காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னை விமான நிலைய விரிவாக்கம் செய்ய ஆட்சியில் முன்பிருந்த அதிமுக அரசு, மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தது.
அதைப் பயன்படுத்தி பரந்தூர் விமான நிலையம்: 12 கிராமங்களில் 4,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து கையகப்படுத்தப்பட உள்ள கிராமங்கள்!
சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச மற்றும் உள்ளூர் விமான நிலையமுள்ளது. தற்போது உள்ள மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு புதிதாக விமான நிலையம் விரிவாக்கம் வேறு ஒரு இடத்தில் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதற்காக, பன்னூர், பரந்தூர், திருப்போரூர், படாளம் ஆகிய இடங்களை அப்போதிருந்த அதிமுக அரசு தேர்வு செய்து பரிந்துரைத்தது. இந்த நான்கிடங்களில் இந்திய விமான நிலைய ஆய்வுக்குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டதில்,
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான புதிய விமான நிலையம் அமைக்க பரிந்துரைத்ததையடுத்து ஊழல் வாதிகளான சிலர் தனியார் நிலத்தை குறைந்த விலையில் வாங்கி அரசுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டு விலை குறைந்த நிலத்தை வாங்கி பதிவு செய்த நிலையில் அங்கு நஞ்சை, புஞ்சை நிலங்களின் மதிப்பு திடீரென பல மடங்கு உயர்ந்தது தமிழ்நாட்டில் சென்னை அடுத்து இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுமென்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜூலை மாதம் 1 ஆம் தேதி, மத்திய போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் அறிவித்தார். அதனால் தமிழ்நாட்டில் பிரமாண்டமான விமான நிலையம் பரந்தூரில் அமைவது உறுதியானது. தற்போது தமிழக அரசு விமான நிலையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் நிலம் கையகப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், பரந்தூரில் விமான நிலையம் வருவதால் நிலத்தின் மதிப்பை கடுமையாக உயர்த்தி ஏற்கனவே பத்திரப்பதிவு நடந்துருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த இந்த திட்டமிட்டு நடத்தப்பட்ட மோசடியில் பத்திரப் பதிவு அதிகாரிகள் பலருக்குத் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது விமானநிலையம் ரூபாய் .20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் தகவல் வெளியானதும், அங்குள்ள 73 ஏக்கர் நிலத்தின் மதிப்பீட்டை அதிகரிப்பதற்காக மோசடி செய்து விசாரணை விலையை உயர்த்தி பத்திரப்பதிவு நடந்துள்ளதன் படி, பிரகாஷ் சில்க்ஸ் அண்டு சாரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பரந்தூர், நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த 73 ஏக்கர் நிலத்தில் ஒரு சில பகுதிகளை ஏக்கர் அளவு இல்லாத மனையிட மதிப்பு போல சதுர அடியில் பதிவு செய்ய 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி காஞ்சிபுரம் இணை 2 சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணங்களைத் தந்தனர். அதனை 2020 ஆம் மார்ச் மாதம் 26 ஆம் தேதி அப்போதைய இணை 2 சார்பதிவாளராக இருந்த பிரகாஷ் மாவட்டப் பதிவாளருக்கு இதைப் பதிவு செய்ய முடியமா என்று விளக்கம் கேட்டு கடிதம் அனுப்புகிறார்.
அதில், குறிப்பிட்ட சர்வே எண். 631 முழுவதும் புஞ்சை நிலமாகவே உள்ளது. இந்த நிலையில் பசுமை விமான நிலையம் அமைய உள்ள சூழ்நிலையில், அதிகப் பரப்பளவில் அதிக சர்வே எண்களை ஏக்கர் விஸ்தீரணம் மாற்றி சதுரடியாக மாற்ற ஆவணம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்தும்போது இழப்பீட்டுத்தொகையை அரசை ஏமாற்றி அதிகமாகப் பெறுவதற்காக சதுரடியாக மாற்றிப் பதிவு செய்ய தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கூடுதல் பத்திரப்பதிவுத்துறைத் தலைவர் ஸ்ரீனிவாசன், பிரகாஷ் சில்க்ஸ் அண்ட் சாரீஸ் நிறுவனத்தின் நிலத்தை சதுர அடியில் பதிவு செய்ய வேண்டும் எனக் கடிதம் அனுப்புகிறார்.
இதனைப் பத்திரப்பதிவு செய்ய மறுத்த பிரகாஷை இடம் மாற்றம் செய்துவிட்டு, காஞ்சிபுரத்தில் 2 வது இணை சார்பதிவாளராக ராஜதுரை என்பவரை நியமனம் செய்தார். அவர் ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூபாய் .8,71,000 என இருந்ததை சதுரடி மதிப்பீட்டில் ஏக்கருக்கு ரூபாய். 64 லட்சத்து 45 ஆயிரத்து 455 என நிர்ணயம் செய்து பதிவு செய்கிறார். தற்பொழுதைய சூழ்நிலையில் கிராமப்புறங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்தப்படும்போது நில கையகப்படுத்தும் சட்டப்படி நான்கு மடங்கு மட்டுமே இழப்பீடு வழங்க வேண்டும். அதன்படி ரூபாய்.25 கோடி இழப்பீடு வழங்க வேண்டிய நிலையில், திட்டமிட்டு நடத்தப்பட்ட மோசடிப் பதிவு காரணமாக, இழப்பீட்டுத் தொகை ரூபாய்.191 கோடி என உயர்ந்தது. இதனால், ரூபாய்.165 கோடி கூடுதலாக அரசிற்கு இழப்பு ஏற்படும். எனவே, அரசு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த திட்டமிட்டு நடத்தப்பட்ட மோசடி ஊழலில் ஈடுபட்ட கூடுதல் ஐஜி கே.வி.ஸ்ரீனிவாசன், சார்பதிவாளர் ராஜதுரை மீதும், பிரகாஷ் சில்க்ஸ் அண்டு சாரீஸ் நிறுவனத்தினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். ஸ்ரீனிவாசன் மற்றும் மோசடியில் ஈடுபட்ட பொது ஊழியர்களையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என அறப்போர் இயக்கம் சார்பில் குற்றம்சாட்டப்பட்டு, புகார் மனு ஆதாரங்கள் இணைத்து தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர், ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, பத்திரப்பதிவுத் துறை செயலாளர் ஆகியோருக்கு அனுப்பினர்.
பரந்தூர் கிராமத்தில் காஞ்சிபுரம் 2 எண் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில், ஆவணங்களின் மூலம் பிரகாஷ் சில்க்ஸ் அண்ட் சாரீஸ் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு தனி நபர்களால் கிரையப் பத்திர ஆவணங்கள் எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் பல சர்வே எண்களில் அடங்கிய சுமார் 73 ஏக்கரில் 1.17 ஏக்கர் நிலம் என கிரையம் எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு அதிக பட்சம் ஏக்கருக்கு ரூபாய்.11,39,000 என உள்ள நிலையில், இந்த ஆவணங்களில் சதுர அடி ஏக்கருக்கு ரூபாய்.65,40,000 என ஊழல் முறை அனுசரிக்கப்பட்டுள்ளது. மேலும், கிரையம் செய்யப்பட்ட ஏக்கர் 1.17 நிலம் எந்த சர்வே எண்களில் கட்டுப்பட்டது என குறிப்பிடப்படவில்லை. ஆகவே சென்னை விமான நிலையம் எதிர்காலத்தில் அமைக்கப்பட்டால் அரசிடமிருந்து அதிக இழப்பீட்டுத் தொகை பெறும் நோக்கில் இந்த ஆவணங்கள் பதியப்பட்டுள்ளன என்ற முடிவுக்கு வர வலுவான முகாந்திரம் உள்ளது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருந்தார்.
மேலும், இந்த ஆவணங்கள் அனைத்தும் அதிமுக ஆட்சிக் காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆவணங்களைப் பதிவு செய்த பதிவு அலுவலர் இராஜதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும், அதற்கு உதவிய உயர் அலுவலர் மீது இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறைக்கு ஏற்கனவே கடிதம் எழுதப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்திருந்தார். அரசுக்கு இழப்பு ஏற்படாத வகையிலும் நில உடமையாளர்களுக்கு உரிய மற்றும் சட்டப்படியான இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் வகையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாநிலத்தில் எந்த ஒரு நிலத்தின் மதிப்பையும் சரி செய்ய பதிவு துறை தலைவர் தலைமையிலான மைய வழிகாட்டு குழுவுக்கு அதிகாரம் உண்டு. விமான நிலையம் அமைவதற்கு நிலமெடுப்பு துவங்கி வழங்க இருக்கும் விவசாயிகள் மற்றும் நில உடமைதாரர்களுக்கு உரிய மற்றும் சட்டப்படியான இழப்பீட்டுத் தொகை வழங்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமெனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பரந்தூர் விமானநிலையம் அமைய உள்ள இடங்களில், அரசிடமிருந்து அதிக இழப்பீட்டுத் தொகை பெறும் நோக்கில் ஆவணங்களை பதிவு செய்தது குறித்து எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் சார்பதிவாளர் ராஜதுரை சஸ்பென்ட் செய்யப்பட்டார். மேலும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஐஜி ஸ்ரீனிவாசன் குறித்து பதிவுத்துறை அறிக்கை அனுப்பியது.
இதுகுறித்து விசாரணை செய்த லஞ்ச ஒழிப்பு துறை, ஐஜி ஸ்ரீனிவாசன் குறித்த குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக பதிவு துறைக்கு அறிக்கை அனுப்பியதையடுத்து, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தியின் வழிகாட்டுதலின் பேரில் துறைச் செயலாளர் ஜோதி நிர்மலா சாமி, மோசடியில் ஈடுபட்ட கூடுதல் ஐஜி ஸ்ரீனிவாசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும் ஐஜி ஸ்ரீனிவாசன் குறித்து நடத்திய விசாரணையில் அவர் முறைகேடாக பல்வேறு பத்திரப்பதிவுகள் செய்துள்ளதும் தெரியவந்தது. மதுரை மாவட்டம் சாமநத்தத்தில் பிஏசிஎல் கம்பெனிக்குச் சொந்தமான இடங்களை லோதா கமிட்டி மற்றும் செபி நடவடிக்கை உள்ள நிலையில் வாங்கவோ, விற்கவோ கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் தடையையும் மீறி, இந்த நிலங்களை பதிவு செய்ய எழுத்து மூலமாக ஐஜி ஸ்ரீனிவாசன் அனுமதி வழங்கியுள்ளார். இக் காரணத்திற்காகவும் கூடுதல் ஐஜி ஸ்ரீனிவாசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் இம்மாதம் இறுதியில் ஓய்வு பெறுகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. விரைவில் விசாரணைக்கு பின்னர் சிறை செல்வார்.பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இரண்டாவது உயர் அதிகாரி இவர். இந்த 500 ரூபாய் லஞ்சம் வாங்கும் ஆட்களை கைது செய்து நீதியை நிலைநாட்டும் DVAC, 620 கோடி நெடுஞ்சாலைத்துறை ஊழல் பழனி மற்றும் PACL மற்றும் பரந்தூர் பத்திரப்பதிவு மோசடி சீனிவாசனை எப்பொழுது கைது செய்து சிறையில் அடைக்க போகிறார்கள்? என்ற வினா எழுகிறது. பரந்தூரில் பறக்கும் விமானங்கள் வரும் முன்பே ஊழல் வாதிகளைப் பறக்க விட்டது
கருத்துகள்