2022 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு
2022 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அபாரமான திறமையையும், விடாமுயற்சியையும் இந்திய அணி வெளிப்படுத்தியதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:
“இன்று நடைபெற்ற 2022 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் #AsiaCup2022 இந்திய அணி #TeamIndia அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடியது. அபாரமான திறமையையும், விடாமுயற்சியையும் அணி வெளிப்படுத்தியது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகள். மேலும் தேசிய விளையாட்டுகள் தினத்தையொட்டி, விளையாட்டு ஆளுமைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மேஜர் தியான்சந்த் பிறந்தநாளில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்
தேசிய விளையாட்டுகள் தினத்தையொட்டி, விளையாட்டு ஆளுமைகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய ஹாக்கி விளையாட்டு ஆளுமையான மேஜர் தியான்சந்த் பிறந்தநாளில் அவருக்கு பிரதமர் புகழாரமும் சூட்டியுள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“தேசிய விளையாட்டுகள் தின வாழ்த்துக்கள் மேஜர் தியான்சந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு புகழாரம்.
சமீப ஆண்டுகள் விளையாட்டுகளுக்கு மகத்தானவையாக உள்ளன. இந்த நிலைமை தொடரட்டும். இந்தியா முழுவதும் விளையாட்டுக்கள் செல்வாக்கு பெறட்டும்.”
கருத்துகள்