முக அடையாளம் காணும் முறை படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெனரல் (டாக்டர்) வி கே சிங் (ஓய்வு) கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
விமான நிலையங்களில் பயணிகளுக்கு தடையற்ற மற்றும் தொந்தரவு இல்லாத அனுபவத்தை வழங்குவதற்காக அரசின் டிஜி யாத்ரா முயற்சியின் ஒரு பகுதியாக உள்ள முக அங்கீகார அமைப்பு படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது.
முதல் கட்டமாக கொல்கத்தா, வாரணாசி, புனே, விஜயவாடா, பெங்களூர், தில்லி மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் மார்ச் 2023-க்குள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமான நிலையங்களில் 'பயண தின' பதிவுடன் கூடிய டிஜி யாத்ரா பயோமெட்ரிக் போர்டிங் முறையின் முதற்கட்ட சோதனை முடிந்தது.
பாதுகாப்பின் தேவை, மாறும் தன்மை கொண்டது என்பதால், விமானப் பாதுகாப்புக்கான ஒழுங்குமுறை ஆணையமான சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (பி.சி.ஏ.எஸ்) அலுவலகம், தொடர்புடைய இதர முகமைகள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து, விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து, தேவைக்கேற்ப மேம்படுத்துகிறது.
கருத்துகள்