முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏழாவது திருமணம் செய்ய முயன்ற பெண்; ஆறாவது கணவரின் புகாரால் விசாரணை

ஏழாவது திருமணம் செய்ய முயன்ற பெண்; ஆறாவது கணவரின் புகாரால் விசாரணை

சந்தியாவுக்கு இதுவரை ஆறு திருமணங்கள் நடந்துள்ளதாகவும், ஆறாவது திருமணம் முடிந்து பதினைந்து நாட்களுக்குள் ஏழாவது திருமணம் செய்ய முயன்ற போது பிடிபட்ட சம்பவம், சந்தியா உள்ளிட்டோரை காவல்துறை கைது செய்து  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.     


விசாரணையில், பல  தகவல்கள் வெளியாயின, புரோக்கர்கள் மூலம் திருமணம் செய்து கொள்ளும் சந்தியா, ஒரு சில தினங்கள் மட்டுமே அவர்களுடன் வாழ்க்கை நடத்தி கடைசியில் பணம், நகை உள்ளிட்ட பொருட்களுடன் தப்பிக்கும்  மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.   நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அருகில் கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தனபால் (வயது 35). இவருக்கு மனைவி சந்தியா (வயது 26). சொந்த ஊர் மதுரை. இவர்களுக்கு செப்டம்பர் மாதம். 7 ஆம் தேதி கொளக்காட்டுப்புதூர் அருகில் புதுவெங்கரை அம்மன் கோயிலில் திருமணம் நடந்தது.

தனபாலுக்கு திருமணத்திற்குப் பெண் நீண்ட காலம் கிடைக்கவில்லை என்ற  நிலையில் தான் பெரிய அளவில் சொந்த பந்தங்கள் இல்லாத ஏழைப்பெண் என்றதாலும், அழகாக இருந்ததாலும் சந்தியாவை  திருமணம் செய்யச் செலவுகளையும் அவரே ஏற்றுக்கொண்டார். ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி திருமணமான தாகவும் இதை புரோக்கர் ஏற்பாடு செய்திருந்ததாகவும்  திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் இருவர் மட்டுமே கலந்து கொண்டிருந்ததாகவும்.

திருமணத்தின் போது பெண் வீட்டார் தரப்பில் அவரது அக்காள், மாமா என இரண்டு பேர் கலந்து கொண்ட போது. அவர்களுடன் தனபாலுக்கு பெண் பார்த்துக் கொடுத்த, மதுரையைச் சேர்ந்த கல்யாண தரகர் பாலமுருகன் (வயது 45) என்பவரும் கலந்து கொண்டார்.

திருமணம் முடிந்த கையோடு பெண் தரகர் பாலமுருகன், திருமண செய்து வைத்த கமிஷனாக 1.50 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டதாகவும். அதன் பின்னர் பதினைந்து நாட்களில் பெண் ஓடி விட்டதால் 

மேலும் தற்போது  பெண் பார்த்துக் கொடுத்த தரகர் பாலமுருகன், திருமணத்தின்போது வந்திருந்த உறவினர்களின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டபோதும் அவையும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. 


எல்லோருடைய அலைபேசிகளும் ஒரே நேரத்தில் சொல்லி வைத்தாற்போல் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததால், தனபால் சந்தேகம் அடைந்தார். தன் வீட்டு பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்த பட்டுப்புடவை, மணப்பெண் கொண்டு வந்திருந்த துணிகள் அணைத்தும் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. 

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர், இதுகுறித்து பரமத்தி வேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது ஒருபுறமிருக்க, அதே ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு  திருமணம் செய்வதற்காக மணமகள் தேடி வந்தனர். வேறு ஒரு தரகர் மூலம் அவருக்கும் சந்தியாவின் புகைப்படம் கிடைத்துள்ளது. 

அதையறிந்த தனபால், உள்ளூர் இளைஞரிடம் சந்தியாவின் புகைப்படத்தைக் கொடுத்த தரகர் குறித்து விசாரித்தபோது அவருடைய பெயர் தனலட்சுமி (வயது 45) என்பது தெரிய வந்தது. சந்தியாவை பிடிக்க திட்டமிட்ட தனபால், உடனடியாக தனலட்சுமியை தொடர்பு கொண்டு, தான் அந்தப் பெண்ணை மணந்து கொள்ள விரும்புவதாகக் கூறி, உள்ளூர் இளைஞரின் புகைப்படத்தையும் மாற்றம் செய்து அனுப்பி வைத்துள்ளார். 

சந்தியா தரப்பிலும் அந்த இளைஞரை பிடித்துள்ளதாக சிக்னல் கிடைக்கவே, அலைபேசி மூலமாகவே திருமணத்தையும் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து திருச்செங்கோட்டில் வைத்து செப்டம்பர் மாதம். 23- ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள முடிவானது. இதற்காக மணப்பெண் சந்தியா, தரகர் தனலட்சுமி, உறவினர் ஐயப்பன் (வயது 37) ஆகியோர் ஒரு காரில் திருச்செங்கோடு வந்து சேர்ந்தனர். 

அங்கு ஏற்கனவே அவர்களுக்காக வலை விரித்து காத்திருந்த தனபாலும், உறவினர்களும், சந்தியா மற்றும் அவருடன் வந்த தனலட்சுமி, ஐயப்பன், கார் ஓட்டி வந்த ஜெயவேல் (வயது 38) ஆகிய நான்கு பேரையும் மடக்கிப் பிடித்தனர். தாங்கள் இப்படி வசமாக சிக்கிக் கொள்வோம் என்று அறியாதவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சந்தியா உள்ளிட்ட நால்வரையும் பரமத்தி வேலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறை விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மதுரையைச் சேர்ந்த இவர்கள், இதுவரை சந்தியாவுக்கு ஆறு பேருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது ஏழாவதாக ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றபோதுதான் சிக்கிக் கொண்டுள்ளனர். அதாவது, தனபாலுக்கு திருமணத்தை முடித்த பதினைந்தே நாளில் அதே ஊரில் இன்னொரு திருமண வலை விரித்துள்ளனர்.

இந்த கும்பல் சந்தியாவை, ஒருவருடன் திருமணம் செய்து வைக்கின்றனர். ஒரே வாரத்திற்குள் மணமகன் மற்றும் அவருடைய வீட்டாருடன் நெருங்கிப் பழகி, அவர்கள் அசந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் நகைகள், பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சந்தியா ஓட்டம் பிடித்து விடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதும் தெரிய வந்தது. 

பணம், நகைகள் எதுவும் கிடைக்காதபோது கல்யாணத் தரகு கமிஷனுடன் தலைமறைவாகி விடுகின்றனர். இந்தக் கும்பல் இதுவரை ஏழு பேரை மட்டும்தான் ஏமாற்றி இருக்கிறார்களா? உண்மையில் இந்த கும்பலிடம் சிக்கி சீரழிந்தவர்கள் எத்தனை பேர்? எந்தெந்த ஊரில் கைவரிசை காட்டியுள்ளனர்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக காவல்துறை விசாரணை நடந்து வருகிறது. சினிமாவை விஞ்சும் இந்த சம்பவம் பரமத்தி வேலூரில் பரபரப்பை உருவாக்கி உள்ளது.

பல திருமண சந்தியா காவல்துறையினரிடம் அளித்த  வாக்குமூலம் இதுவாம்: மதுரையைச் சேர்ந்தவர் திருமண புரோக்கர் பாலமுருகன்.. அவரது கூட்டாளிகள் ரோஷினி, மாரிமுத்து.. இவர்கள் 3 பேருமே என்னை நிர்வாண போட்டோ, மற்றும் ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்துள்ளனர்.. மோசடித் திருமணத்துக்கு நான் சம்மதிக்காவிட்டால், என்னுடைய நிர்வாணப் படத்தை வெளியிடுவேன் என்றும் குழந்தைகளைக் கொன்று விடுவேன் என்றும் மிரட்டினார்கள்.. அதனால்தான் நான் இந்தத் திருமணங்களுக்கு சம்மதித்தேன்.என்னை போல, வேறு நான்கு பெண்களும் இவர்களிடம் சிக்கி உள்ளனர்.. இதில் எவ்வளவு பணம் கிடைத்தாலும், அந்தப் பணம் முழுதையும், அவர்களே எடுத்துக்கொள்வார்கள்..எங்களுக்கு கொஞ்சப் பணம் மட்டுமே தருவார்கள்.. மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் எதாவது ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தருவார்கள்.. எனக்கு அப்பா, அம்மா யாரும் இல்லை. நான் அனாதை அதனால், என்னுடைய அக்கா - மாமாவாக ரோஷினி, மாரிமுத்து இருவரும் நடிப்பார்கள்.. ஒரு கல்யாணம் பேசி முடிப்பதற்கு முன்பேயே, அக்கா - மாமாவாக நடிக்க, என்னுடைய வீட்டிற்கு வந்துவிடுவார்கள். பெண் பார்க்க, திருமண ஆசையில் வரும் இளைஞர்களிடம் நான் நெருங்கிப் பழக வேண்டும்.. பாசமாக அவர்களிடம் பேச வேண்டும் என்பது அவர்கள் கண்டிஷன்.. அப்படிப் பேசும்போது, செல்போன், பட்டுப்புடவை, பணம், நகை என ஆசையாக நெருங்கி கேட்டு, சாமர்த்தியமாக அவர்களிடம் வாங்கிக் கொள்ள வேண்டும்.. திருமணம் முடிந்ததுமே, இந்த வீட்டைக் காலி செய்து விட வேண்டும்.. எனக்கு எந்தக் கல்யாணம் நடந்தாலும், மாப்பிள்ளை வீட்டில் போட்டோ எடுக்கும் போது கூட, இந்த புரோக்கர்கள் சற்று விலகியே எச்சரிக்கையாக நிற்பார்கள்..என சந்தியா, காவல் துறையினரிடம் இப்போது இப்படி பரபரப்பு வாக்குமூலம் ஒன்றைத் தந்துள்ளார். அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் சிக்கியுள்ள நால்வர் யார் என்று விபரம் தெரியாத நிலையில் 

இதுவரை ஏமாந்த மாப்பிள்ளை வீட்டார், மானம் அவமானங்களுக்குப் பயந்து, பெரும்பாலும் எங்கும் புகார் கொடுக்கவில்லை.. எல்லாரும் பெரிய இடத்துப் பிள்ளைகள் என்பதால், காவல் நிலையம் வரை விவகாரம் செல்லவில்லை.. இதைதான் புரோக்கர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டனர்.. நாமக்கல், கரூர், திருப்பூர், காங்கேயம் பகுதிகளில் திருமண மோசடிகளை செய்துள்ளோம்.. ஆனால், என்னை கட்டாயப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய புரோக்கர் பாலமுருகன் மீது நான் ஏற்கனவே மதுரை காவல்துறையில் புகார் தந்தேன்.. ஆனாலும் காவல்துறை அவர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. திருமணம் என்ற போர்வையில் எனக்கு அவர் பல திருமணங்களை செய்து வைத்து  வசமாக சிக்க வைத்து விட்டார்' என்று கண்ணீருடன் கூறியுள்ளார் சந்தியா. இன்னும் விசாரணை முடிவில் பல தகவல்கள் வரலாம் என்ற நிலையில் தொடர்ந்து நடந்து வருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த