முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பூதலூர் களிமேடு அப்பர் குருபூஜை சப்பரம் மின் விபத்தில் 11 நபர்கள் பலி பலர் படுகாயம் பிரதமர், முதல்வர் இரங்கல்

தஞ்சாவூர்  களிமேடு பகுதியில் நேற்று 94 வது திருநாவுக்கரசரான  அப்பர் குருபூஜை நடந்தது இரவு சப்பரம் மூலம் சுவாமி தெருவீதி உலா விமர்சையாக நடந்தத போது பொது மக்கள் சப்பரத்தை  வடம் பிடித்து இழுத்தனர்.


அப்போது மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பி தேரின் மீது உரசியதால் தேர் மீதிருந்த இரும்பு கம்பி மீது மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட பத்து நபர்கள் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயமடைந்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில்  மேலும் இருவர் உயிரிழந்ததால் பலியான நபர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.ஏழாம் நூற்றாண்டில் சமயக் குரவர்களில் ஒருவர் திருநாவுக்கரசர். பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார். அவரை திருஞானசம்பந்தர் அப்பர் என அழைத்ததால் அப்பர் என்றும் நாவுக்கரசர் என்றும் அழைக்கப்படுகிறார்.

இவர் ஒரு முறை சோழநாட்டில்  தற்போது  மாவட்டம் களிமேட்டில்  தங்கி ஓய்வெடுத்ததையடுத்து அந்த இடத்தில் அப்பருக்கு கோயில் கட்டப்பட்டது அது அப்பூதியடிகள் என்ற சிவ பக்தர் காலத்தில்  கட்டப்பட்டு ஆண்டுதோறும் அப்பர் குருபூஜை நிகழ்த்தப்படுகிறது.




மக்கள் சார்பில் 93 ஆண்டுகளாக களிமேட்டில் அப்பர் குருபூஜை நடந்து வந்த நிலையில் 94 ஆவது குருபூஜை விழா நேற்று. சப்பர உலா  தேரோட்டத்துடன் தொடங்கியது. தேர்  சப்பரத்தில் சுவாமி சிலை வைக்கப்பட்டு அதற்கு நிறைய மின் விளக்குகளை பொருத்தி அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. மின் வயரிங் உயரமான மின் கம்பிகள் மூலம் ஏற்படுத்தப்பட்டது. அந்தச் சப்பரத்தை

(தேரை) பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது மேலே சென்ற உயர் அழுத்தம் கொண்ட மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. தேர் செல்லும் இடங்களில் இருந்த உயர் மின்னழுத்தக் கம்பியை ஒதுக்கி விட்டுக் கொண்டே வந்த  நிலையில் ஒரு இடத்தில் திரும்பும் போது தேர் பாரம் தாளாமல் தேர் பின்னோக்கி சரிவு காரணமாக இழுக்கப்பட்டு திடீரென உயர் அழுத்தம் கொண்ட மின் கம்பியில் உரசியது.



இதனால் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் குறித்து அங்கிருந்த பொதுமக்கள் தகவல் படி "தேர் ஊர்வலமாக தெருக்களுக்கு வந்தது. அப்போது ஒரு இடத்தில் தெரு முற்றத்தில் தேரை திருப்பும் முயற்சி நடந்தது. அந்த சமயத்தில் தேரில் இருந்தவர்கள், வடம் பிடித்து இழுத்தவர்கள் எல்லாம் தூக்கி வீசப்பட்டதைப் பார்த்து மற்றவர்கள் பதறி போய் ஓட தொடங்கினர். ஆனால் அதற்குள் யாரோ மின்சாரம் பாய்ந்துவிட்டது. தேருக்கு அருகே போக வேண்டாம் என்றனர். இதனால் பலர் அப்படியே நின்றுவிட்டனர். இல்லாவிட்டால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டவுடன் பலர் துடிதுடித்து இறந்த நிலையில்

லருக்கு கை, கால்கள் துண்டிக்கப்பட்டன. தூக்கி அடிக்கப்பட்டவர்கள் அலறினர். தேரில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்குகள் ஒவ்வொன்றாக வெடித்து சிதறியது. இதனால் சப்பரம் முற்றிலும் எரிந்தது. தீயணைப்புத் துறையினர் வரும் வரை தேரினருகே கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 94 ஆண்டுகளில் இதுதான் முதல் முறை இது போன்ற விபத்து இந்த விழாவில் நடந்துள்ளது. திருவிழாவுக்காக பலர் சொந்த ஊர்களுக்கு மகிழ்ச்சியாக வந்தனர். வந்த இடத்தில் இப்படி ஒரு கோரச் சம்பவம் நடந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதென" விபத்தை நேரில் பார்த்தவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.


தஞ்சாவூர் களிமேடு சப்பரத் திருவிழா விபத்தில் உயிரிழந்தோருக்கு தமிழக சட்டப் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு இரண்டு நிமிடம் எழுந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. விபத்து குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கமளித்துப் பேசிய போது, தஞ்சாவூர் களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.

விபத்தில் 16 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் நான் உத்தரவிட்டுளேன். களிமேடு தேர்த் திருவிழா விபத்து தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்த, தஞ்சை மாவட்டப் பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.


விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரடியாக சென்று, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல இருக்கிறேன் எனத் தெரிவித்தார். தற்போது விபத்து நடந்த தஞ்சாவூர் களிமேடு கிராமத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்கிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிராப்பள்ளி சென்று அங்கிருந்து காரில் தஞ்சாவூர் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவிக்க உள்ளார். அத்துடன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிக்கவுள்ளார். விபத்து காரணமாக உயிரிழந்தோருக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார் பலியானோரின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு  பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகையை திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.  


தொடர்ச்சியான டுவிட்டர் பதிவுகளில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது;

“தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் ஏற்பட்ட விபத்தால் மிகுந்த துயரம் அடைந்துள்ளேன். சோகமான இந்த தருணத்தில் உறவினர்களை இழந்த குடும்பங்கள் மீது எனது சிந்தனை உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நான் நம்புகிறேன்: பிரதமர்”


“தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு  பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்: பிரதமர்”    தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில்  ஏற்பட்ட மின் விபத்தில் மின்சாரம் தாக்கி தந்தை,மகன் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.



இதில்  வடக்குத் தெருவில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.உடற் கூறாய்வு செய்யப்பட்டு வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடல்களுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியியுள்ளது.சப்பரத்தை கோவில் விழாக்களில் பூரணி மாடுகள் தான் இழுக்கும் தேர்களில் மட்டுமே வடம் இருக்கும் ஆனால் இங்கு சப்பரம் தேர் போல அலங்காரம் செய்வதாக மின் அலங்காரம் செய்து விழா நடைபெற்றது தான் இந்த விபத்துக்கு காரணம் என்பது உண்மை. தஞ்சாவூர் விபத்து குறித்து மத்திய இணையமைச்சர் திரு எல் முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி



தஞ்சாவூர் அருகே நடந்த தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;

“தஞ்சை மாவட்டம் பூதலூர் சாலை அருகே களிமேடு அப்பர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்தின் போது எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் தேர் உரசியதால், மின்சாரம் பாய்ந்து இரு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தது மிகவும் மனவேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களின் ஆன்மா சாந்தியடையவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் நலமுடன் திரும்பவும் இறைவனை பிராத்திக்கிறேன். ஓம் சாந்தி”.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த