குடியரசுத் தலைவர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “விநாயகர் சதுர்த்தியின் புனித நாளில், இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஞானம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமான விநாயகரின் பிறந்தநாள், விநாயகர் சதுர்த்தி தினமாக கொண்டாடப்படுகிறது. விநாயகப் பெருமான், விக்னஹர்தராகவும், மங்கலமூர்த்தியாகவும் கருதப்படுகிறார். இந்த தருணத்தில் அன்பு, அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சி ஏற்பட விநாயகனை வழிபடுவோம்”விநாயக சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு, குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவருடைய செய்தியின் முழு விவரம் பின்வருமாறு:- விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, நான் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அறிவு மற்றும் செழுமையின் கடவுளான விநாயகர் பிறந்த தினம் விநாயகர் சதுர்த்தியாக பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தில் முழு முதல் கடவுளாக ஒவ்வொரு பக்தர்களாலும் விநாயகர் போற்றப்படுகிறார்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை, சாதி, நம்பிக்கை, மதம் அல்லது பிராந்திய எல்லைகளைக் கடந்து, இந்தியாவின் ஒருங்கிணைந்த கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. இந்நன்னாளில் அனைவரும் நல்ல உடல் நலம், மகிழ்ச்சி, வளமையுடன் வாழ நான் பிரார்த்திக்கிறேன்.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இராஜநாராயனபுரம் மருதங்குடியான பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் எனும் தேசிவினாயகர் அருள்பாலிக்கும் ஆலயத்தில் கஜமுக சூரசம்ஹாரம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் பிள்ளையார்பட்டி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது . 6 ஆம் நாள் மாலை முக்கிய நிகழ்வாக கஜமுக சூரசம்ஹாரம் நடைபெற்றது. முன்பாக வெள்ளி யானை வாகனத்தில் யானைத் தந்தத்துடன் எழுந்தருளிய கற்பக விநாயகருக்கு சிறப்பு தீபாராதனைகளும் நடந்த பின்னர் விநாயகர் கிழக்கு கோபுரம் வழியாக வந்து கோவில் வீதியை சூரனுடன் சுற்றி தெப்பக்குளம் வந்து. அங்கு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கற்பகவிநாயகரை வரவேற்று பெண்கள் வண்ணப் பூக்கோலமிட்டனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்தனர். 7 ஆம் நாள் திருவிழாவான இரவு மயில் வாகனத்திலும், எட்டாவது நாள் இரவு குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. 9-ஆம் நாள் விழா இன்று 30-ஆம் தேதி காலை திருத்தேருக்கு கற்பகவிநாயகர் எழுந்தருளலும், மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடந்தது. அன்றைய தினம் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரமும் நாளை. 31- ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா காலை கோவில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியும், மதியம் உச்சி கால பூஜை மற்றும் மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையலும், இரவு
பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை நடப்பு கோவில் டிரஸ்டிகள் கண்டனூர் நா.கருப்பஞ்செட்டியார், ஆத்தங்குடி சி.சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் செய்கின்றனர். பல்லவர் காலத்தில் துவங்கிய திருப்பணி இரண்டாம் திருப்பணி பாண்டிய மன்னர்கள் செய்து அதன் பின்னர் சோழநாட்டின் மகுடவைசியர் வழி நாட்டுக்கோட்டை நகரத்தார் 600 ஆண்டு கடந்த நிலையில் தற்போது நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்