மத்திய ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் தேர்வு, 2022
மத்திய ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் பதவிகளுக்கான தேர்வு 2022, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது. மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை, இந்தோ- திபெத்திய எல்லைக் காவல் மற்றும் சஷாஸ்த்ரா சீமா பால் ஆகிய மத்திய ஆயுதப் படைகளில் உதவி கமாண்டன்ட் (குரூப் ஏ) பணிகளுக்காக இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.
நாட்டின் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ள இந்தத் தேர்விற்கு www.upsconline.nic.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள், தேர்வுக்கான பாடத்திட்டங்கள், தேர்வு மையங்கள், விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட தகவல்களுக்கு www.upsc.gov.in என்ற இணையதளத்தில் Examinations------ Active Examinations என்ற தெரிவுகளை அணுகலாம்.
கருத்துகள்