முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பூதலூர் களிமேடு அப்பர் குருபூஜை சப்பரம் மின் விபத்தில் 11 நபர்கள் பலி பலர் படுகாயம் பிரதமர், முதல்வர் இரங்கல்

தஞ்சாவூர்  களிமேடு பகுதியில் நேற்று 94 வது திருநாவுக்கரசரான  அப்பர் குருபூஜை நடந்தது இரவு சப்பரம் மூலம் சுவாமி தெருவீதி உலா விமர்சையாக நடந்தத போது பொது மக்கள் சப்பரத்தை  வடம் பிடித்து இழுத்தனர்.


அப்போது மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பி தேரின் மீது உரசியதால் தேர் மீதிருந்த இரும்பு கம்பி மீது மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட பத்து நபர்கள் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயமடைந்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில்  மேலும் இருவர் உயிரிழந்ததால் பலியான நபர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.ஏழாம் நூற்றாண்டில் சமயக் குரவர்களில் ஒருவர் திருநாவுக்கரசர். பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார். அவரை திருஞானசம்பந்தர் அப்பர் என அழைத்ததால் அப்பர் என்றும் நாவுக்கரசர் என்றும் அழைக்கப்படுகிறார்.

இவர் ஒரு முறை சோழநாட்டில்  தற்போது  மாவட்டம் களிமேட்டில்  தங்கி ஓய்வெடுத்ததையடுத்து அந்த இடத்தில் அப்பருக்கு கோயில் கட்டப்பட்டது அது அப்பூதியடிகள் என்ற சிவ பக்தர் காலத்தில்  கட்டப்பட்டு ஆண்டுதோறும் அப்பர் குருபூஜை நிகழ்த்தப்படுகிறது.




மக்கள் சார்பில் 93 ஆண்டுகளாக களிமேட்டில் அப்பர் குருபூஜை நடந்து வந்த நிலையில் 94 ஆவது குருபூஜை விழா நேற்று. சப்பர உலா  தேரோட்டத்துடன் தொடங்கியது. தேர்  சப்பரத்தில் சுவாமி சிலை வைக்கப்பட்டு அதற்கு நிறைய மின் விளக்குகளை பொருத்தி அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. மின் வயரிங் உயரமான மின் கம்பிகள் மூலம் ஏற்படுத்தப்பட்டது. அந்தச் சப்பரத்தை

(தேரை) பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது மேலே சென்ற உயர் அழுத்தம் கொண்ட மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. தேர் செல்லும் இடங்களில் இருந்த உயர் மின்னழுத்தக் கம்பியை ஒதுக்கி விட்டுக் கொண்டே வந்த  நிலையில் ஒரு இடத்தில் திரும்பும் போது தேர் பாரம் தாளாமல் தேர் பின்னோக்கி சரிவு காரணமாக இழுக்கப்பட்டு திடீரென உயர் அழுத்தம் கொண்ட மின் கம்பியில் உரசியது.



இதனால் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் குறித்து அங்கிருந்த பொதுமக்கள் தகவல் படி "தேர் ஊர்வலமாக தெருக்களுக்கு வந்தது. அப்போது ஒரு இடத்தில் தெரு முற்றத்தில் தேரை திருப்பும் முயற்சி நடந்தது. அந்த சமயத்தில் தேரில் இருந்தவர்கள், வடம் பிடித்து இழுத்தவர்கள் எல்லாம் தூக்கி வீசப்பட்டதைப் பார்த்து மற்றவர்கள் பதறி போய் ஓட தொடங்கினர். ஆனால் அதற்குள் யாரோ மின்சாரம் பாய்ந்துவிட்டது. தேருக்கு அருகே போக வேண்டாம் என்றனர். இதனால் பலர் அப்படியே நின்றுவிட்டனர். இல்லாவிட்டால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டவுடன் பலர் துடிதுடித்து இறந்த நிலையில்

லருக்கு கை, கால்கள் துண்டிக்கப்பட்டன. தூக்கி அடிக்கப்பட்டவர்கள் அலறினர். தேரில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்குகள் ஒவ்வொன்றாக வெடித்து சிதறியது. இதனால் சப்பரம் முற்றிலும் எரிந்தது. தீயணைப்புத் துறையினர் வரும் வரை தேரினருகே கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 94 ஆண்டுகளில் இதுதான் முதல் முறை இது போன்ற விபத்து இந்த விழாவில் நடந்துள்ளது. திருவிழாவுக்காக பலர் சொந்த ஊர்களுக்கு மகிழ்ச்சியாக வந்தனர். வந்த இடத்தில் இப்படி ஒரு கோரச் சம்பவம் நடந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதென" விபத்தை நேரில் பார்த்தவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.


தஞ்சாவூர் களிமேடு சப்பரத் திருவிழா விபத்தில் உயிரிழந்தோருக்கு தமிழக சட்டப் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு இரண்டு நிமிடம் எழுந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. விபத்து குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கமளித்துப் பேசிய போது, தஞ்சாவூர் களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.

விபத்தில் 16 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் நான் உத்தரவிட்டுளேன். களிமேடு தேர்த் திருவிழா விபத்து தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்த, தஞ்சை மாவட்டப் பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.


விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரடியாக சென்று, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல இருக்கிறேன் எனத் தெரிவித்தார். தற்போது விபத்து நடந்த தஞ்சாவூர் களிமேடு கிராமத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்கிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிராப்பள்ளி சென்று அங்கிருந்து காரில் தஞ்சாவூர் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவிக்க உள்ளார். அத்துடன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிக்கவுள்ளார். விபத்து காரணமாக உயிரிழந்தோருக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார் பலியானோரின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு  பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகையை திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.  


தொடர்ச்சியான டுவிட்டர் பதிவுகளில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது;

“தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் ஏற்பட்ட விபத்தால் மிகுந்த துயரம் அடைந்துள்ளேன். சோகமான இந்த தருணத்தில் உறவினர்களை இழந்த குடும்பங்கள் மீது எனது சிந்தனை உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நான் நம்புகிறேன்: பிரதமர்”


“தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு  பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்: பிரதமர்”    தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில்  ஏற்பட்ட மின் விபத்தில் மின்சாரம் தாக்கி தந்தை,மகன் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.



இதில்  வடக்குத் தெருவில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.உடற் கூறாய்வு செய்யப்பட்டு வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடல்களுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியியுள்ளது.சப்பரத்தை கோவில் விழாக்களில் பூரணி மாடுகள் தான் இழுக்கும் தேர்களில் மட்டுமே வடம் இருக்கும் ஆனால் இங்கு சப்பரம் தேர் போல அலங்காரம் செய்வதாக மின் அலங்காரம் செய்து விழா நடைபெற்றது தான் இந்த விபத்துக்கு காரணம் என்பது உண்மை. தஞ்சாவூர் விபத்து குறித்து மத்திய இணையமைச்சர் திரு எல் முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி



தஞ்சாவூர் அருகே நடந்த தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;

“தஞ்சை மாவட்டம் பூதலூர் சாலை அருகே களிமேடு அப்பர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்தின் போது எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் தேர் உரசியதால், மின்சாரம் பாய்ந்து இரு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தது மிகவும் மனவேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களின் ஆன்மா சாந்தியடையவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் நலமுடன் திரும்பவும் இறைவனை பிராத்திக்கிறேன். ஓம் சாந்தி”.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...