முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராகுல் காந்தியின் யாத்திரையும், காங்கிரஸில் விலகிய பின் பாஜகவுக்கு குலாம் வைத்த சலாமும்

காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது கடந்த சில மாதங்களாகவே அதிருப்தியில் இருந்து வந்த குலாம் நபி ஆசாத், கட்சியின்


தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஜி 23 தலைவர்கள் குழுவிலும் இடம் பெற்றிருந்தார்.அப்போதில் இருந்தே குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து விலகலாமெனப் பேசப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக  அறிவித்தார். குலாம் நபி ஆசாத் கட்சியின் தலைமையை விமர்சித்ததை வைத்து காங்கிரஸ் கட்சியினர், குலாம் நபி ஆசாத் பாஜகவின் பி டீம் என்றனர் .

ஆனால், இதையெல்லாம் நிராகரித்த குலாம் நபி ஆசாத், ஜம்மு காஷ்மீரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறலாம் என்ற தகவல் வரும் நிலையில், அங்குள்ள 90 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக குலாம் நபி ஆசாத் கட்சி ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.




அதற்கான ஏற்பாடுகளும் தற்போது முழு வீச்சில் நடக்கிறது.குலாம் நபி ஆசாத்தின் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு கடந்த ஆண்டு முடிந்த போது, பிரதமர் நரேந்திர மோடி குலாம் நபி ஆசாத்தைப் பாராட்டி மிகவும் உருக்கமாக பேசினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி கண்கலங்கினார். பிரதமர் நரேந்திர மோடி இப்படி உருக்கமாகப் பேசியதையும், குலாம் நபி ஆசாத் காங்கிரசிலிருந்து விலகியதையும் ஒப்பிட்டு செய்திகள் வெளியாகின.




நரேந்திர மோடி இரக்கமற்ற நபராகவே இருந்திருக்க வேண்டும் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஏனென்றால் அவர் மனைவியுடனில்லை, குழந்தைகளும் மோடிக்கு இல்லை. ஆனால், எனது எண்ணத்திற்கு மாறாக மோடி தனது சிறந்த மனிதாபிமான எண்ணத்தை வெளிப்படுத்தினார்'' என்றார். 





 காங்கிரசில் 50 ஆண்டுகள் பதவி சுகங்களை அனுபவித்தும், கட்சிக்காக எந்த பங்களிப்பையும் செய்யாதவர்  குலாம் நபி ஆசாத் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில் குலாம் பாஜகவிற்கு சலாம் செய்கிறார் என்ற விமர்சனமும் வருகிறது தொண்டுள்ளம் கொண்டவருமில்லை. தொண்டர் படையைக் கண்டவரும் இல்லை. பாஜகவின் தூண்டுதலால் இன்று காங்கிரசை பலவீனப்படுத்த களம் கண்டுள்ளார்! வெற்றி பெறுவாரா? என்ற வினா எழுப்புகிறார்கள்.





காங்கிரஸ்காரர்களே  பொறாமைப்படும் அளவிற்கு பல்வேறு பதவிகளையும், வாய்ப்புகளையும் பெற்றவர் குலாம் நபி ஆசாத் ! தற்போது அவர் “காங்கிரஸ் மீள முடியாத பின்னடைவு கண்டுவிட்டது ” எனவே நான் விலகுகிறேன் . காங்கிரசின் இந்த வீழ்ச்சிக்கு ராகுல் காந்தியே காரணம் என்ற கடிதம் மூலம் அம்பு வீசியுள்ளார்.

பாஜகவை ஆதரிக்க முடியாமலுள்ள சிறுபான்மையினர் வாக்கு வங்கியை காங்கிரசிடமிருந்து சிறிதளவாவது பிரித்தெடுத்து பாஜகவின் வளர்ச்சிக்கு சேவை செய்யவே குலாம் நபி ஆசாத்தின் தனிக் கட்சி துணை போகும் என்பது காங்கிரஸ் கட்சியின் வாதம்  இந்த தனிக் கட்சி நடத்துவதற்கான பொருளாதாரத்திற்கு பாஜக மறைமுகமாக பொறுப்பேற்குமா அல்லது வேறு வழி உண்டா என்பது தான் தற்போது அங்குள்ள தலைவர்கள் மத்தியில் பேச்சாகும்

காங்கிரஸ் கட்சியில் கூட இருந்தே குழி பறித்த குலாம் நபி ஆசாத்! என்று பட்டம் சூட்டி காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் விமர்சனங்களில் உண்மை உண்டா என்பது விரைவில் தெரியும். எந்தெந்த மாநிலங்களில் பாஜகவின் அரசியல் ப சரியாக எடுபடவில்லையோ... அங்கெல்லாம் பிரபல நடிகர் நடிகைகள் தயவை நாடும் பாஜக.‌ இதுவும் ஒரு வகை ஊழல் கலந்த அரசியல் தான் நடிகர்கள் மக்கள் ரசனையை  வியாபாரமாக்கும் கருவி மக்கள் அன்றாடம் வாழ்வியலுக்குப் பயன்படாத பதர்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்து.‌

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பாஜக முக்கிய தலைவர்களைச் சந்தித்தால்  தங்களுக்கு ஐ.டி ரெய்டு பிரச்சினை ஏதும் வராது என்று அவர்கள் நம்புவதால்  இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஊடகங்கள் வாயிலாக பெரிய அளவில் விளம்பரமாகிறது.‌ இதுவும் ஒரு வகை தந்திர அரசியல் வியாபாரம் தானே தவிர வேறென்றுமில்லை.‌

அதே‌ நேரத்தில் பிரகாஷ் ராஜ் போல பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக அரசின் செயல்பாடுகளை தீர்க்கமாக எதிர்க்கும் நடிகர் நடிகைகளும் உள்ளனர்...இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக காங்கிரஸ் பார்க்கும் ராகுல்காந்தி செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3500 கி.மீ., 150 நாள் 'இந்திய ஒற்றுமை பயணம்' மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த கீழ்கண்டவர்கள் தலைமையில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் இந்திய ஒற்றுமை பயண தமிழக ஒருங்கிணைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே. ஜெயக்குமார்,, மேற்பார்வையில் செயல்படும். குழு உறுப்பினர்கள் பட்டியல்.கன்னியாகுமரி காந்தி நினைவிடத்தில் தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியிடம் தேசிய கொடியை வழங்கி நடைபயணத்தை துவங்கி வைக்கிறார். அன்று கன்னியாகுமரியில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது. தமிழகத்தில் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நாளும் 2 கூட்டணி கட்சித் தலைவர்கள் ராகுல்காந்தியோடு 10 நிமிடம் நடைபயணம் மேற்கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்க உள்ளதாகவும்.

ராகுல்காந்தி தமிழகத்தில் இருக்கும் நான்கு நாட்களிலும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் நடைபயணத்தில் பங்கேற்று ராகுலுக்கு பாராட்டு தெரிவிக்கிறார்கள். தமிழகத்தின் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறும் போது:-

இந்திய மக்களை பிரித்தாள நினைக்கும் ஆர்எஸ்எஸ்சின் சனாதன சித்தாந்தத்தால் அரசியல் சாசன சட்டத்திற்கும், அதில், முதன்முதலில் காமராஜரால் இடஒதுக்கீட்டுக்காக திருத்தம் கொண்டு வரப்பட்டு உருவாக்கப்பட்ட சமூகநீதிக்கும் பங்கம் ஏற்பட்டுள்ளது. இதனை ராகுல்காந்தி மக்களிடம் எடுத்துரைக்க இருப்பதே இந்த நடைபயணத்தின் முக்கிய நோக்கமாகும் 

மேலும், தவறான பொருளாதாரக் கொள்கை, விவசாய கொள்கை, தாறுமாறான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படவில்லை, கருப்புப் பணத்தை மீட்டு அனைத்து குடிமக்களுக்கும் தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இவற்றையெல்லாம் மக்களிடம் எடுத்துக் கூறி இளைஞர்களை, பெண்களைத் திரட்ட, சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே ராகுல்காந்தி இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறார். கண் பார்வையற்றோரும் ராகுல்காந்தியுடன் சிறிது தூரம் நடக்க இருக்கிறார்கள். மூத்த தலைவர் குமரி அனந்தன் ஒரு கதர் ஆடையை முதன் முதலாக ராகுல் காந்திக்கு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி அணிவித்து இந்த நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார் எனத் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்