பூதலூர் களிமேடு அப்பர் குருபூஜை சப்பரம் மின் விபத்தில் 11 நபர்கள் பலி பலர் படுகாயம் பிரதமர், முதல்வர் இரங்கல்
தஞ்சாவூர் களிமேடு பகுதியில் நேற்று 94 வது திருநாவுக்கரசரான அப்பர் குருபூஜை நடந்தது இரவு சப்பரம் மூலம் சுவாமி தெருவீதி உலா விமர்சையாக நடந்தத போது பொது மக்கள் சப்பரத்தை வடம் பிடித்து இழுத்தனர்.
அப்போது மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பி தேரின் மீது உரசியதால் தேர் மீதிருந்த இரும்பு கம்பி மீது மின்சாரம் பாய்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட பத்து நபர்கள் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயமடைந்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் இருவர் உயிரிழந்ததால் பலியான நபர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.ஏழாம் நூற்றாண்டில் சமயக் குரவர்களில் ஒருவர் திருநாவுக்கரசர். பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார். அவரை திருஞானசம்பந்தர் அப்பர் என அழைத்ததால் அப்பர் என்றும் நாவுக்கரசர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இவர் ஒரு முறை சோழநாட்டில் தற்போது மாவட்டம் களிமேட்டில் தங்கி ஓய்வெடுத்ததையடுத்து அந்த இடத்தில் அப்பருக்கு கோயில் கட்டப்பட்டது அது அப்பூதியடிகள் என்ற சிவ பக்தர் காலத்தில் கட்டப்பட்டு ஆண்டுதோறும் அப்பர் குருபூஜை நிகழ்த்தப்படுகிறது.
மக்கள் சார்பில் 93 ஆண்டுகளாக களிமேட்டில் அப்பர் குருபூஜை நடந்து வந்த நிலையில் 94 ஆவது குருபூஜை விழா நேற்று. சப்பர உலா தேரோட்டத்துடன் தொடங்கியது. தேர் சப்பரத்தில் சுவாமி சிலை வைக்கப்பட்டு அதற்கு நிறைய மின் விளக்குகளை பொருத்தி அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. மின் வயரிங் உயரமான மின் கம்பிகள் மூலம் ஏற்படுத்தப்பட்டது. அந்தச் சப்பரத்தை
(தேரை) பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது மேலே சென்ற உயர் அழுத்தம் கொண்ட மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. தேர் செல்லும் இடங்களில் இருந்த உயர் மின்னழுத்தக் கம்பியை ஒதுக்கி விட்டுக் கொண்டே வந்த நிலையில் ஒரு இடத்தில் திரும்பும் போது தேர் பாரம் தாளாமல் தேர் பின்னோக்கி சரிவு காரணமாக இழுக்கப்பட்டு திடீரென உயர் அழுத்தம் கொண்ட மின் கம்பியில் உரசியது.
இதனால் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் குறித்து அங்கிருந்த பொதுமக்கள் தகவல் படி "தேர் ஊர்வலமாக தெருக்களுக்கு வந்தது. அப்போது ஒரு இடத்தில் தெரு முற்றத்தில் தேரை திருப்பும் முயற்சி நடந்தது. அந்த சமயத்தில் தேரில் இருந்தவர்கள், வடம் பிடித்து இழுத்தவர்கள் எல்லாம் தூக்கி வீசப்பட்டதைப் பார்த்து மற்றவர்கள் பதறி போய் ஓட தொடங்கினர். ஆனால் அதற்குள் யாரோ மின்சாரம் பாய்ந்துவிட்டது. தேருக்கு அருகே போக வேண்டாம் என்றனர். இதனால் பலர் அப்படியே நின்றுவிட்டனர். இல்லாவிட்டால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டவுடன் பலர் துடிதுடித்து இறந்த நிலையில்
லருக்கு கை, கால்கள் துண்டிக்கப்பட்டன. தூக்கி அடிக்கப்பட்டவர்கள் அலறினர். தேரில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்குகள் ஒவ்வொன்றாக வெடித்து சிதறியது. இதனால் சப்பரம் முற்றிலும் எரிந்தது. தீயணைப்புத் துறையினர் வரும் வரை தேரினருகே கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 94 ஆண்டுகளில் இதுதான் முதல் முறை இது போன்ற விபத்து இந்த விழாவில் நடந்துள்ளது. திருவிழாவுக்காக பலர் சொந்த ஊர்களுக்கு மகிழ்ச்சியாக வந்தனர். வந்த இடத்தில் இப்படி ஒரு கோரச் சம்பவம் நடந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதென" விபத்தை நேரில் பார்த்தவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
தஞ்சாவூர் களிமேடு சப்பரத் திருவிழா விபத்தில் உயிரிழந்தோருக்கு தமிழக சட்டப் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு இரண்டு நிமிடம் எழுந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. விபத்து குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கமளித்துப் பேசிய போது, தஞ்சாவூர் களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.
விபத்தில் 16 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் நான் உத்தரவிட்டுளேன். களிமேடு தேர்த் திருவிழா விபத்து தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்த, தஞ்சை மாவட்டப் பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.
விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரடியாக சென்று, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல இருக்கிறேன் எனத் தெரிவித்தார். தற்போது விபத்து நடந்த தஞ்சாவூர் களிமேடு கிராமத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்கிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிராப்பள்ளி சென்று அங்கிருந்து காரில் தஞ்சாவூர் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவிக்க உள்ளார். அத்துடன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிக்கவுள்ளார். விபத்து காரணமாக உயிரிழந்தோருக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார் பலியானோரின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகையை திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
தொடர்ச்சியான டுவிட்டர் பதிவுகளில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது;
“தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் ஏற்பட்ட விபத்தால் மிகுந்த துயரம் அடைந்துள்ளேன். சோகமான இந்த தருணத்தில் உறவினர்களை இழந்த குடும்பங்கள் மீது எனது சிந்தனை உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நான் நம்புகிறேன்: பிரதமர்”
“தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்: பிரதமர்” தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில் ஏற்பட்ட மின் விபத்தில் மின்சாரம் தாக்கி தந்தை,மகன் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
இதில் வடக்குத் தெருவில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.உடற் கூறாய்வு செய்யப்பட்டு வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடல்களுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியியுள்ளது.சப்பரத்தை கோவில் விழாக்களில் பூரணி மாடுகள் தான் இழுக்கும் தேர்களில் மட்டுமே வடம் இருக்கும் ஆனால் இங்கு சப்பரம் தேர் போல அலங்காரம் செய்வதாக மின் அலங்காரம் செய்து விழா நடைபெற்றது தான் இந்த விபத்துக்கு காரணம் என்பது உண்மை. தஞ்சாவூர் விபத்து குறித்து மத்திய இணையமைச்சர் திரு எல் முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
தஞ்சாவூர் அருகே நடந்த தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;
“தஞ்சை மாவட்டம் பூதலூர் சாலை அருகே களிமேடு அப்பர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டத்தின் போது எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் தேர் உரசியதால், மின்சாரம் பாய்ந்து இரு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தது மிகவும் மனவேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களின் ஆன்மா சாந்தியடையவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் நலமுடன் திரும்பவும் இறைவனை பிராத்திக்கிறேன். ஓம் சாந்தி”.
கருத்துகள்