முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நவ்சாரியில் ஏ.எம். நாயக் சுகாதார வளாகம் மற்றும் நிராளி பன்னோக்கு மருத்துவமனையை பிரதமர் திறந்துவைத்தார்

 நவ்சாரியில் ஏ.எம். நாயக் சுகாதார வளாகம் மற்றும் நிராளி பன்னோக்கு மருத்துவமனையை பிரதமர் திறந்துவைத்தார்

“ ஏழைகளுக்கு அதிகாரமளித்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்க, நவீனமயமாக்கல் மற்றும் சுகாதார சேவைகள் எளிதில் கிடைக்கச்செய்வது அவசியம்”

“குஜராத்தில் நான் பெற்ற அனுபவங்கள், நாடுமுழுவதும் உள்ள ஏழைகளுக்கு பணியாற்ற உதவியது”

“சேவையாற்றுவதை நாட்டின் வலிமையாக்கிய பாபு போன்ற தலைசிறந்த மனிதர்கள் நமக்கு ஊக்கமளிக்கின்றனர்”

நவ்சாரியில் ஏ.எம். நாயக் சுகாதார வளாகம் மற்றும்  நிராளி பன்னோக்கு மருத்துவமனையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார். கரேல் கல்வி வளாகத்தையும் அவர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



 இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், உள்ளுர் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே மேம்படுத்தக்கூடிய  பல்வேறு திட்டங்கள் நவ்சார் பகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

நிராளி அறக்கட்டளை மற்றும் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சோகத்தையும்  வாய்ப்புகளாக மாற்றி,  வேறு எந்த குடும்பத்திற்கும் அத்தகையை நிலை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்த திரு ஏ. ஏம்.நாயக் ஆகியோரை பாராட்டிய அவர், நவீன சுகாதார வளாகம் மற்றும் பன்னோக்கு மருத்துவமனை கிடைக்கப்பெற்றுள்ள மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.


 ஏழைகளுக்கு அதிகாரமளித்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்க, நவீனமயமாக்கல் மற்றும் சுகாதார சேவைகள் எளிதில் கிடைக்கச்செய்வது அவசியம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். “நாட்டின் சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்கான முழுமையான அணுகுமுறை குறித்து கடந்த 8 ஆண்டுகளில் நாங்கள் கவனம் செலுத்தினோம்” என்று அவர் கூறினார். சிகிச்சை வசதிகளை நவீன மயமாக்குவதோடு, ஊட்டசத்து மற்றும் தூய்மையான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான  முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். “ஏழை மற்றும் நடுத்தர மக்களை நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்க நாம் முயற்சித்து வருகிறோம், ஒரு வேளை, நோய் பாதிப்பு ஏற்பட்டால், சிகிச்சைக்கான செலவுகளை குறைக்கவும் நாம் முயற்சிக்க வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார். குஜராத்தின் சுகாதார கட்டமைப்பு வசதிகள் மற்றும்  சுகாதார சேவை குறியீடுகள் மேம்பட்டிருப்பதும், நீடித்த வளர்ச்சிக்கான நித்தி ஆயோக்கின் தரவரிசை பட்டியலில் குஜராத் முதலிடம் பெற்றிருப்பதை காட்டுவதாகவும் அவர் கூறினார்.

தாம் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது,  ஆரோக்கியமான குஜராத், ஒளிமயமான குஜராத், முதலமைச்சரின் அமிர்த திட்டம் போன்றவை  தொடங்கப்பட்டதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார். இந்த அனுபவங்கள், நாடுமுழுவதும் உள்ள ஏழைகளுக்கு பணியாற்ற உதவியதாக அவர் குறிப்பிட்டார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், குஜராத்தில் இலவச சிகிச்சை பெற்ற 41 லட்சம் நோயாளிகளில் பெரும்பாலானோர் பெண்கள், நலிந்த பிரிவினர் மற்றும் பழங்குடியின மக்கள் ஆவர். குஜராத்தில், 7.5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் மற்றும் 600 “தீன் தயாள் மருந்தகங்கள்”  அமைக்கப்பட்டுள்ளன. குஜராத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கான அதிநவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பவநகர், ஜாம்நகர், ராஜ்கோட் போன்ற பல நகரங்களில் புற்று நோய் சிகிச்சை வசதிகள் உள்ளன. அதேபோன்ற வசதிகள், இம்மாநிலத்தில் சிறுநீரக சிகிச்சைக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதை காண முடிகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து குறியீடுகளை மேம்படுத்துவது குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார். அரசு மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பதற்கான சிரஞ்சீவி திட்டம், 14 லட்சம் தாய்மார்களுக்கு பயனளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். குஜராத்தின் சிரஞ்சீவி மற்றும் கிகிலாஹட் திட்டங்கள், தேசிய அளவில் இந்திரதனுஷ் இயக்கம் மற்றும் பிரதமரின் மகப்பேறு திட்டம் என்ற பெயரில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.  மாநிலத்தில் மருத்துவக்கல்வியை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் பிரதமர் பட்டியலிட்டார். ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதன் மூலம் மாநிலத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை 30-ஆகவும், எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 1100-லிருந்து 5700 ஆகவும், முதுநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 800-லிருந்து 2000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.

குஜராத் மக்களின் சேவை உணர்வுக்கு மரியாதை செலுத்துவதாக கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார். “குஜராத் மக்களுக்காக, சுகாதாரம் மற்றும் சேவைகளை வழங்குவதே வாழ்க்கையின் இலக்கு. சேவையாற்றுவதை நாட்டின் வலிமையாக்கிய பாபு போன்ற தலைசிறந்த மனிதர்கள் நமக்கு ஊக்கமளிக்கின்றனர். குஜராத்தின் உணர்வுகள், இப்போதும் ஆற்றல்மிக்கவை. இங்குள்ள வாழ்க்கையின் மிகவும் வெற்றியடைந்த நபர்கூட, சில சேவைகளுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். குஜராத்தின் சேவை உணர்வு, அதன் திறமைக்கு ஏற்றவாறு அதிகரிக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த