இமாலய சாமியாரென இமாலயப் பொய்.! சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்த சிபிஐ..
முன் ஜாமீன் தள்ளுபடியானதைத் தொடர்ந்து டில்லியில் சித்ரா ராமகிருஷ்ணாவைக் சிபிஐ கைது செய்தது. தேசிய பங்கு சந்தை நிர்வாக இயக்குனராக 2013 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணன் பணியாற்றினார். அப்போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றம் சாட்டியது. முன் அனுபவமில்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பரை, தலைமை வியூக அதிகாரியாக நியமித்ததுடன், அவருக்கு பிற சலுகைகளை வழங்கியதாக குற்றச்சாட்டும் தெரிவிக்கப்பட்டது.
தேசிய பங்கு சந்தையின் நிதி மற்றும் வணிக திட்டங்கள், ஈவுத்தொகை காட்சிகள் மற்றும் நிதி முடிவுகள் உள்ளிட்ட சில உள் ரகசியத் தகவல்களை தன்னை வழி நடத்தும் இமயமலையில் உள்ள ஒரு யோகியுடன், சித்ரா ராமகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டதாகவும், பரிமாற்றத்தின் ஊழியர்களின் செயல்திறன் மதிப்பீடுகள் குறித்தும் அவரிடம் கலந்தாலோசித்ததாகவும் கூறப்பட்டது தொடர்பாகவும் விசாரணை நடந்தது.
தொடர்ந்து தேசிய பங்கு சந்தை விவரங்களை கசியவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக முன்னாள் தலைமை செயலதிகாரிகளான சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் ரவி நரேன் மற்றும் அவரது சகோதரர் ஆனந்த் சுப்பிரமணியம் ஆகியோருக்கு எதிராக மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி லுக் அவுட் நோட்டீஸ் கடவுச்சீட்டு முடக்கம் செய்ய அனுப்பியது. லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் மூவரில் யாரும் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்பதை உறுதி செய்வதற்காக எல்.ஓ.சி. பிறப்பிக்கப்பட்ட நிலையில்
மும்பையில் விசாரணை நடத்தத் தொடங்கிய சி.பி.ஐ. , இமயமலை யோகி, சித்ரா ராமகிருஷ்ணன் இடையேயான பல்வேறு மின்னஞ்சல்களை ஆய்வு செய்த நிலையில். தொடர்ச்சியாக, தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் அதன் முன்னாள் மேலாண் இயக்குனரான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆலோசகராகவும், முன்னாள் செயலாக்க அதிகாரியாகவும் செயல்பட்டு வந்தவர் என கூறப்படும் ஆனந்த் சுப்பிரமணியம் உள்ள இடம் அதிகாரிகளுக்கு தெரிய வரவே. அவரை, சி.பி.ஐ. அதிகாரிகள் பிப்ரவரி 25 ஆம் தேதி சென்னையில் கைது செய்தனர்.
அதனால் சித்ரா ராமகிருஷ்ணன் முன்ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சித்ரா ராமகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டார்.
கருத்துகள்