தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள் -1 தேர்வு நிர்வாகக் காரணங்களால் ஒத்தி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி வரை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் வழங்கப்பட்டதனைத்தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வில், முதல் தாளுக்கு 2,30,878 நபர்களும் மற்றும் இரண்டாம் தாளுக்கு 4,01,886 நபர்களென 6,32,764 நபர்கள் மொத்தம் விண்ணப்பித்திருந்த நிலையில் தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளை ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடத்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டிருந்தது. இந்த தேர்வு எழுதுவதற்காக 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனரென தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது நிர்வாகக் காரணங்களினால் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதி மாற்றப்பட்டது.அதன்படி, தாள் ஒன்றுக்கான தேர்வு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை கணிப்பொறி மூலம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள்-1 தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படுமென்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிகழ்வு தேர்வர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்