முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன்திருமணத்திற்கு மாமல்லபுரத்தில் சிறப்பான ஏற்பாடுகள்

பலரால் அறியப்பட்ட கூத்துக்களில் நடிக்கும் கோமாளிகள் அல்லது திரைப் படத்தில் நடிக்கும் நடிகன் மீதான பார்வைக்கும், சமூகத்தில் அறிமுகமில்லாமலே வாழும்  அடுத்த வீட்டு மக்களைக் கூட கூட அறியாமல் இருப்பதற்கும்மிடையே ஒரு வேறுபாடு உண்டு


இதில் முதல் ரகத்தை விட இரண்டாம் ரகத்தினரின் வாழ்வியல் சுதந்திரம் அதிகம்.  சிறு கதா பாத்திரங்களில் நடிக்கும் நகைச்சுவை நடிகன் கூட அவன் படத்தில் வரும் பாத்திரங்களில் வரும்  பெயரில் தான் மக்கள் உணர்ந்து அழைக்கும் நிலை நமது மாநிலத்தில் சினிமா வாழ்வியல் மக்களுடன் இரண்டறக் கலந்து விட்டது. அந்த வகையில் தான் தங்கள் பட நாயகி நயன்தாரா திருமணத்தை அவர் எதிர்நோக்குகிறாறோ இல்லையோ, நம் மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த அளவுக்கு சினிமா மக்களின் வாழ்க்கையில் பரவியதும், விரவியும் கிடக்கிறது.


பாலிவுட் நடிகர் சல்மான்கானுடன் நெருக்கமான பழக்கம் முறித்துக் கொண்ட பின்னர் விவேக் ஓபராயுடன் நெருக்கம்..

பின்னர் அதையும் முறித்துக் கொண்டார் அபிஷேக்பச்சனுடன் திருமணம். செய்துகொண்ட நடிகை உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராயை என்றுமே நமது உள்ளூர் கிழவி உள்ளிட்ட யாருமே எப்போதும் குறையாகச் சொன்னது கிடையாது. கேவலமாகவும் பேசியது கிடையாது காரணம். நடிகர்கள் நம் வீட்டில் ஜன்னல் வழியாக உறவுகள் இல்லாத உறவாக வந்த நிலையில். இது  தமிழ்நாட்டில் நடக்கவில்லை ஹிந்தி பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் இது பெரிய விஷயமுமில்லை. அங்கு தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சார நிலை இருந்ததில்லை.




நடிகை நயன்தாரா நடிகர் சிலம்பரசனுடன் நெருக்கம். பிறகு ஏற்கனவே திருமணமான நாட்டிய நடிகர் பிரபுதேவாவுடன் நெருக்கம். அதுவும் கடந்து இப்போது விக்னேஷ் சிவனுடன் பல ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, தற்போது முறைப்படியான  திருமணம்.

நடிகை நயன்தாராவையும் யாரும் விமர்சிக்கப் போவதில்லை. கேவலமாகப் பேசப்போவதுமில்லை. தமிழ்நாட்டின் மக்கள் வாழ்த்தவே செய்கிறார்கள்.




திரையுலகம் அரசியல் மட்டுமின்றி பல துறைகளைச் சார்ந்த மேல்மட்டத்தில் வாழும் கீழ்மட்டப் பெண்களின் வாழ்க்கை இப்படி "வழக்கத்திற்கு அப்பாற்பட்டதென" நிறைய உண்டு.

தன்னுடைய சொந்த வாழ்க்கையை தன் விருப்பத்திற்கேற்ப அமைத்துக் கொள்வதற்கு மக்களுக்கு உரிய அதே உரிமை  ஒவ்வொரு நபருக்கும் நடிகைக்கும் உண்டு.

ஆனால் இதே உரிமை கொண்டு ஒரு ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்துப் பெண்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ள விரும்பினால் சமூகம் எவ்வளவு எளிதாக விடாமல் கேவலமாகப் பேசுகிறது. காரணம் நமது பாரம்பரிய கலாச்சார நிலை தான்.

பெண்ணின் வாழ்க்கை கொஞ்சம் தடுமாற்றம் கண்டு சரியாக அமையாமல் போனால் அவரது குடும்பத்தினரே அவரை எவ்வளவு தூரம்  பேசுகிறார்கள்.. சலிப்பாகவும் பார்க்கிறார்கள். என்பதற்கு பல உதாரணங்கள் கூறமுடியும். 

எல்லாவற்றிலும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு ஒரு சாபக்கேடு.   இப்போது நடிகை நயன்தாரா திருமணத்தை கூத்தாடிகள் வாழ்க்கை முறைப்படி மக்கள்  பேசுகின்றனர். ஆனால் அவர்களும் மனித மனம் கொண்ட பலர் அறிந்தவர்கள் என்பது தவிர வேறு இல்லை.சிம்பு என்ற சிலம்பரசனின் 'போடா போடி' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். 2015 ஆம் ஆண்டில் அவர் இயக்கிய நானும் ரவுடி தான் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, அதன் கதாநாயகியாக நடித்த நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்குமிடையே காதலாகி காலம் கடந்து தற்போது இருவருக்கும்  ஜூன் 9 ஆம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், திருப்பதியில் நடைபெற  தீர்மானிக்கப்பட்ட நிலையில் சென்னை அருகே  மாமல்லபுரத்திலுள்ள ரிசார்ட்டில் நடத்த முடிவு செய்துள்ளனர். 

அதை உறுதிசெய்யும் வகையில், நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ்சிவன் இருவரும் தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.

ஸ்டாலினை நேரில் சந்தித்து, தங்கள் திருமண அழைப்பிதழை கொடுத்தனர். அப்போது நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.  திருமணத்தில் தென்னிந்திய திரைப்படத் துறையில் பிரபலமான நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். தற்போது திருமணத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது. மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் பைவ் ஸ்டார் ஹோட்டலில் ஜுன் மாதம் 9 ஆம் தேதி அதிகாலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலான முகூர்த்தத்தில் நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடக்கிறது.நயன்தாரா என மக்கள் அறிந்த (வயது 39) டயானா மரியா குரியன் என்ற  பெயர் கொண்ட நடிகை கேரளாவில் திருவல்லா பூர்வீகமாகக் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் பிறந்து வளர்ந்து 2003 ஆம் ஆண்டு மனசினகாரே எனும் மலையாளத் திரைப்படம் மூலம் அறிமுகமாகி 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

கலைமாமணி விருது,நந்தி விருது, தமிழக அரசு திரைப்பட விருதுகள்,பிலிம்பேர் விருதுகள். பெற்றவர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த