முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடற்படைக்குரிய கண்டுபிடிப்புகள் மற்றும் உள்நாட்டு மயமாக்கல் நிறுவன 'ஸ்வாவ்லம்பான்" (தற்சார்பு) கருத்தரங்கம்

 கடற்படைக்குரிய கண்டுபிடிப்புகள் மற்றும் உள்நாட்டு மயமாக்கல் நிறுவன 'ஸ்வாவ்லம்பான்" (தற்சார்பு) கருத்தரங்கத்தில் பிரதமர ஆற்றிய உரையின் தமிழாக்கம்

மத்திய அமைச்சரவையின் எனது சகாக்களான திரு.ராஜ்நாத் சிங் அவர்களே, திரு.அஜய் பட் அவர்களே, கடற்படை தலைவர், கடற்படை துணைத்தலைவர், பாதுகாப்பு செயலாளர், இந்திய பாதுகாப்புத் தளவாட உற்பத்தியாளர்களின் சங்க தலைவர் அவர்களே, மற்றும் கல்வித்துறை மற்றும் தொழில்துறையுடன் தொடர்புடைய எனது சகாக்களே, பிற உயரதிகாரிகளே, சகோதர, சகோதரிகளே,


ஆயுதப் படையில் தன்னிறைவை அடைவது என்பது, 21-ம் நூற்றாண்டின் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கடற்படையில் தன்னிறைவை அடைவது 'ஸ்வாவ்லம்பன்' (தற்சார்பு) கருத்தரங்கம் முக்கியமான நடவடிக்கையாகும். இந்த கருத்தரங்கை கூட்டியதற்காக உங்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

நண்பர்களே,

ராணுவத் தயார் நிலைக்கான கூட்டுப் பயிற்சிகள், குறிப்பாக கடற்படையில் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்த கருத்தரங்கமும் ஒருவகையில் கூட்டுப் பயிற்சிதான். தன்னம்பிக்கைக்கான இந்த கூட்டுப் பயிற்சியில், கடற்படை, தொழில்துறை, சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் மற்றும் உலகெங்கும் உள்ள மக்கள், அரசு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ஒன்றாக இணைவது பற்றி சிந்திக்கின்றனர். இந்த கூட்டுப் பயிற்சியின் முக்கியக் குறிக்கோள், பங்கேற்பாளர்கள் அனைவருக்குமான அதிகபட்ச வெளிப்பாடு, பரஸ்பர புரிதல் மற்றும் சிறந்த நடைமுறைகளை ஏற்று கொள்வது. எனவே இந்த கூட்டுப் பயிற்சியின் குறிக்கோள் மிகவும் முக்கியமானது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் இந்தியக் கடற்படைக்கு 75 உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்குவது என்பது மிகப்பெரிய படியாகும்.

நண்பர்களே,

நமது கடல்களும், கடலோர எல்லைகளும் நம் பொருளாதார தன்னம்பிக்கையின் பெரும் பாதுகாவலர்கள் மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கின்றன.  எனவே இந்திய கடற்படையின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடற்படை தனது துறைக்காக மட்டுமின்றி, நாட்டின் வளர்ந்து வரும் தேவைகளுக்காகவும் தற்சார்புடன் இருப்பது மிக அவசியமாகும். இந்த கருத்தரங்கின் உள்ளடக்கம், நமது படைகள் தன்னிறைவு பெறுவதற்கு மிகவும் உதவும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

பாதுகாப்புத் துறையில் தற்சார்பு குறித்து விவாதிக்கும் இந்த நேரத்தில், கடந்த காலங்களில் நடந்தவைகளிலிருந்து நாம் பாடங்களை கற்று கொள்வதும் மிகவும் அவசியம். இது எதிர்காலத்துக்கு வழிவகுக்கும். வளமான கடல்சார் பாரம்பரியத்தை நாம் கொண்டிருப்பதை பார்க்கிறோம். இந்தியாவின் வளமான வணிகம் இந்த பாரம்பரியத்தின் ஒருபகுதியாக இருந்து வருகிறது. நமது மூதாதையர்கள் கடலில் ஆதிக்கம் செலுத்த முடிந்ததற்கு காரணம், அவர்கள் காற்றின் திசை மற்றும் விண்வெளி அறிவியலை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தனர். வெவ்வேறு பருவநிலைகளில் காற்றி வீசும் திசைகள் பற்றியும், அதனை பயன்படுத்தி இலக்கை அடைவது குறித்தும் நமது முன்னோர்கள் சிறந்த அறிவு பெற்றிருந்தனர்.கடற்படை புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தற்சார்பு அமைப்பின் ‘ஸ்வாவ்லம்பன்’ கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்


இந்திய கடற்படையில் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் ‘ஸ்பிரிண்ட் சேலஞ்சஸ்’ திட்டத்தை பிரதமர் தொடங்கிவைத்தார்

21-ம் நூற்றாண்டில் இந்திய பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு கொள்கை மிக முக்கியமானது

“புதுமை கண்டுபிடிப்புகள் முக்கியமானதாக உள்ள நிலையில், அது உள்நாட்டில் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான ஆதாரங்களாக இருக்க முடியாது”

“உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் முதலாவது விமானந்தாங்கி கப்பல் வெகுவிரைவில் பயன்பாட்டிற்கு வருவதற்காக காத்திருக்கவும்”

“தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் பரவியுள்ளது மற்றும் போர்முறைகளிலும் கூட மாற்றம் ஏற்பட்டுள்ளது”

“சர்வதேச அளவில் இந்தியா பெருமை பெற்றுள்ள நிலையில், தொடர்ந்து உண்மைக்கு புறம்பான தகவல்கள் மூலம் தாக்குதலுக்கு உள்ளாகிறது”

“உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ இந்தியாவின் நலன்களுக்கு கேடு விளைவிக்கும் சக்திகள் முறியடிக்கப்பட வேண்டும்”

“தற்சார்பு இந்தியாவுக்கான 'முழு அரசாங்க' அணுகுமுறையைப் போலவே, 'தேசத்தின் முழு' அணுகுமுறையும் தேசத்தின் பாதுகாப்பு

பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் நடைபெற்ற  கடற்படை புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தற்சார்பு அமைப்பின் ‘ஸ்வாவ்லம்பன்’ கருத்தரங்கில் இன்று உரையாற்றினார்.

இந்திய கடற்படையில் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் ‘ஸ்பிரிண்ட் சேலஞ்சஸ்’ திட்டத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.  அப்போது பேசிய அவர், 21-ம் நூற்றாண்டில் இந்திய பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு கொள்கை  மிக முக்கியமானது என்று கூறினார்.

புதுமை கண்டுபிடிப்புகள் முக்கியமானதாக உள்ள நிலையில், அது உள்நாட்டில் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான ஆதாரங்களாக இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் பரவியுள்ள நிலையில்,  போர்முறைகளிலும் கூட மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார். சர்வதேச அளவில் இந்தியா அங்கீகாரம் பெற்றுள்ள நிலையில், தவறான தகவல்கள் மூலம் தாக்குதலுக்கு உள்ளாகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ இந்தியாவின் நலன்களுக்கு கேடு விளைவிக்கும் சக்திகள் முறியடிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், தற்சார்பு இந்தியாவுக்கான முழு அரசாங்க அணுகுமுறையைப் போலவே, தேசத்தின் முழு அணுகுமுறையும் தேசத்தின் பாதுகாப்பிற்கான காலத்தின் தேவையாகும் என்றார்.

இந்திய கடற்படைக்கு உள்நாட்டிலேயே 75 புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், விரைவில் அது நிறைவேற்றப்படும் என்று தாம் நம்புவதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், வாங்குபவர் என்ற நிலையிலிருந்து, கட்டமைப்பவர் என்ற நிலைக்கு இந்திய கடற்படை மாற்றம் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

விடுதலைப் பெருவிழாவை நாடு கொண்டாடிவரும் வேளையில், சுதந்திரம் என்ற இலக்கணத்திற்கு தற்சார்பு என்ற புதிய பரிமாணம் இணைந்துள்ளதாகத் தெரிவித்தார். உணவு தானியங்களில் நாம் தன்னிறைவை மட்டும் அடையாமல், மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக விளங்குவதாகவும் அவர் கூறினார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உலகம் முழுவதும் பல்வேறு மக்களின் உயிரை பாதுகாத்ததாகத் தெரிவித்தார். மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்களையும், நமது விண்வெளி மையம் செலுத்துவதாக அவர் கூறினார்.

பல்வேறு துறைகளில் தற்சார்பை அடைந்தது என்ற நிலையோடு, மற்ற நாடுகளின் தேவைகளையும் இந்தியா நிறைவேற்றி வருவதாக திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு அஜய் பட், பாதுகாப்புத் துறை செயலாளர் டாக்டர் அஜய் குமார், கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஆர் ஹரிகுமார், கடற்படை துணை தளபதி வைஸ் அட்மிரல் எஸ் என் கோர்மேட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  இரண்டு நாட்களுக்கு இந்தக் கருத்தரங்கு நடைபெறுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த