காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது கடந்த சில மாதங்களாகவே அதிருப்தியில் இருந்து வந்த குலாம் நபி ஆசாத், கட்சியின்
தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஜி 23 தலைவர்கள் குழுவிலும் இடம் பெற்றிருந்தார்.அப்போதில் இருந்தே குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து விலகலாமெனப் பேசப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். குலாம் நபி ஆசாத் கட்சியின் தலைமையை விமர்சித்ததை வைத்து காங்கிரஸ் கட்சியினர், குலாம் நபி ஆசாத் பாஜகவின் பி டீம் என்றனர் .
ஆனால், இதையெல்லாம் நிராகரித்த குலாம் நபி ஆசாத், ஜம்மு காஷ்மீரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறலாம் என்ற தகவல் வரும் நிலையில், அங்குள்ள 90 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக குலாம் நபி ஆசாத் கட்சி ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
அதற்கான ஏற்பாடுகளும் தற்போது முழு வீச்சில் நடக்கிறது.குலாம் நபி ஆசாத்தின் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு கடந்த ஆண்டு முடிந்த போது, பிரதமர் நரேந்திர மோடி குலாம் நபி ஆசாத்தைப் பாராட்டி மிகவும் உருக்கமாக பேசினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி கண்கலங்கினார். பிரதமர் நரேந்திர மோடி இப்படி உருக்கமாகப் பேசியதையும், குலாம் நபி ஆசாத் காங்கிரசிலிருந்து விலகியதையும் ஒப்பிட்டு செய்திகள் வெளியாகின.
நரேந்திர மோடி இரக்கமற்ற நபராகவே இருந்திருக்க வேண்டும் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஏனென்றால் அவர் மனைவியுடனில்லை, குழந்தைகளும் மோடிக்கு இல்லை. ஆனால், எனது எண்ணத்திற்கு மாறாக மோடி தனது சிறந்த மனிதாபிமான எண்ணத்தை வெளிப்படுத்தினார்'' என்றார்.
காங்கிரசில் 50 ஆண்டுகள் பதவி சுகங்களை அனுபவித்தும், கட்சிக்காக எந்த பங்களிப்பையும் செய்யாதவர் குலாம் நபி ஆசாத் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில் குலாம் பாஜகவிற்கு சலாம் செய்கிறார் என்ற விமர்சனமும் வருகிறது தொண்டுள்ளம் கொண்டவருமில்லை. தொண்டர் படையைக் கண்டவரும் இல்லை. பாஜகவின் தூண்டுதலால் இன்று காங்கிரசை பலவீனப்படுத்த களம் கண்டுள்ளார்! வெற்றி பெறுவாரா? என்ற வினா எழுப்புகிறார்கள்.
காங்கிரஸ்காரர்களே பொறாமைப்படும் அளவிற்கு பல்வேறு பதவிகளையும், வாய்ப்புகளையும் பெற்றவர் குலாம் நபி ஆசாத் ! தற்போது அவர் “காங்கிரஸ் மீள முடியாத பின்னடைவு கண்டுவிட்டது ” எனவே நான் விலகுகிறேன் . காங்கிரசின் இந்த வீழ்ச்சிக்கு ராகுல் காந்தியே காரணம் என்ற கடிதம் மூலம் அம்பு வீசியுள்ளார்.
பாஜகவை ஆதரிக்க முடியாமலுள்ள சிறுபான்மையினர் வாக்கு வங்கியை காங்கிரசிடமிருந்து சிறிதளவாவது பிரித்தெடுத்து பாஜகவின் வளர்ச்சிக்கு சேவை செய்யவே குலாம் நபி ஆசாத்தின் தனிக் கட்சி துணை போகும் என்பது காங்கிரஸ் கட்சியின் வாதம் இந்த தனிக் கட்சி நடத்துவதற்கான பொருளாதாரத்திற்கு பாஜக மறைமுகமாக பொறுப்பேற்குமா அல்லது வேறு வழி உண்டா என்பது தான் தற்போது அங்குள்ள தலைவர்கள் மத்தியில் பேச்சாகும்
காங்கிரஸ் கட்சியில் கூட இருந்தே குழி பறித்த குலாம் நபி ஆசாத்! என்று பட்டம் சூட்டி காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் விமர்சனங்களில் உண்மை உண்டா என்பது விரைவில் தெரியும். எந்தெந்த மாநிலங்களில் பாஜகவின் அரசியல் ப சரியாக எடுபடவில்லையோ... அங்கெல்லாம் பிரபல நடிகர் நடிகைகள் தயவை நாடும் பாஜக. இதுவும் ஒரு வகை ஊழல் கலந்த அரசியல் தான் நடிகர்கள் மக்கள் ரசனையை வியாபாரமாக்கும் கருவி மக்கள் அன்றாடம் வாழ்வியலுக்குப் பயன்படாத பதர்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பாஜக முக்கிய தலைவர்களைச் சந்தித்தால் தங்களுக்கு ஐ.டி ரெய்டு பிரச்சினை ஏதும் வராது என்று அவர்கள் நம்புவதால் இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஊடகங்கள் வாயிலாக பெரிய அளவில் விளம்பரமாகிறது. இதுவும் ஒரு வகை தந்திர அரசியல் வியாபாரம் தானே தவிர வேறென்றுமில்லை.
அதே நேரத்தில் பிரகாஷ் ராஜ் போல பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக அரசின் செயல்பாடுகளை தீர்க்கமாக எதிர்க்கும் நடிகர் நடிகைகளும் உள்ளனர்...இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக காங்கிரஸ் பார்க்கும் ராகுல்காந்தி செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3500 கி.மீ., 150 நாள் 'இந்திய ஒற்றுமை பயணம்' மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த கீழ்கண்டவர்கள் தலைமையில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் இந்திய ஒற்றுமை பயண தமிழக ஒருங்கிணைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே. ஜெயக்குமார்,, மேற்பார்வையில் செயல்படும். குழு உறுப்பினர்கள் பட்டியல்.கன்னியாகுமரி காந்தி நினைவிடத்தில் தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியிடம் தேசிய கொடியை வழங்கி நடைபயணத்தை துவங்கி வைக்கிறார். அன்று கன்னியாகுமரியில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது. தமிழகத்தில் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு நாளும் 2 கூட்டணி கட்சித் தலைவர்கள் ராகுல்காந்தியோடு 10 நிமிடம் நடைபயணம் மேற்கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்க உள்ளதாகவும்.
ராகுல்காந்தி தமிழகத்தில் இருக்கும் நான்கு நாட்களிலும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் நடைபயணத்தில் பங்கேற்று ராகுலுக்கு பாராட்டு தெரிவிக்கிறார்கள். தமிழகத்தின் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறும் போது:-
இந்திய மக்களை பிரித்தாள நினைக்கும் ஆர்எஸ்எஸ்சின் சனாதன சித்தாந்தத்தால் அரசியல் சாசன சட்டத்திற்கும், அதில், முதன்முதலில் காமராஜரால் இடஒதுக்கீட்டுக்காக திருத்தம் கொண்டு வரப்பட்டு உருவாக்கப்பட்ட சமூகநீதிக்கும் பங்கம் ஏற்பட்டுள்ளது. இதனை ராகுல்காந்தி மக்களிடம் எடுத்துரைக்க இருப்பதே இந்த நடைபயணத்தின் முக்கிய நோக்கமாகும்
மேலும், தவறான பொருளாதாரக் கொள்கை, விவசாய கொள்கை, தாறுமாறான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படவில்லை, கருப்புப் பணத்தை மீட்டு அனைத்து குடிமக்களுக்கும் தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இவற்றையெல்லாம் மக்களிடம் எடுத்துக் கூறி இளைஞர்களை, பெண்களைத் திரட்ட, சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே ராகுல்காந்தி இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறார். கண் பார்வையற்றோரும் ராகுல்காந்தியுடன் சிறிது தூரம் நடக்க இருக்கிறார்கள். மூத்த தலைவர் குமரி அனந்தன் ஒரு கதர் ஆடையை முதன் முதலாக ராகுல் காந்திக்கு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி அணிவித்து இந்த நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார் எனத் தெரிவித்தார்.
கருத்துகள்