முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மங்களூரூவில், ரூ.3,800 கோடி மதிப்பிலான இயந்திரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

மங்களூருவில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்

மங்களூருவில் சுமார் ரூ.3,800 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார்

“வளர்ந்த இந்தியாவை உருவாக்க, 'இந்தியாவில் உற்பத்தி' மற்றும் நாட்டின் உற்பத்தித் துறையை மேம்படுத்துவது மிகவும் அவசியம்"


“சாகர்மாலா திட்டத்தின் மூலம் அதிக அளவில் பயனடைந்தவற்றில் கர்நாடக மாநிலமும் ஒன்று”

“கர்நாடகாவில் 30 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்களுக்கு முதல் முறையாக குழாய் மூலம் குடிநீர் வசதி”

“கர்நாடகாவில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம்

30 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகள் பயனடைந்துள்ளனர்”

“சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும் போது, நமது குடிசைத் தொழில்கள், கைவினை கலைஞர்கள், தெருவோர வியாபாரிகள், ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்கள் பயனடைவர்”

"இன்று டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை வரலாற்று சிறப்புமிக்க நிலையில் உள்ளது பிம் –யூபிஐ போன்ற நமது புதிய கண்டுபிடிப்புகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன"


“சுமார் 6 லட்சம் கி.மீ. கண்ணாடி இழை கேபிள்கள் மூலம் கிராமப் பஞ்சாயத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளன”

பிரதமர் திரு.நரேந்திர மோடி, மங்களூரூவில், ரூ.3,800 கோடி மதிப்பிலான இயந்திரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.  

அங்கு திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், இந்திய வரலாற்றில் இந்த நாள் என்றும் நினைவில் நிறுத்த தக்க நாளாகும் என்று அவர் தெரிவித்தார். பிராந்திய பாதுகாப்பாக இருந்தாலும், பொருளாதார பாதுகாப்பாக இருந்தாலும், இந்தியா மிகப்பெரிய வாய்ப்புகளை பெற்றுள்ளது. இன்று காலை ஐஎன்எஸ் விக்ராந்த் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், இதனால் ஒவ்வொரு இந்தியரும் பெருமை அடைவதாக தெரிவித்தார்.

இன்று தொடங்கப்பட்ட மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இவை, கர்நாடகாவில் வாழ்க்கையை எளிதாக்குவதையும், வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும் என்றார். 'ஒரு மாவட்டம், ஒரு உற்பத்திப் பொருள்' என்ற திட்டம், மீனவர்கள், கைவினைஞர்கள் மற்றும் விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு  சந்தை கிடைக்க வழிவகை செய்யும் என்று அவர் கூறினார்.

ஐந்து உறுதிமொழிகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், செங்கோட்டையிலிருந்து தாம் பேசிய ஐந்து உறுதிமொழிகளில் முதன்மையானதாக இருப்பது, வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதாகும் என்றார். “வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க, நாட்டின் பொருள் உற்பத்தித் துறையை விரிவுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை நோக்கிய நாட்டின் முயற்சிகளை எடுத்துரைத்த பிரதமர், இது வளர்ச்சிக்கான முக்கிய மந்திரம் என்பதை வலியுறுத்தினார். இத்தகைய முயற்சிகளின் விளைவாக, வெறும் 8 ஆண்டுகளில் இந்திய துறைமுகங்களின் திறன் ஏறத்தாழ இருமடங்காக அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 8 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு முன்னுரிமை அளித்து வருவதாக சுட்டிக்காட்டிய பிரதமர், இதன் மூலம் கர்நாடகா அதிக அளவில் பயனடைந்துள்ளதாக கூறினார். “சாகர்மாலா திட்டத்தின்கீழ், அதிக அளவில் பயன் பெற்ற மாநிலங்களில் கர்நாடக மாநிலமும் ஒன்று” என்று பிரதமர் மேலும் கூறினார். கர்நாடகாவில், கடந்த 8 ஆண்டுகளில் 70 ஆயிரம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்கள் சேர்க்கப்பட்டு, ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கர்நாடகாவின் ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், நாட்டில் 3 கோடிக்கும் அதிகமான ஏழைகளுக்கு வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன என்றும், 8 லட்சத்துக்கும் அதிகமான கான்க்ரீட் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். “ஆயிரக்கணக்கான குடும்பங்கள், வீடுகள் கட்ட கோடிக்கணக்கான ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் கூறினார்.

ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் நாட்டில் வெறும் 3 ஆண்டுகளில் ஆறு கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 30 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்களுக்கு முதல் முறையாக குழாய் மூலம் குடிநீர் வசதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், கர்நாடகாவில் 30 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகள் பயனடைந்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.


நலிந்த பொருளாதார நிலைகள் காரணமாக மறக்கப்பட்ட மனிதர்கள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை தமது அரசு உறுதி செய்துள்ளது என்று கூறிய பிரதமர்,  சிறு விவசாயிகள், சிறு வியாபாரிகள், மீனவர்கள், தெருவோர வியாபாரிகள் போன்றோர்  அரசின் வளர்ச்சித்திட்ட பயன்களை முதன்முறையாக பெறத்தொடங்கி உள்ளனர். இந்தியாவின் வளர்ச்சி நீரோட்டத்தில் அவர்கள் இணைந்துள்ளனர் என்று பிரதமர் தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும் போது, நமது குடிசைத் தொழில்கள், கைவினை கலைஞர்கள், தெருவோர வியாபாரிகள், ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்கள் பயனடைவர் என்றும் அவர் கூறினார்.

இன்று டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை வரலாற்று சிறப்புமிக்க நிலையில் உள்ளது  என்றும் பிம்–யூபிஐ போன்ற நமது புதிய கண்டுபிடிப்புகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். சுமார் 6 லட்சம் கி.மீ. கண்ணாடி இழை கேபிள்கள் மூலம் கிராமப் பஞ்சாயத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட அவர், 5-ஜி வசதி இந்தத் துறையில் புதிய புரட்சியை கொண்டுவர இருப்பதாக கூறினார். கர்நாடகாவின்  இரட்டை என்ஜின் அரசு மக்களின் தேவைகளையும், விருப்பங்களையும், அதிவேகமாக நிறைவேற்ற பணியாற்றுகிறது என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு உலகளாவிய தடங்கல்கள் பல இருந்த போதும், இந்தியாவின் ஏற்றுமதி அளவு 670 பில்லியன் அமெரிக்க டாலர்   அதாவது ஐம்பது லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு இருந்ததாக அவர் கூறினார்.  மேலும், சவால்கள் பலவற்றை வென்று 418 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது ரூ.31 லட்சம் கோடி மதிப்பில் வணிகப் பொருள் ஏற்றுமதி செய்து இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது என்று பிரதமர் கூறினார்

கடந்த பல ஆண்டுகளாக கடல்வழி போக்குவரத்து குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருப்பது கண்கூடாக தெரிகிறது என்று கூறிய பிரதமர், துறைமுக இணைப்பு சிறப்பானதாகவும், துரிதமானதாகவும் இருப்பதற்கு அரசு முயற்சி செய்கிறது என்றார். துறைமுகங்களுக்கிடையே தடையில்லா தொடர்புக்கு உதவும் வகையில் இருநூற்று ஐம்பதுக்கும் அதிகமான இரயில்வே மற்றும் சாலைத்திட்டங்கள், தேசிய பெருந்திட்டமான பிரதமரின் விரைவுசக்தி திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று திரு மோடி குறிப்பிட்டார்.

இந்திய மண்ணை அடிமைதளைகளிலிருந்து மீட்பற்கு ராணி அபாக்கா, ராணி சென்னபைர தேவி ஆகியோரின் போராட்டங்களை பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்த தீரம் மிக்க பெண்கள், இந்தியாவிற்கு ஊக்கசக்தியாக விளங்குகின்றனர் என்று அவர் கூறினார்.

இந்த விழாவில்,  கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட், முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் திரு பி எஸ் எடியூரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த