கல்லூரி மாணவர்களிடையே வருமான வரி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி
கல்லூரி மாணவர்கள் இடையே வருமான வரி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வருமான வரித் துறை , புதுச்சேரி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஜிப்மர் அரங்கில் நாளை மாலை 4 மணியளவில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் உறுப்பினர் திருமதி சங்கீதா சிங் தலைமை விருந்தினராக கலந்து கொள்வார்.
காரைக்கால் ஜிப்மர் நிறுவனத்தின் டீன் டாக்டர் அசோக் சங்கர்ராவ் பதே சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல வருமானவரி முதன்மை தலைமை ஆணையர் திரு ரவிச்சந்திரன் ராமசாமி முன்னிலை வகிப்பார். புதுச்சேரியைச் சேர்ந்த முன்னணி கல்லூரிகளின் மாணவர்கள் பெருமளவில் இதில் கலந்து கொள்கின்றனர். சென்னை வருமான வரி கூடுதல் ஆணையர்கள் திரு ஜே. பிரேம் ஆனந்த், திரு கே.என்.தண்டபாணி ஆகியோர் வருமானவரி குறித்த விவரங்களை படக்காட்சிகள் மூலம் விளக்குவார்கள்.
சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள், வரியைச் செலுத்தி மகிழ்ச்சியை வாங்குவோம் என்ற தலைப்பில் நாடகம் ஒன்றை நடத்தவுள்ளனர். புதுச்சேரி கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே, இதே நாடக குழுவினர், வருமானவரி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் இரவு எட்டு மணியளவில், தெரு நாடகம் ஒன்றை நடத்துகின்றனர்.
வருமானவரி குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் பொது அமர்வு ஒன்றும் நடைபெறும். வருங்காலத்தில் வரி செலுத்துபவர்களாக மாறவுள்ள இளைஞர்களிடத்தில் வருமான வரி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும்
கருத்துகள்