முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுபிட்ஷங்கள் நிறைந்தாண்டாக.தமிழ் வருடம் சுபகிருது அல்லது நற்செய்கை என்றாகிறது

 'பப்ளிக் ஜஸ்டிஸ்':இதழ் வாசகர்கள் இணையத்தில் வாசிப்பாளர்கள் வெளியீட்டுக்  குழுமத்தினர் மற்றும் சிறப்புச் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் விளம்பரதாரர்கள், மற்றும் தகவல் தரும் அன்பர்கள் உள்ளிட்ட அணைவருக்கும் தமிழ் புது வருடம் சுபகிருது வாழ்த்துக்கள்;-

கால அட்டவணை முறையில் அறுபதாண்டு வட்டம்  கொண்டது. அது பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில் நிறைவுற மீண்டும் அடுத்த பிரபவ ஆண்டு சுழற்சியாகிறது. சிலர் இவ்வாறு ஒரே வருடத்தின் பெயர்கள் திரும்பத் திரும்ப வருவதால் பிற்காலத்தில் பழைய நிகழ்வுகளைச் சரியாக நிர்ணயிப்பதில் குழப்பமேற்படுகிறதென்றும் கூறுகிறார்கள். ஆனால் இந்த ஆண்டுகளின் கால அளவைகள்  வானியல் விஞ்ஞானத்தை ஆதாரமாகக் கொண்டு கச்சிதமாகக் கணித்து வரையறுக்கப்பட்டவை. 

ஒவ்வொரு தமிழ் வருடமும் சூரியன் பனிரெண்டு ராசிகளில் சஞ்சரிக்கும் கால அளவேயாகும். சூரியன் முதல் இராசியான மேஷ இராசியில் பிரவேசிப்பதே புது வருடப்பிறப்பாகும். இவ்வாறு ஒவ்வொரு பனிரெண்டு இராசிகளிலும் ஒன்றன் பின் ஒன்றாக சூரியன் பிரவேசிக்கும் காலம் பன்னிரு தமிழ் மாதப்பிறப்பு அல்லது மாதத்தின் முதல் நாளாகும். இவ்வாறு சூரியன் மேஷம் முதல் மீனம் வரையுள்ள இராசிகளில் சஞ்சரிக்கும் காலம் ஒரு தமிழ் வருடமாகும்.  இது வானியல் விஞ்ஞான ரீதியாக 365 நாள் 6 மணித்தியாலம் 11 நிமிடம் 48 விநாடி எனக் கச்சிதமாகக் கணிக்கப்பட்ட ஒன்று. இதையே பஞ்சாங்க கணக்கில் 365 நாள் 15 நாழிகை 31 விநாடி 15 நொடி என்று கூறுவார்கள். இதையே வானியல் விஞ்ஞானத்தில் வானியல் வருடம் (Astronomical Year) என்று சொல்லுவார்கள். அதற்கான நடைமுறையில் பஞ்சாங்கம் படித்தல் நடக்கிறது அதை வைத்துத் தான் ஜாதகத்தில் கணிப்பு எனும் கணிதம்.

நாம் முன்னோர் தமிழ் வருடம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பெயர்களும் வைத்துள்ள நிலையில். இது முயல், வேதாளம், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய், பன்றி, எலி, காளை, புலி என்ற பன்னிரண்டு வருடங்களைக் கொண்ட சீனர்களின்  கால வட்டத்தைப் போன்றது. ஆனால் அதைவிட ஆழமான வானியல் விஞ்ஞான கணிப்பீடுகளை ஆதாரமாகவும், அடிப்படையாகவும் கொண்ட அறுபது வருடங்களைக்கொண்ட காலவட்டத்தின் வருடங்கள் தமிழ் வருடங்கள் என்றும் இந்த வருடங்களின் தொடக்கம் தமிழ் வருடப்பிறப்பு என்றும் வழங்கும் வழமையே நம் மரபு  பிரபவ முதல்  அட்சய வரை  உள்ளனவாம்.           

வருடங்களின் கணிப்பிலுள்ள சில பிழைகள்:-

நடப்பில் உள்ள ஆங்கில வருடம் 365 நாட்களை மட்டுமே கொண்டது. அது டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குப் பின் தொடங்கி அடுத்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நள்ளிரவு பன்னிரண்டு மணியுடன் முடிகின்றது. இதற்கு எந்தவிதமான வானியல் விஞ்ஞான ஆதாரமோ அடிப்படையோ இல்லை. 

365 நாட்களைக்கொண்ட இந்த ஆங்கில வருடக்கணக்கின்படி, வானியல் விஞ்ஞானரீதியாக உள்ள 365 நாட்கள் 6 மணித்தியாலங்கள் 43 விநாடிகள் கொண்ட வானியல் வருடத்தில் ஒவ்வொரு ஆண்டும் மேலதிகமாக 6 மணித்தியாலங்கள் மிகுதியாகும். இந்த ஆறு மணித்தியாலங்களை நான்கு ஆண்டுகளுக்குச் சேரவிட்டு நான்காம் ஆண்டில் ஒரு முழு நாளாகின்றது. இதை பிப்ரவரி மாதத்தில் ஒரு மேலதிக நாளாக இணைத்து விடுவார்கள். சாதாரணமாக 28 நாட்களை மட்டுமே கொண்ட பிப்ரவரி மாதம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 29 நாட்களைக் கொண்டிருக்கும். இதுவே லீப் வருடம்.

 இப்படியாக 365 நாட்கள் 6 மணித்தியாலங்கள் சரி செய்யப்பட்டாலும் இன்னமும் 11 நிமிடங்கள் 48 வினாடிகள் மிகுதியாகிறதே  அவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு நூற்றாண்டுக்கு ஒரு நாளைக்கூடுதலாகச் சேர்த்து சரிசெய்வார்கள். இப்படி சரிசெய்யும்பொது கொஞ்சம் அதிகமாக ஆகிவிடுகின்றது. இதற்காக நானூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளை நழுவவிட்டு விடுவார்கள். இவ்வாறு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு நாளையும் ஒவ்வொரு நூற்றாண்டுக்கு ஒரு நாளையும் கூட்டி நானூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளைக் கழிப்பதனால் தான் நமது தமிழ் மாதப்பிறப்புடன் கூடிய தைப்பொங்கல் சித்திரை வருடப்பிறப்பு என்பன 13, 14, 15, 16 ம் ஆங்கிலத் தேதிகளில் மாறி மாறி வருகின்றன. இது நமது குற்றமல்ல; நாம் பாவிக்கும்  நம்மை ஆட்சி செய்த ஆங்கில நடைமுறை வழமையில் உள்ள ஆங்கிலக் கலண்டர் வழி குற்றம்.

தமிழ் வருடங்களில் இந்த வம்பு தும்பெல்லாம் கிடையாது. சரியாக 365 நாள் 6 மணித்தியாலம் 11 நிமிடம் 48 வினாடி தான் கணக்கு. ஒவ்வொரு தமிழ் வருடமும் அதற்கு முந்திய வருடம் எந்த வாரத்தில் பிறந்ததோ அதற்கடுத்த வாரத்திலும், எந்த தேதியில் பிறந்ததோ அதற்கு பன்னிரண்டாவது தேயிலும், எந்த நட்சத்திரத்தில் பிறந்ததோ அதற்கு பதினோராவது நட்சத்திரத்திலும், எந்த நேரத்தில் பிறந்ததோ அதற்கு 6 மணித்தியாலம் 11 நிமிடம் 48 விநாடி (15 நாழிகை 31 விநாடி 15 நொடி) பின்னராகவும் பிறக்கின்றது.  உலக அளவில் சுமேரிய மக்களும் 60 வருடங்கள் கொண்ட முறையில் 12 மாதங்களையும் பயன்படுத்தியுள்ளனர்.அவர்களின் மாதங்களில் வாரங்களே கிடையாது. ஒரு நாளுக்கு 12 மணிநேரம் என்ற கணக்கும் அவர்களிடமிருந்தது.


அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த மாயன் நாகரிக மக்கள் ஒரே நேரத்தில்இரண்டு காலண்டர்களைக் கையாண்டுள்ளனர். புனிதமான சடங்குகளுக்காக 260 நாட்கள் கொண்ட ஒரு புனித நாட்காட்டியும் மற்ற விஷயங்களுக்காக 365 நாட்கள் கொண்ட ஒரு நாட்காட்டியும் வைத்துள்ளனர்.

அதில் 20 நாட்கள் கொண்ட 18 மாதங்களிருந்துள்ளன. மாயன் மக்களின் வாழ்வில் இந்த இரண்டு நாட்காட்டிகளும் ஒன்றின் மீது இன்னொன்று தொற்றிக்கொண்டு பயணம் செய்தன. (நம்ம ஊர் தமிழ் வழி பஞ்சாங்கத்தையும் ஆங்கில வழி காலண்டரையும் போல) அவையும் 60 ஆண்டுகள் சுழற்சி முறையைப் பயன்படுத்தியுள்ளன எனலாம்

சீன தேசத்திலும் இந்த 60 வருட சுழற்சி முறை இன்னமும் நடைமுறை புழக்கத்திலுள்ளது. நமது நாட்டில்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே, சூரியனை அடிப்படையாகக்கொண்ட 360 நாட்களும் 12 மாதங்களோடு ஒரு நாட்காட்டியும் கிருஷ்ணர் பிறப்பு மையமாக வைத்து ஒரு நாட்காட்டி எனவும் இருந்துள்ளதாக அறியலாம். ஆங்கில வருடம் 2015 என்பது கிருஷ்ண வருடம் 5117 ஆகும்.

தமிழ மரபினர் காலத்தைப் பெரும்பொழுது, சிறுபொழுது என இரண்டாகப்பிரித்தனர்.

ஒரு வருடத்தை இளவேனில் (சித்திரை, வைகாசி) முதுவேனில் (ஆனி, ஆடி), கார்(ஆவணி, புரட்டாதி) கூதிர் அல்லது குளிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, )பின்பனி ( மாசி, பங்குனி) என்று ஆறாகப் பிரிப்பது தான் பெரும் பொழுது.

ஒரு தினத்தை வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று ஆறாகப் பிரிப்பதுதான் சிறுபொழுது. அதுவே அணைத்து ஆலயங்களில் ஆறுகால பூஜை 

ஒரு தினம் 60 நாழிகை கொண்டதாக கணக்கிட்டு ஒரு நாழிகைக்கு 24 நிமிடங்கள். இன்றைய 24 மணிநேரம் கொண்ட ஒருநாள் இந்தக் கணக்குக்கு மிகச் சரியாகப் பொருந்தும்.

தமிழில் நாட்களுக்கு ஞாயிறு என்றால் சூரியனின்  பெயருடன் கிரகங்களின் பெயரும் வைக்கப்பட்டுள்ளன.

நட்சத்திரங்களை முன்வைத்தும் பூமியின் சுழற்சியை அடிப்படையாக வைத்தும் உருவாக்கப்பட்டதாகத் தமிழ் காலண்டர் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று புத்தாண்டு தொடங்குவது என்பது தமிழில் அல்லது தமிழகத்ல் மட்டுமல்ல. அஸ்ஸாம், வங்காளம், கேரளம் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ஏப்ரல் 14 ஆம் தேதி தான் புத்தாண்டு.

இந்தியாவுக்கு வெளியிலும் பர்மா,கம்போடியா, லாவோஸ், நேபாளம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்தத் தேதி தான் புத்தாண்டு.

பழமையான வான சாஸ்திரமான சூரிய சித்தாந்தமெனும் சமஸ்கிருத நூலில் நட்சத்திரங்களின் சுற்றுப்பாதையின் காலமாக 60 வருடங்கள் கணிக்கப்பட்டுள்ளதில்தான் இன்று நாம் கடைப்பிடிக்கும் தமிழ் வருடங்களின் பெயர்ப் பட்டியல் முதலில் காணப்பட்டுள்ளது.60 வருடங்கள் முடிந்த பிறகு மீண்டும் முதல் ஆண்டிலிருந்து மறுபடி தொடங்கினாலும் இந்த ‘ஒரு 60 வருட சுற்று’ என்பது தற்போதைய ‘ஒரு நூறாண்டு’ எனும் சுற்றுக்கு சமமானது.

‘60 ஆண்டுகள் கணிப்பு’ என்பதை பூமியோடு தொடர்புடையதாக மற்ற கிரகங்கள் வானத்தில் இருக்கிற நிலையோடு தொடர்புபடுத்தி நமது முன்னோர்கள் கணித்துள்ளனர். சூரியனை ஒரு முறை சுற்றுவதற்கு 30 வருடங்களை எடுத்துக் கொள்கிற சனிக் கிரகமும் 12 வருடங்களை எடுத்துக்கொள்கிற வியாழன் கிரகமும் 60 வருடங்களுக்கு ஒரு முறை குறிப்பிட்ட ஒரே நிலைக்கு வருவதை இந்த 60 ஆண்டுகள் சுழற்சி முறை குறிக்கிறது.

‘60 ஆண்டுகள் கணிப்பு’ என்பதை பூமியோடு தொடர்புடையதாக மற்ற கிரகங்கள் வானத்தில் இருக்கிற நிலையோடு தொடர்புபடுத்தி நமது முன்னோர்கள் கணித்துள்ளனர். 

பழைமையான ‘60 ஆண்டுகள் சுழற்சி முறை’ காலப்போக்கில் மாறிவிட்டது. புத்தர் பிறந்த நாளிலிருந்து புத்த மதத்தவரும், மகாவீரரை வைத்து சைன மத சமணர்களும் தொடர் ஆண்டு முறையைப் பின்பற்றுகிறார்கள். மலையாளிகள், வங்காளிகள், உள்ளிட்டோரும் தொடர் ஆண்டு முறைக்கு மாறியுள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே தமிழகத்திலும் தொடர் ஆண்டு தேவை எனும் கோரிக்கையும் எழுந்தது.

இதுவே தற்போதைய வரிசை முறையில் 36 ஆன சுபகிருது வருடம்.சுபகிருது தமிழ் புத்தாண்டில் பஞ்சாங்கக் கணிப்பின் படி . சுபிட்சங்கள் நிறைந்தாண்டாக  அமைந்துள்ளது. சுபகிருது என்றாலே நற்செய்கை என்ப் பொருளாகிறது. கிரகங்களின் பயணத்தால் இந்த ஆண்டு 

மங்களகரமான சுபகிருது தமிழ் புதுவருடம் சித்திரை மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை  சிம்ம ராசியில், ரிஷப லக்னத்தில் பிறக்கிறது. மேஷ ராசியில்  சூரிய பகவான் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் போது மங்களகரமான சுபகிருது வருடம் பிறக்கிறது.ஆண்டு பிறக்கும் போது கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் மேஷ ராசியில் சூரியன், ராகு, புதன், சிம்ம ராசி பூரம் நட்சத்திரத்தில் சந்திரன், துலாம் ராசியில் கேது, மகர ராசியில் சனிபகவான், கும்ப ராசியில் செவ்வாய் சுக்கிரன், மீன ராசியில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன.லக்னாதிபதி சுக்கிரன் செவ்வாயுடன் சேர்ந்து பத்தாம் இடம் இருந்து சந்திரன் பார்வை பெறுவதால் இந்த ஆண்டு அனைத்து துறைகளிலும்  விருத்தியாகும்.  இரண்டாம் இடத்திற்கு உரிய புதன் 12 ஆம் இடம் சூரியன் ராகுவுடன் சேர்ந்து கேது பார்வை பெறுவதால் நன்மை உண்டாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...