1715 ஆம் ஆண்டு பிறந்த மாமன்னர் காத்தப்ப பூலித்தேவரின்
வீரமும் நினைவும் போற்றப்படும்.
வேலூர் சிப்பாய் கலகம் அல்லது புரட்சி ஜூலை மாதம் 1806 ஆம் ஆண்டு. அதில் 200 ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனியின் போர் வீரர்களும் 600 தென் இந்திய சமஸ்தான சிப்பாய்களும் கொல்லப்பட்டனர்.
திருக்குற்றாலநாதர் ஈசன் கோவிலில் உள்ள கல்வெட்டு விவரப்படி பிற்கால தென்காசி பாண்டியனான "இறந்த காலம் எடுத்த" அழகன் பெருமாள் சீவல வரகுணராம பாண்டிய குலசேகர தேவரின் காலம் என்பது சக வருடம் 1675 இது கிபி 1753க்கு சமமான ஆண்டு. நான்காம் வரகுண காத்தப்ப பூலித் தேவரின் காலம் கிபி 1715-1767 திருநெல்வேலி சீமையில் 1750களில் வாழ்ந்த இப்பாண்டியர்களை மறைத்து, மறந்து எல்லா சாதியும் பாண்டிய மன்னனுக்கு சாதி சர்டிபிகேட் கொடுத்து கதை எழுதி வருவது வேடிக்கையாக உள்ளது.
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ராணுவ தளபதி, மெட்ராஸ் மாகாண கவர்னர் பெண்டிங் பிரபு இலண்டன் உத்தரவு திருப்பி அழைக்கப்பட்டனர். சிப்பாய்க் கலகத்திற்கு (1857) ஒரு நூற்றாண்டிற்கு முன்பே அடக்குமுறைக்கு எதிரான விடுதலைப் போராட்டம் தென் தமிழகத்தில் தொடங்கி விட்டது. அந்த வரிசையில் இந்திய மண்ணின் முதல் சுதந்திரப் போர் வீரர்: மாமன்னர் காத்தப்ப இராஜா பூலித்தேவர்
தாமிரபரணிக் கரையின் நெல்லைப் பகுதியில் சங்கரன் கோவில் பகுதியில் நெற்கட்டான்செவலை தலைமை இடமாகக் கொண்டு பரம்பரையாக ஆண்டு வந்த பாளையக்காரர். மன்னர் காத்தப்ப பூலித்தேவரின் திறமை கண்டு பன்னிரண்டாவது வயதிலேயே பட்டம் சூட்டி மன்னராக்கினர் பெற்றோர்.
"… மிளையும் கிடங்கும் வளைவிற் பொறியும்
கருவிர லூகமும்கல்லிமிழ் கவணும்
பரிவுறு வெந்நெயும்பாகடு குநிசியும்,
காய்பொன் னுலையும் கல்லிடு கூடையும்
தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும்
கவையும் கழுவும் புதையும் புழையும்
ஐயவித் துலாமும் கைபெய ருசியும்
சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்
எழுவும் சீப்பும் முழுவிறற் கணையமும்
கோலும் குந்தமும் வேலும் பிறவும்...”
—ஆதிகால காதை - மதுரைக் காண்டம்
—சிலப்பதிகாரம் (வரி 207- 217) கள் கூறும் பாடல் அவருக்கே பொருந்தும்.
101 - "மாற்றவர் மறப்படை மலைந்துமதில் பற்றின்
நூற்றுவரைக் கொல்லியொடு நூக்கியெறி பொறியுந்
தோற்றமுறு பேய்களிறு துற்றுபெரும் பாம்புங்
கூற்றமன கழுகுதொடர் குந்தமொடு கோண்மா.
102 - விற்பொறிகள் வெய்யவிடு குதிரைதொட ரயில்வாள்
கற்பொறிகள் பாவையனம் மாடமடு செந்தீக்
கொற்புனைசெய் கொள்ளிபெருங் கொக்கெழில்செய்கூகை
நற்றலைக டிருக்கும்வலி நெருக்குமர நிலையே.
103 - செம்புருகு வெங்களிக ளுமிழ்வதிரிந் தெங்கும்
வெம்புருகு வட்டுமிழ்வ வெந்நெய்முகந் துமிழ்வ
வம்புமிழ்வ வேலுமிழ்வ கல்லுமிழ்வ வாகித்
தம்புலங்க ளால்யவனர் தாட்படுத்த பொறியே.
104 - கரும்பொனியல் பன்றிகத நாகம்விடு சகடங்
குரங்குபொரு தகரினொடு கூர்ந்தரிவ நுண்ணூல்
பரந்தபசும் பொற்கொடிப தாகையொடு கொழிக்குந்
திருந்துமதி றெவ்வர்தலை பனிப்பத்திருந் தின்றே.— — → (சீவக சிந்தாமணி - நாமகள் இலம்பகம் - 101- 104)........ஆகியன நம் தமிழக பழங்கால வீரம் உணர்த்தும்.
இந்தியத் திரு நாட்டின் சிறப்பு வாய்ந்த சமஸ்தானம் நெற்கட்டான்செவல் பாளையம் விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதல்முதலாக 1750 ஆம் ஆண்டில் வீர முழக்கமும் யுத்த பிரகடனம் செய்தவர். ஜாதிபாரா நீதி பரிபாலனம் செய்த மன்னர்கள் வரிசையில் இடமுண்டு. இவரது தளபதிகள் சின்னக்காலாடி, பெரியகாலாடி, உள்ளிட்ட பலரையும் நினைவுகூர்வோம் இன்று.
ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனியாருக்கு எதிராக முதல் குரல் மாத்திரமல்ல முதல் யுத்தமும் செய்த தென்னகத்து மன்னர் வீரசிவாஜி போல இவரும் வரலாறு படைத்த மன்னர் தான். நெல்லைச் சீமையிலிருந்து இவர் மூலமே எழுந்தது
1750 ஆம் ஆண்டு முதல் 1767 ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 17 ஆண்டுகளில் பலமுறை வெள்ளைக்காரர்களோடு பூலித்தேவர் யுத்தம் செய்திருக்கிறார். 1750 ஆம் ஆண்டில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி கவர்னர் இராபர்ட் கிளைவ் திருச்சிராப்பள்ளிக்கு வந்து பிரிட்டிஷ் கொடியை ஏற்றிவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை வந்து சந்தித்துப் பேட்டி காண வேண்டுமென்ற அறிவிப்பைக் கொடுத்ததனால் வெகுண்ட மன்னர் பூலித்தேவர் திருச்சிராப்பள்ளிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்து வெற்றிபெற்றாரென 'பூலித்தேவன் சிந்து' என்ற கதைப்பாடல் கூறுகிறது. ஆங்கில இராபர்ட் கிளைவுடன் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் சந்தித்திருக்கலாம் என்வும் கருதப்படுகிறது.
1755 ஆம் ஆண்டு கர்னல் கீரோன் (கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான்) தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட கட்டாயப்படுத்தியபோது தன்னுடைய நிலப்பகுதியில் வரி வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடித்து வெற்றி கண்டதுடன், களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்தார். அதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காட்டு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார்.
1756 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் திருநெல்வேலியில் மாபஸ்கானுடன் புலித்தேவர் நடத்திய போரில் புலித்தேவனின் உயிர்த்தோழன் மூடேமியாவை ஆங்கிலேயர்கள் துண்டு துண்டாக வெட்டியதால் மனமுடைந்த புலித்தேவர் போரை நிறுத்தித் திரும்பினார். அதனால் மாபஸ்கான் திருநெல்வேலியை தன்வசப்படுத்தினான். 1765 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வாசுதேவநல்லூர் கோட்டையைத் தாக்கிய காப்டன் பெரிட்சனும் மன்னர் புலித்தேவரிடம் தோற்றார்.
1760 ஆம் ஆண்டு யூசுபுகான் நெற்கட்டும் செவல் கோட்டையைத் தாக்கிய போதும், 1766 ஆம் ஆண்டு கேப்டன் பௌட்சன் வாசுதேவநல்லூர்க் கோட்டையைத் தாக்கிய போதும் அதை முறியடித்து வெற்றி கண்டார். 1766 ஆம் ஆண்டு தொடர்ந்து ஆங்கிலேயரிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும், கொடூரமான போர்முறைக்கும் பெயர் பெற்றவனுமாகிய மதுரை பணையூரைச் சேர்ந்த மருதநாயகம் பிள்ளை மதம் மாறிய ஆங்கிலேயருக்கு இந்தியர்களைக் காட்டிக்கொடுத்த முதல் துரோகி கான்சாகிப்பால் மன்னர் பூலித்தேவரை ஆரம்பத்தில் வெல்ல முடியாமல் சுமார் 10 ஆண்டுகள் போரிட்டு பீரங்கிகளை வரவழைத்தததன் பின்னர் தான் பூலித்தேவர் தோல்வியடைந்தார்.
அதன்பின்பு தான் சங்கரன் கோவில் ஆலயத்தில் சென்று மறைந்தது வரலாறு. பரப்பளவில் ஒரு சிறிய பாளையத்திற்கு மட்டும் மன்னரானாலும் பூலித்தேவரால் இராபர்ட் கிளைவ் போன்ற இராணுவ பலம் கொண்ட ஆங்கிலேயக் கிழக்கிந்தியர்களையும், மருதநாயகம் பிள்ளை என்ற கான்சாகிப் போன்ற கைக்கூலிப்படைகளையும் எதிர்த்துப் பன்னிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து போர் புரிய முடிந்தது தான் வீரம்.
முதலில் ஆதரவான திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மனும் மற்றும் பாளையக்காரர்களும் மன்னரைக் கைவிட்டு பிரிட்டிஷாரோடு இணைந்து விட்டார்கள், நம்பிக்கையான தளபதி வெண்ணிக் காலடி, முடேமியா என்ற பட்டாணியத் தலைவன் போன்றோர் மாவீரன் மன்னர் பூலித்தேவருக்காக தங்கள் உயிரையே கொடுத்தது தான் வரலாறு.மன்னர் பூலித்தேவரின் செப்பேடு கூறும் செய்தி:-
மன்னர் பூலித்தேவர் அளித்த கொடைச் செய்தி எழுதப்பட்ட செப்பேடு ஒன்றை, திருச்செங்கோடு நாணயவியல் ஆய்வாளர் விஜயகுமார் கண்டுபிடித்து புலவர் செ.ராசு என்பவரால் வெளியிடப்பட்டது.. அந்தச் செப்பேடு 27 செ.மீட்டர் நீளம், 15 செ.மீட்டர் அகலம் உடையது. ஒரு கிலோ எடையுள்ள அந்தச் செப்பேட்டில், ஒரு பக்கத்தில் மட்டும் 40 வரிகள் மட்டும் எழுதப்பட்டுள்ளன.
பிறக்குடையா குடும்பன் சமூகத்தைச் சேர்ந்தவருக்குப் பயிரிடத் தானமாக நிலமும், குளத்தில் மீன்பிடி வருவாயும் வரிநீக்கம் செய்து தரப்பட்டதாகும்.
மன்னர் பூலித்தேவர் கொடையில் வெட்டிய சங்கரன்கோயில் பாம்பாட்டி சித்தர் சமாதி மடம் அருகிலுள்ள கோவிந்தப்பேரி தெப்பக்குளம்.
மன்னர் பூலித்தேவரின் சீரமைக்கப்பட்ட அரண்மனை தர்பார் மண்டபம். ( பழைய அரண்மனை தர்பார் மிகவும் பெரியது. அது டாக்டர் கலைஞர் ஆட்சியில் முனைவர் டாக்டர் ம.ந மூலம் கூடுதல் நிதி கொண்டு இடிபாடுகள் நீக்கி சுருக்கமாக உள் முற்றம் போல கட்டப்பட்டது)
நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனியருக்கு எதிரான போர் என்கின்ற வகையில் உதவ முன் வந்த டச்சுக்காரர்கள் மற்றும் உதவியையும் மன்னர் பூலித்தேவர் மறுத்துவிட்டார். மன்னர் பூலித்தேவரின் மரணம் குறித்து இரு வேறு கருத்துக்கள் நிலவும் நிலையில். மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிளேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர்.
ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு மன்னர் பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டாரென்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயில் கோமதி அம்மன் சங்கரநாராயணர் ஆலயத்தில் இறைவனை வழிபட வேண்டுமென்று மன்னர் பூலித்தேவர் விரும்பியதாகவும்,
அதன்படி பிரிட்டிஷ் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும் , அப்போது பெரிய புகை மண்டலமும் ஜோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ ஜோதியில் கலந்தாரென்றும், பூலித்தேவர் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் “பூலிசிவஞானம்” ஆனார் என்றும் நாட்டுப்டபுறப் பாடல்கள் கூறுகின்றன.மற்றோது கருத்து மன்னர் பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால்
ஆங்கிலேயர் இதனை ரகசியமாகச் செய்திருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.(என்னைப் பொருத்தவரை இது தான் உண்மையாக இருக்கலாமெனத்தோன்றுகிறது காரணம் நேதாஜியையும் இப்படித்தான் செய்திருப்பார்கள் லண்டன் வெடிகுண்டு விசயத்தில் ஒரு மாணவனை விசாரணையின்றி சுட்டுக்கொண்றிக்கிரார்கள் கொஞ்சமும் ஈவிரக்கமின்றி) அவர் எப்படி மறைந்தாலும் ஒன்று மட்டும் நிச்சயம். அவர் இறுதி வரை அன்னியருடன் சமரசம் செய்யாது போராடியே மன்னர் மாண்டார்.
இந்திய விடுதலைப் போரின் முதல் வீரரான மன்னர் பூலித்தேவர் அன்று மன்னர்களிடையே இருந்த பிரிவின் காரணமாக இறுதிவரை தனியொருவராகப் போராடி மக்கள் மனதில் சுதந்திரத் தீயை தன்னுயிர் கொடுத்து வளர்த்தார். அது மக்களின் தேசிய எழுச்சிப் போராட்டங்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமானது என்பதை யாரும் மறுக்க முடியாத விடுதலை இயக்கச் சரித்திரம் படைத்தார்.
1767 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்க் கிழக்கிந்தியக் கம்பனியின் படை இவரது படையை பீரங்கிகளைக் கொண்டு நாசம் செய்து அவரை கைது செய்தனர்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணம் எப்படி உறுதிப்படுத்த இயலாத நிலை உள்ளதோ அதேபோல் தான் மாமன்னர் காத்தப்ப பூலித்தேவர் மரணம்
இன்றும் சங்கரன்கோவிலுக்குள் சித்தராக இவரது தனி அறை அமைந்துள்ளது. தற்போது பூலித்தேவர் விழா துவக்கம் என்பது வரலாறு மறையாது. அதைக் காப்பாற்ற காலம்சென்ற முனைவர் ம.நடராஜன் அவர்களால் நெற்கட்டான்செவல் அரண்மனையில் துவங்கப்பட்டது.
கருத்துகள்