முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதமர் ராஜ்கோட்டின் அட்கோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மதுஸ்ரீ கே.டி.பி. பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை இன்று பார்வையிட்டார்.

 ராஜ்கோட்டின், அட்கோட்டில் உள்ள கே.டி.பி.பன்னோக்கு மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர்

“இந்த மருத்துவமனை, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில், அரசு & தனியார் முயற்சியின் ஒருங்கிணைப்புக்கான உதாரணமாகத் திகழ்கிறது“


“கடந்த 8 ஆண்டுகளில், மக்களுக்கு ‘சேவை‘, ‘நல்லாட்சி‘ மற்றும் ‘ஏழைகள் நலன்‘ உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது‘‘

‘‘கடந்த 8 ஆண்டுகளில், நாட்டு மக்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த முறைகேடும் நடைபெறவில்லை‘‘

‘‘திட்டப்பணிகள் முழுமை அடைவதற்சான இயக்கங்களை அரசு தொடங்கியுள்ளது‘‘

பிரதமர் திரு.நரேந்திர மோடி, ராஜ்கோட்டின் அட்கோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மதுஸ்ரீ கே.டி.பி. பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை இன்று பார்வையிட்டார்.   ஸ்ரீ படேல் சேவா சமாஜம் இந்த மருத்துவமனையை நிர்வகிக்கிறது.  இங்கு, அதிநவீன மருத்துவ உபகரணங்கள் நிறுவப்பட்டிருப்பதுடன், இப்பகுதி மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சுகாதார சேவையையும் வழங்கி வருகிறது.  குஜராத் முதலமைச்சர் திரு.பூபேந்திரபாய் படேல், மத்திய அமைச்சர்கள் திரு.பர்ஷோத்தம் ருபாலா, டாக்டர் மன்சுக் மாண்டவியா, டாக்டர் மகேந்திர முஞ்சப்பாரா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், குஜராத் மாநில அமைச்சர்கள் மற்றும் சந்த் சமாஜத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.  

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்த மருத்துவமனை திறக்கப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.   இந்த மருத்துவமனை, சவுராஷ்டிரா பகுதியில் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.   இந்த மருத்துவமனை, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில், அரசு & தனியார் முயற்சியின் ஒருங்கிணைப்புக்கான உதாரணமாகத் திகழ்கிறது. 

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 8 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டிற்காக பணியாற்ற தமக்கு வாய்ப்பளித்தமைக்காக, மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.   தாய்நாட்டு சேவையில் 8 ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில், குஜராத் மண்ணில் இருப்பது பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.  தமக்கு வாய்ப்பளித்தமைக்காக குஜராத் மக்களுக்கும் ‘கலாச்சாரத்திற்கும்‘ தலைவணங்குவதாகவும் அவர் கூறினார்.  இந்த சேவை, நமது கலாச்சாரம், நமது மண்ணின் கலாச்சாரம், மற்றும் பாபு(காந்தியடிகள்) மற்றும் படேலின் கலாச்சாரத்திலேயே ஊறிப்போனது என்றும் அவர் தெரிவித்தார்.    கடந்த 8 ஆண்டுகளில், நாட்டு மக்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய  எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார்.  இந்த காலகட்டத்தில், மக்களுக்கு ‘சேவை‘ ,   ‘நல்லாட்சி‘  மற்றும்  ‘ஏழைகள் நலன்‘-க்கு  உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.   அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம், அனைவரும் முயற்சிப்போம் என்பது போன்ற தாரக மந்திரங்கள், தேச வளர்ச்சிக்கு ஊக்கம் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

ஏழைகள், தலித், நலிந்த பிரிவினர், பழங்குடியினர், பெண்களுக்கு அதிகாரமளிக்க வேண்டுமென பூஜ்ய பாபு மற்றும் கசர்தார் படேல், கனவு கண்டதாகவும் பிரதமர் தெரிவித்தார்.  தூய்மை மற்றும் ஆரோக்கியமான இந்தியா, தேசத்தின் மனசாட்சியின் ஒரு அங்கமாக மாறியுள்ளது.  சுதேசி தீர்வுகள் மூலம் பொருளாதாரத்தில் வலுப்பெற்ற இந்தியாவாக இருக்க வேண்டுமென பாபு விரும்பியதாகவும் பிரதமர் தெரிவித்தார்.   தற்போது 3 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டிருப்பதுடன்,  10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள், திறந்தவெளி கழிப்பிட பழக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 9 கோடிக்கும் மேற்பட்ட சகோதரிகள், சமையலறை புகையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்,   2.5 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு,  6 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீர் இணைப்பு பெற்றிருப்பதோடு, 50 கோடி பயனாளிகள், ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சைகளை பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.   இவை அனைத்தும் வெறும் எண்ணிக்கையல்ல ஆனால், ஏழைகளின் கண்ணியத்தை உறுதி செய்வது மற்றும் தேசப் பணியில் நமது அர்ப்பணிப்புக்கான ஆதாரம் என்றும் அவர் கூறினார். 

தற்போது, போர்  நடந்து கொண்டிருக்கும் வேளையிலும், மக்களின் வாழ்க்கையை எளிமையாக்க நாம் முயற்சித்து வருகிறோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.   திட்டப் பணிகள் முழுமைபெறச் செய்வதற்கான இயக்கங்களை அரசு தொடங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.   மக்கள் அனைவரும், தங்களுக்கு உரிய பயன்களைப் பெறும்போது, பாகுபாடு மற்றும் ஊழலுக்கு வாய்ப்பிருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  இதுபோன்ற முயற்சிகள், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.  

குஜராத்தி மொழியில் பேசிய பிரதமர், பொது சேவையில் படேல் சமுதாயத்தினரின் தலைசிறந்த பணிக்காக பாராட்டு தெரிவித்தார்.   தாம் குஜராத் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தை நினைவுகூர்ந்த பிரதமர், 2001-ம் ஆண்டு தங்களுக்காக பணியாற்ற குஜராத் மக்கள் தமக்கு வாய்ப்பு அளித்தபோது, மாநிலத்தில் 9 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்ததாகவும், தற்போது குஜராத்தில் 30 மருத்துவக் கல்லூரிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.    “குஜராத்திலும், நாட்டிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மருத்துவக் கல்லூரி இருப்பதைக் காண விரும்புகிறேன்.  நாம் விதிமுறைகளை மாற்றியமைத்ததால், தற்போது மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்கள், அவர்களது தாய்மொழியிலேயே படிக்கலாம்“ என்றும் அவர் குறிப்பிட்டார்.  

தொழில்துறை பற்றிக் குறிப்பிட்ட திரு.மோடி, முன்பு வதோதரா முதல் வாபி வரை மட்டுமே தொழிற்சாலைகளைக் காண முடியும், தற்போது, குஜராத் முழுவதும் தொழிற்சாலைகள் மலர்ந்துள்ளன.  நெடுஞ்சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளதோடு, குறு,சிறு, நடுத்தரத் தொழில்களும், குஜராத்திற்கு பெரும் வலிமை அளிப்பவையாக உருவெடுத்துள்ளன.   மருந்துத் தயாரிப்புத் தொழிலும் பரவி வருகிறது.   சவுராஷ்டிராவின் அடையாளமே, அதன் மக்களின் தைரியமான பண்பு தான் என்றும் அவர் கூறினார். 

வறுமையின் கொடுமையை தாம் உணர்ந்திருப்பதாக கூறிய பிரதமர், ,  வீட்டிலிருப்பவர்களுக்கு சவுகரியக் குறைபாடு ஏற்படக் கூடாது என்பதற்காக, உடல்நலன் சரியில்லை என்றாலும்கூட, சிகிச்சைக்குச் செல்லாமல் குடும்பப் பெண்கள் எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்பதையும் உணர்ந்திருப்பதாக தெரிவித்தார்.  தாய்மார்கள் யாரும் சிகிச்சைபெறாமல் இருக்கக்கூடாது என்பதை உறுதிசெய்ய, தற்போது தில்லியில் ஒரு மகனை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் .  எனவே தான் பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டம் தொடங்கப்பட்டது“ என்று அவர் குறிப்பிட்டார்.   அதேபோன்று, குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கச் செய்வதற்காக, மக்கள் மருந்தகம் தொடங்கப்பட்டிருப்பதுடன்,  அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமென்பதற்காக சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த