சைத்ர சுக்லாதி, உகாதி, குடி பட்வா, சேட்டி சந்த், நவ்ரே, சஜிபு சேரோபா,நவராத்திரி ஆகிய விழாக்களையொட்டி குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் வாழ்த்து
சைத்ர சுக்லாதி, உகாதி, குடி பட்வா, சேட்டி சந்த், நவ்ரே, சஜிபு சேரோபா, நவராத்திரி
ஆகிய விழாக்களையொட்டி குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்
சைத்ர சுக்லாதி, உகாதி, குடி பட்வா, சேட்டி சந்த், நவ்ரே, சஜிபு சேரோபா ஆகிய விழாக்களையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“சைத்ர சுக்லாதி, உகாதி, குடி பட்வா, சேட்டி சந்த், நவ்ரே, சஜிபு சேரோபா ஆகிய புனிதமான விழாக்களையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்திய புத்தாண்டுகளின் தொடக்கத்தையும், வசந்த காலத்தையும் வரவேற்பது நாடு முழுவதும் பல்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாக்கள் நமது கலாச்சார மற்றும் சமூக ஒற்றுமையின் பிணைப்பை வலுப்படுத்துகிறது. உற்சாகமான விழாக்கள் நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்துகிறது.
இந்த விழாக்கள் அனைவரின் வாழ்க்கையில் அன்பையும், நல்லெண்ணத்தையும் வளர்க்கட்டும். இந்த புத்தாண்டில் புதிய ஆர்வத்துடன் தேசக்கட்டுமானத்திற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பங்களிப்பு செய்வோம்” என்று குடியரசுத் தலைவர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். சஜிபு சேரோபா நாளில் மணிப்பூர் மக்களுக்குப் பிரதமரின் வாழ்த்து
சஜிபு சேரோபா நாளில் அனைவருக்கும் குறிப்பாக மணிப்பூர் மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது-
“சஜிபு சேரோபா நாளில் அனைவருக்கும் குறிப்பாக மணிப்பூர் மக்களுக்கு வாழ்த்துக்கள். வரவிருக்கும் ஆண்டில் உங்களின் மகிழ்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் நான் பிரார்த்திக்கிறேன்”.மேலும் சேட்டி சந்த் நாளில் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து
சேட்டி சந்த் நாளில் மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது-
“அனைவருக்கும் சேட்டி சந்த் வாழ்த்துக்கள்.
பகவான் ஜூலேலாலின் பக்தி மிக்க போதனைகளை நாம் நினைவுகூர்ந்து நமது புவிக்கோடுக்கு மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்காக அவரது ஆசிகளைக் கோருவோம். மகத்தான ஆண்டு அருகே உள்ளது”.நவ்ரே நாளில் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
நவ்ரே நாளில் மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது-
“நவ்ரே நாளில் நல்வாழ்த்துக்கள்”.உகாதி நாளில் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
உகாதி நாளில் மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது-
“தனித்துவம் வாய்ந்த உகாதி நாளில் நல்வாழ்த்துக்கள்”.குடி பட்வா நாளில் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடி பட்வா நாளில் மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது-
“குடி பட்வா நாளில் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும் தருகின்ற ஆண்டுக்காக நான் பிரார்த்திக்கிறேன்.
வரும் ஆண்டில் உங்களின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறட்டும்.நவராத்திரியையொட்டிப் பிரதமர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
நவராத்திரியையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது
““நாட்டு மக்கள் அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள். இந்த சக்தி வழிபாட்டு விழா அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலை அளிக்கட்டும்."நவ் சம்வத்சரையொட்டி மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து
புனிதமான நவ் சம்வத்சரையொட்டி மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து விக்ரம் சம்வத் 2079 அனைவரின் வாழ்க்கையிலும் புதிய உற்சாகத்தையும் புதிய ஆர்வத்தையும் கொண்டுவரட்டும் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;"உங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான நவ் சம்வத்ஸர் வாழ்த்துக்கள். விக்ரம் சம்வத் 2079 ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புதிய உற்சாகத்தையும் புதிய ஆர்வத்தையும் கொண்டு வரட்டும்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்