முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மின் கட்டண உயர்வுக்கெதிராக கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் கட்டணம்

மின் கட்டண உயர்வுக்கெதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில்,


'தமிழ்நாடு அரசு மின் விநியோகக் கட்டணத்தை 32 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை கடுமையாக உயர்த்தியுள்ளதன் மூலம் மின் வாரியத்துக்கு 59 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் அதிகரிக்குமெனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது மின் நுகர்வோர் தலையில் கடுமையான செலவுச் சுமை ஏற்றப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின்கட்டணம் குறைவு என்பதால், ஒன்றிய அரசு மின் கட்டணத்தை உயர்த்துமாறு தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறதென்றும், கடந்த எட்டு ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பதையும் காரணம் காட்டி கட்டண உயர்வை நியாயப்படுத்த முயற்சிப்பது சரியல்ல.

மின்கட்டண உயர்வு தவிர நிலைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதும், ஆண்டுக்கு 6 சதவிதம் மின்கட்டண உயர்வு செய்து கொள்ளவும் வழிவகை செய்திருப்பதை ஏற்க முடியாது. மத்திய பாஜக அரசின் தாராளமயக் கொள்கைகள், மக்கள் வாழ்க்கைத் தரத்தில் கடுமையான தாக்குதலை நடத்தி, சரித்து வீழ்த்தி வரும் சூழலில், தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை மிகக் கடுமையான அளவில் உயர்த்தியிருப்பது மக்களிடம் ஆத்திரத்தையும், அதிருப்தியினையும் ஏற்படுத்தியுள்ளது.

தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுடன் மின்சாரம் கொள்முதல் தொடர்பான ஒப்பந்தங்கள் வாரியத்துக்கு ஏற்படுத்தும் பெருநஷ்டத்தை மூடிமறைப்பது ஏன்? என்ற வினாவுக்கும் ஏற்கத்தக்க விளக்கம் கிடைக்கவில்லை. தற்போது, நடைமுறையிலுள்ள 100 யூனிட் இலவச மின்சாரமும், மானிய சலுகை கட்டண முறையும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது எனினும், இந்தக் கட்டணச் சலுகையை விரும்பாதவர்கள், வாரியத்துக்கு தெரிவிக்கலாம் என்று கூறியிருப்பது மறைமுக நிர்பந்தம் மூலம் மானியங்களை பறிக்கும் செயலாகவே அமையும் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

மின்கட்டண உயர்வு தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டங்களில் மின்நுகர்வோர் கூறிய கருத்துக்களுக்கு மதிப்பளித்து, உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை நிறுத்தி வைத்து, நிலைக் கட்டணம் வசூலிப்பதையும், ஆண்டுக்கு 6 சதவீதம் மின் கட்டண உயர்வு செய்யும் திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும். மின்கட்டணத்தை வெகுவாக குறைத்து, புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.' எனத் கூறியுள்ளார்.  அதேபோல, சிபிஐ(எம்) கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மோடி அரசின் பொருளாதாரக் கொள்கையை கண்டிக்கும் தமிழ்நாடு அரசு, தன் பங்கிற்கு மின் கட்டணத்தை உயர்த்துவது நியாயமற்ற செயல். மின்வாரிய நெருக்கடியை சமாளிக்க அரசியல் கட்சிகள், துறைசார்ந்த நிபுணர்கள், செயல்பாட்டாளர்கள் முன்வைத்துள்ள ஆக்கப்பூர்வமான மாற்று ஆலோசனைகளை செயல்படுத்துவதற்கு மாறாக மக்கள் தலையில் சுமையை ஏற்றுவது அரசுக்கு அவப்பெயரையே உருவாக்கும்.' எனத் தெரிவித்துள்ளார்.

வீட்டு உபயோக மின் கட்டணத்தை பொறுத்தவரை, கர்நாடகா, குஜராத் மாநிலங்களை விட தமிழகத்தில் மிக குறைந்த கட்டணமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது  100 யூனிட்டுக்குள் பயன்படுத்துபவர்கள், ஒரு கோடி பேர் வரை உள்ளனர். இந்த ஒரு கோடி நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை. அடுத்ததாக, 101 முதல், 200 யூனிட் வரை பயன்படுத்துவோர், 63 லட்சத்து, 35 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கு ஒரு மாதத்துக்கு, 27.50 ரூபாய் மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஒரு நாளைக்கு ஒரு ரூபாயை விடக் குறைவு.


மொத்தம், 201 முதல், 300 யூனிட் வரை பயன்படுத்துவோர், 36 லட்சத்து, 25 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கு, 72.50 ரூபாய் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல, 301 முதல், 400 யூனிட் வரையிலான, 18 லட்சத்து, 82 ஆயிரம் பேருக்கு, ஒரு மாதத்துக்கு, 147.50 ரூபாய் என்ற அளவில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.  இதே கட்டணங்களை கர்நாடகாவுடன் ஒப்பிடுகையில், 100 யூனிட் வரை ஆரம்ப கட்டத்திலேயே, 4.30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. குஜராத்தில், 5.25 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில், 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தும், 63 லட்சம் மின் நுகர்வோருக்கு, 4.50 ரூபாய் கட்டணம் நிர்ணயித்தாலும், 2.25 ரூபாய் மானியமாக வழங்கப்படவுள்ளது.

தமிழக அரசு வாயிலாக, 9,000 கோடி ரூபாய் கடந்த ஆண்டு மானியம் வழங்கிய நிலையில், இந்த ஆண்டு, 3,500 கோடி அளவுக்கு அரசு மானியம் வழங்கியுள்ளது. வீட்டு உபயோக மின் கட்டணத்தை பொறுத்தவரை, கர்நாடகா, குஜராத் மாநிலங்களை விட, மிக குறைந்த கட்டணமே தமிழகத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை பொறுத்தவரை, 2.26 லட்சம் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்துக்கு, 50 காசுகள் மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த நிலையில் உள்ள, வணிக நுகர்வு மின்சாரம் பயன்படுத்தும், 19 லட்சத்து, 28 ஆயிரம் பேருக்கும், 50 காசுகள் தான் உயர்த்தப்பட்டுள்ளது.சென்ற மாதம், 9 ஆம் தேதி வரை பழைய முறையில் மின் கணக்கீடு இருக்கும். நேற்று முன்தினம் முதல் புதிய கட்டண விகிதப்படி இருக்கும். புதிய மின் இணைப்புக்கான பல்வகை கட்டணமும், ஒரு முனைக்கு, 9,250 ரூபாயாகவும், மும்முனைக்கு, 9,600 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வீடுகளுக்கு ஒருமுனை, மும்முனை என, இரு பிரிவுகளில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. புதிய மின் இணைப்பு வழங்கும் போது பதிவு கட்டணம், இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீடு, வளர்ச்சி கட்டணம், வைப்புத்தொகை போன்றவற்றை உள்ளடக்கிய பல்வகை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதில் வளர்ச்சிக் கட்டணம் மட்டும், தரைக்கு அடியில், 'கேபிள்' வாயிலாக மின் வினியோகம் செய்யும் இடங்களிலும், மின் கம்பத்தில் வினியோகம் செய்யும் இடங்களிலும் வேறுபடுகிறது. ஒருமுனை இணைப்புக்கு மின் கம்பம் உள்ள இடங்களில் பதிவு கட்டணம், 100 ரூபாய்; இணைப்பு கட்டணம், 500; மீட்டர் காப்பீடு, 600; வளர்ச்சி கட்டணம், 1,400; வைப்பு தொகை, 200 என, மொத்தம் 2,800 ரூபாய் வசூலிக்கப் பட்டது.

கேபிள் வழியாக மின் வினியோகிக்கும் இடங்களில் பதிவு கட்டணம், 100 ரூபாய்; இணைப்பு கட்டணம், 500; மீட்டர் காப்பீடு, 600; வளர்ச்சி கட்டணம், 5,000; வைப்பு தொகை, 200 என, மொத்தம் 6,400 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அதேபோல, மும்முனை இணைப்புக்கு மின் கம்ம் உள்ள இடங்களில், 5,150 ரூபாயும், கேபிள் வாயிலாக மின் வினியோகிக்கும் இடங்களில், 6,650 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது 

தற்போது  ஒரு முனை இணைப்புக்கு மின் கம்பம் உள்ள இடங்களில் பதிவு கட்டணம் 200 ரூபாய்; இணைப்பு கட்டணம் 1,000; மீட்டர் காப்பீடு 750; வளர்ச்சி கட்டணம் 2,800; வைப்பு தொகை 300 என, மொத்தம் 5,050 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கேபிள் மின் வினியோகிக்கும் இடங்களில் பதிவு கட்டணம் 200 ரூபாய்; இணைப்பு கட்டணம் 1,000; மீட்டர் காப்பீடு 750; வளர்ச்சி கட்டணம் 7,000; வைப்பு தொகை 300 என, மொத்தம் 9,250 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மும்முனை இணைப்புக்கு மின் கம்பம் உள்ள இடங்களில் பதிவு கட்டணம் 200 ரூபாய்; இணைப்பு கட்டணம் 1,500; மீட்டர் காப்பீடு 2,000; வளர்ச்சிக் கட்டணம் கிலோ வாட்டிற்கு 2,000; வைப்பு தொகை கிலோ வாட்டிற்கு 900 என, மொத்தம் 6,600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கேபிள் மின் வினியோகத்திற்கு பதிவு கட்டணம் 200 ரூபாய்; இணைப்பு கட்டணம் 1,500; மீட்டர் காப்பீடு 2,000; வளர்ச்சி கட்டணம் கிலோ வாட்டிற்கு 5,000; வைப்பு தொகை கிலோ வாட்டிற்கு 900 என, மொத்தம் 9,600 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. வீடுகளுக்கு ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும், 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்தப்பட உள்ளது. அப்போது, ஒருமுனை மின் இணைப்பிற்கு மீட்டர் வைப்புத் தொகையாக, 5,200 ரூபாயும்; மும்முனை இணைப்பிற்கு 7,100 ரூபாயும் வசூலிக்கப் படும்

வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில், மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணம், 300 ரூபாயில் இருந்து, 600 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, உயரழுத்த பிரிவில், 3,000 ரூபாயில் இருந்து 6,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது

உயரழுத்த பிரிவில் மீட்டர் வாடகை கட்டணம், 2,600 ரூபாயில் இருந்து, 3,700 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது

தாழ்வழுத்த பிரிவில் மீட்டர் பழுது, எரிந்தது உள்ளிட்ட காரணங்களுக்காக, மீட்டரை மாற்றும் கட்டணம் ஒருமுனை இணைப்பிற்கு 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாகவும்; மும்முனை இணைப்பிற்கு 750 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல, தாழ்வழுத்த மற்றும் உயரழுத்த பிரிவில் பல்வேறு சேவைகளுக்கான பல்வகை கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.பிறப்பிக்கப்படும்.இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த