு சென்றது. இவரது நிலையை, இந்திய வில்வித்தை சங்கம், விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்து உதவியை நாடியது. இதையடுத்து நீரஜ் மற்றும் அவரது சகோதரரும் குத்துச்சண்டை வீரருமான சுனில் ஆகியோருக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பண்டித் தீனதயாள் உபாத்யாய் தேசிய நலநிதி திட்டத்தின் கீழ் தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்தது.
இதையடுத்து, மீண்டும் வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்டார் நீரஜ். தற்போது ஆசிய விளையாட்டில் பங்கேற்கும் இந்திய அணிக்கான தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று இடம் பிடித்துள்ளார். மத்திய அரசு சரியான நேரத்தில் அளித்த நிதியதவி தனக்கும், தனது குடும்பத்துக்கும் உதவியாக இருந்தது , இதனால் தான் பயிற்சிக்கு மீண்டும் திரும்பவும், எதிர்கால போட்டியில் பங்கேற்க முடிந்தது’’ என்று நீரஜ் சவுகான் கூறியுள்ளார்.
கருத்துகள்