முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022 வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிரதமர் வாழ்த்து

மல்யுத்த வீராங்கனை பூஜா கெலாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு பிரதமர் வாழ்த்து

“பூஜா, உங்களது பதக்கம் கொண்டாடப்பட வேண்டியது, மன்னிப்பு கோரத் தகுந்ததல்ல”

பெண்களுக்கான 50 கிலோ ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தத்தில் தங்கம் வெல்லத் தவறி வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு உணர்ச்சிவசப்பட்டு பேசிய மல்யுத்த வீராங்கனை பூஜா கெலாட்டின் பேட்டியை ட்விட்டர் பதிவாக ஏ.என்.ஐ வெளியிட்டிருந்தது. அதற்கு பதிலளித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, பூஜா கெலாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வாழ்த்து தெரிவித்து, அவரை ஊக்கப்படுத்தினார்.

ட்விட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது: 

“பூஜா, உங்கள் பதக்கம் கொண்டாடப்பட வேண்டியது, மன்னிப்பு கோரத் தகுந்ததல்ல. உங்களது வாழ்க்கைப் பயணம் எங்களுக்கு ஊக்கமளிக்கிறது, உங்கள் வெற்றி எங்களை மகிழ்ச்சிப்படுத்துகிறது. உங்கள் எதிர்காலம் மிகச் சிறப்பாக உள்ளது... தொடர்ந்து சாதனை புரியுங்கள்.”பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் மதிப்புமிக்க தங்கப் பதக்கம் வென்ற பவினா பட்டேலுக்கு பிரதமர் வாழ்த்து

பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இன் பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் மதிப்புமிக்க தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றிய பவினா பட்டேலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அவர் தெரிவித்ததாவது:


“பாராட்டுக்குரிய பவினா பட்டேல் @BhavinaOfficial, நமக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார். காமன்வெல்த் போட்டிகளில் தமது முதல் பதக்கமாக, பாரா டேபிள் டென்னிஸ் விளையாட்டில் உயரிய தங்கப் பதக்கத்தை அவர் வென்றுள்ளார். அவரது சாதனை, டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்திய இளைஞர்களை ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன். பவினாவின் எதிர்கால முயற்சிகளுக்கு என் வாழ்த்துகள்.”குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற ரோஹித் டோகாசிற்கு பிரதமர் வாழ்த்து

பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் ஆடவருக்கான 67 கிலோ குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்ற ரோஹித் டோகாசிற்கு பிரதமர்  திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“ரோஹித் டோகாசின் சாதனையால் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  அவரது கடின உழைப்பும், விடாமுயற்சியும், சிறந்த பலன்களை வழங்கியுள்ளன. எதிர்வரும் காலங்களில் மேலும் பல வெற்றிகளை அவர் அடைவார் என்று நம்புகிறேன்.பெண்களுக்கான 76 கிலோ மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பூஜா சிஹாகிற்கு பிரதமர் வாழ்த்து

பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் பெண்களுக்கான 76 கிலோ மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பூஜா சிஹாகிற்கு   பிரதமர்  திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“திறமையான மல்யுத்த வீரராக பூஜா சிஹாக் முத்திரை பதித்துள்ளார். தமது விடா முயற்சியால் ஏராளமான சவால்களை அவர் எதிர்கொண்டுள்ளார். காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் அவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு வாழ்த்துகள். வருங்காலங்களிலும் இந்தியாவிற்கு அவர் பெருமை தேடித் தருவார் என்று நான் நம்புகிறேன்.ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் 97 கிலோ மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் தீபக் நெஹ்ராவிற்கு பிரதமர் வாழ்த்து

பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் 97 கிலோ மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் தீபக் நெஹ்ராவிற்கு  பிரதமர்  திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“மற்றொரு மல்யுத்த வீரர், இந்தியாவிற்கு கூடுதல் புகழ்! காமன்வெல்த் போட்டிகளில் ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் 97 கிலோ மல்யுத்தப் போட்டியில் தீபக் நெஹ்ரா வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அசாதாரணமான துணிச்சலையும், உறுதித் தன்மையையும் தீபக் வெளிப்படுத்தியுள்ளார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு என் வாழ்த்துகள்புல்வெளி பந்து உருட்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆடவர் அணிக்கு பிரதமர் வாழ்த்து

பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் லான் பவுல்ஸ் எனப்படும் புல்வெளி பந்து உருட்டுதல் போட்டியில்  வெள்ளிப் பதக்கத்தை வென்றதற்காக, இந்திய ஆடவர் அணியின் வீரர்களான சுனில் பகதூர், நவ்நீத் சிங், சந்தன் குமார் சிங் மற்றும் தினேஷ் குமார் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது; 

"லான் பவுல்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுனில் பகதூர், நவ்நீத் சிங், சந்தன் குமார் சிங் மற்றும் தினேஷ் குமார் ஆகியோர் குறித்து பெருமிதம் கொள்கிறோம். அவர்களின் குழுப்பணியும் விடாமுயற்சியும் போற்றத்தக்கவை. அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.