முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காது கேளாதோருக்கான ஒலிம்பிக் அணியினரை பிரதமர் தமது இல்லத்தில் சந்தித்தார்

காது கேளாதோருக்கான ஒலிம்பிக் அணியினரை பிரதமர் தமது இல்லத்தில் சந்தித்தார்

இந்திய காதுகேளாதோர் ஒலிம்பிக் அணியினர் அதிக பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளனர்

“மாற்றுத்திறனாளி தடகள வீரர் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கினால், அவரது சாதனை விளையாட்டு உலகயும் தாண்டி எதிரொலிக்கும்”

“நாட்டிற்கு நன்மதிப்பு தேடித் தருவதில், மற்ற விளையாட்டு வீரர்களைவிட உங்களது பங்களிப்பு பன்மடங்கு அதிகம்“

“உங்களது ஆர்வம் மற்றும் உற்சாகத்தை தொடர்ந்து கடைபிடியுங்கள். இந்த ஆர்வம், நாட்டின் முன்னேற்றத்தில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும்“


பிரதமர் திரு.நரேந்திரமோடி, அண்மையில் நடந்துமுடிந்த காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியினரை, இன்று தமது இல்லத்தில் சந்தித்தார். பிரேசில் நாட்டில் நடைபெற்ற காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில்,  இதுவரை இல்லாத வகையில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியினர், 8 தங்கம் உள்ளிட்ட 16 பதக்கங்களை வென்றுள்ளனர்.  மத்திய அமைச்சர்கள் திரு.அனுராக் சிங் தாக்கூர் மற்றும் திரு. நிஷித் பிரமானிக்  உள்ளிட்டோரும் இந்த சந்திப்பின்போது உடனிருந்தனர். 


அணியின் மூத்த வீரரான ரோஹித் பாக்கருடன் கலந்துரையாடிய பிரதமர், அவர் சவால்களை எதிர்கொள்ளும் விதத்தையும், எதிரியின் செயல்பாட்டை மதிப்பிடும் வழிமுறையையும் கேட்டறிந்தார்.  தமது குடும்பப் பின்னணி மற்றும் விளையாட்டில் தமக்கு ஏற்பட்ட உத்வேகம் குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைத்த ரோஹித்,  இவ்வளவு காலமாக சிறப்பான இடத்தை வகிப்பது குறித்தும் விளக்கினார்.   முன்னணி பேட்மின்டன் வீரரான தனிநபர் மற்றும் விளையாட்டு வீரர் என்ற முறையில் அவரது வாழ்க்கை,  ஊக்கமளிப்பதாக உள்ளது என பிரதமர் குறிப்பிட்டார்.   அவரது விடாமுயற்சி மற்றும் வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகளைக் கண்டு தயங்காமல் இருப்பதற்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.   அந்த வீரரின் தொடர் வைராக்கியம் மற்றும் வயது அதிகரித்து வரும்போதிலும் சிறப்பாக விளையாடுவதையும் திரு.மோடி சுட்டிக்காட்டினார்.  “விருதுகளைக் கண்டு  ஓய்ந்துவிடாமலும், மனநிறைவு பெற்றுவிடாமலும் இருப்பது தான், விளையாட்டு வீரரின் சிறந்த குணம்.  விளையாட்டு வீரர் எப்போதும் உயரிய இலக்கை நிர்ணயித்து, அதனை அடைய முயற்சிப்பார்“ என்றும் பிரதமர் தெரிவித்தார். 


மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங், மல்யுத்தத்தில் தமது குடும்பப் பாரம்பரியத்தை விவரித்தார்.  காது கேளாதோரிடையே நிலவும் போட்டி மற்றும் வாய்ப்புகள் கிடைப்பது பற்றி மனநிறைவு அடைவதாகவும் அவர் தெரிவித்தார்.   2005-லிருந்தே காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்கில் தொடர்ந்து பதக்கம் வெல்லும் திறனை சுட்டிக்காட்டிய பிரதமர், அவர் மேலும் சிறந்து விளங்கவும் வாழ்த்து தெரிவித்தார்.   அவர், பழம்பெரும் வெற்றிவீரராக திகழ்வதற்கும், கற்றுக்கொள்வதில் ஆர்வம் செலுத்துவதையும் பிரதமர் பாராட்டினார்.  “உங்களது மன உறுதி அனைவர்க்கும் உத்வேகம் அளிக்கும்.  நாட்டின் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், உங்களது நிலைத்தன்மை தரத்தை கற்றுக் கொள்ளலாம்.  உச்சத்தை எட்டுவது கடினமானது, ஆனால், எட்டிய பிறகு அந்த இடத்தை விடாமல் பிடித்திருப்பது அதைவிட கடினமானது, மேலும் முன்னேற முயற்சிப்பீர்“ என்றும் பிரதமர் தெரிவித்தார்.  

துப்பாக்கிசுடும் வீரர் தனுஷ், தமது தொடர் பதக்க வேட்டை-க்கு குடும்பத்தினர் அளித்துவரும் ஒத்துழைப்பை எடுத்துரைத்தார்.  யோகா மற்றும் தியானப் பயிற்சி, தமக்கு எவ்வாறு உதவுகிறது என்பதையும் அவர் விவரித்தார்.  தமது தாய் தமக்கு வழிகாட்டியாக திகழ்வதாகவும் அவர் கூறினார்.   அவருக்கு ஆதரவு அளிப்பதற்காக, அவரது தாய் மற்றும் குடும்பத்தினருக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.   கேலோ இந்தியா திட்டம், அடிமட்ட அளவில் விளையாட்டு வீரர்களுக்கு உதவுவது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். 

துப்பாக்கிசுடும் வீராங்கனை பிரியேஷா தேஷ்முக், தமது வாழ்க்கைப் பயணம் பற்றி விவரிக்கையில், தமது குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர் அஞ்சலி பகவத் அளித்துவரும் ஆதரவு பற்றிக் குறிப்பிட்டார்.   பிரியேஷா தேஷ்முக்கின் வெற்றியில் அஞ்சலி பகவத்தின் பங்களிப்பை பிரதமர் வெகுவாகப் பாராட்டினார்.   புனேகர் பிரியேஷாவின் தெள்ளத்தெளிவான ஹிந்தி உச்சரிப்பையும் திரு.மோடி சுட்டிக்காட்டினார். 

டென்னிஸ் வீராங்கனையான ஜெப்ரீன் ஷேக், தமது தந்தை மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு பற்றிக் குறிப்பிட்டார்.   பிரதமருடன் கலந்துரையாடுவது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.   நாட்டின் தவப்புதல்விகள் வீரத்திற்கு இணையான திறமை பெற்றிருப்பதோடு மட்டுமின்றி, அவர் மற்ற இளம் பெண்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.   “இந்தியாவின் புதல்வி, எந்த ஒரு இலக்கை நோக்கிக் குறிவைத்துவிட்டால், அந்தத் தடை வந்தாலும் அதனை தகர்த்தெறிந்து இலக்கை அடைவார் என்பதை நீங்கள் நிரூபித்து இருக்கிறீர்கள்“ என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.  

வீரர்களின் சாதனைகள் தலைசிறந்தது என்று குறிப்பிட்ட பிரதமர், அவர்களது ஆர்வம், எதிர்காலத்தில் அவர்களுக்கு மேலும் புகழ் சேர்க்கும் என்பதன் அறிகுறி என்றும் தெரிவித்தார்.   “இந்த ஆர்வம் மற்றும் உற்சாகத்தை தொடர்ந்து கடைபிடியுங்கள்.  இந்த ஆர்வம், நமம் நாட்டின் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, றிப்பான எதிர்காலத்தை உறுதி செய்கிறது“ என்றும் அவர் கூறினார்.   மாற்றுத்திறனாளி தடகள வீரர் ஒருவர், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கினால், அவரது சாதனை விளையாட்டு உலகையும் தாண்டி எதிரொலிக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.   இது நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதோடு, உணர்திறனையும் எடுத்துக்காட்டுகிறது.   நாட்டில் அவர்களது உணர்ச்சிகள் மற்றும் அவர்களது திறமைக்கு மரியாதை உள்ளது.  எனவேதான்,  “ஆக்கப்பூர்வ எண்ணத்தை உருவாக்குவதில் உங்களது பங்களிப்பு, மற்ற விளையாட்டு வீரர்களைவிட பன்மடங்கு அதிகம்“ என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.  

இந்த கலந்துரையாடலுக்குப் பிறகு பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,  “காது கேளாதோருக்கான ஒலிம்பிக்கில், இந்தியாவுக்கு பெருமையும் புகழும் தேடித்தந்த சேம்பியன்களுடனான கலந்துரையாடலை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.   இந்த வீரர்கள் அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதோடு, அவர்களது ஆர்வம் மற்றும் உறுதிப்பாட்டையும் எண்ணால் உணர முடிந்தது.  அவர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்“ என்று குறிப்பிட்டுள்ளார்.   “நமது சேம்பியன்களால், காது கேளாதோருக்கான ஒலிம்பிக் இம்முறை, இந்தியாவுக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது“ என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...