முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மைசூர் பாகு" அரண்மனையைத் தாண்டி மக்களின் நாவிற்கு 1950 ஆம் ஆணடில் வந்தது

மைசூர் அரசர்கள் உண்டு சுவைத்து ரசித்த "மைசூர் பாகு" 


அரண்மனையைத் தாண்டி மக்களின் நாவிற்கும் வந்து சேர்ந்தது மைசூர் பாகு என்ற பெயரில். 1950ஆம் ஆண்டிலிருந்து இந்த இனிப்பு கர்நாடகம் மட்டுமல்லாது தென் மாநிலங்களின் தவிர்க்க முடியாத இனிப்பாகும்.   

அது போல சந்தன சோப். நறுமண `மைசூர் சேன்டல்` 1916 ஆம் ஆண்டில் பொது மக்களின் பயன்பாட்டில்,  இருந்து வருகிற ஒன்று.          மைசூர் பட்டும் அப்படித்தான். இந்தியாவின் 70 சதவீத பட்டு உற்பத்தி கர்நாடகாவில் செய்யப் படுகிறதென்பது யதார்த்தம். மைசூர் பட்டாடை எவரையும் எளிதில் கவர்ந்து விடும் என்பது மறுக்க முடியாத உண்மை. மைசூர் மல்லி மாண்டியா மாவட்டத்திலும் ஸ்ரீரங்கப் பட்டினத்திலும் அதிகம் பயிரிடப்படும்  பூ வகை. இது மலராகவும்  நறுமணப் பவுடராகவும், சென்டாகவும் எல்லோரையும்  வசீகரித்து வைத்துள்ளது.

இப்படி வரலாற்றுப் பெருமை கொண்ட மைசூர் மல்லி, மைசூர் பாகு, மைசூர் பட்டு, மைசூர் சேன்டல் , மைசூர் போண்டா, மைசூர் மசாலா  தோசையும்  இன்னும் முக்கியமாக மைசூரின் தசாரப் பண்டிகையின் பெயரும் அடங்கும்.                      உலகம் முழுவதும் விரும்பும் இனிப்பு  வகையான   மைசூர்ப்பாகு. இதற்கும் மைசூருக்கும் என்ன சம்பந்தம் ? இந்த இனிப்பு வகை முதலில் உருவான இடம் மைசூர், மன்னரின் அரண்மனையில்தான் 

1884 ஆம் ஆண்டு முதல் 1940 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் வாழ்ந்த மைசூர் மகாராஜா, கிருஷ்ணராஜா உடையார் தேர்ந்த ரசனையுள்ள  ரசிகர். இசை, நடனம், இலக்கியம்  போலவே நல்ல உணவின் ரசிகர். அம்பா விலாஸ் அரண்மனையில் பூஜைகளுக்கு நைவேத்தியம், பிரசாதம் தயாரிக்கத் தனிச் சமையலறை உண்டு, ஐரோப்பிய நண்பர்களுக்கு விருந்து தயாரிக்கத் தனிச் சமையலறை, மன்னரின் ராஜபோஜனம் தயாரிக்கத் தனியறை என ஒரு சமையல் வளாகமே இருக்க. ஒரு நாள் மன்னர்


முன்னறிவிப்பில்லாமல் மதிய உணவுக்கு வந்த நிலையில்  அவருக்குத் தினமும் உணவின் இறுதியில்  அன்று புதிதாகச் செய்த சூடான இனிப்பு வகையாக இருக்க வேண்டும்.

அரண்மனையின் தலைமைச் சமையல்கார மேஸ்திரி காக்கசுராமடப்பா,          அன்று அவசர அவசரமாக இராஜாவுக்கான மதிய உணவைத் தயாரித்துக் கொண்டிருந்த போது, திட்டமிடாததால் ஸ்வீட் என்ன செய்வது எனத் தெரியாமல் திணறிக்கொண்டிருந்தார். இராஜா சாப்பிட்டு முடிப்பதற்குள், ஸ்வீட்டைத் தயாரித்தாக வேண்டும் என்ற நிலை.


அப்போது அவசரமாக கையில் கிடைத்த கடலை மாவு, நெய் மற்றும் சர்க்கரையை வைத்துச் சூடான ஒரு கலவையைத் தயாரித்தார் மடப்பா. மகாராஜா உணவைச் சாப்பிட்டு முடிப்பதற்குள், இனிப்பு பரிமாறப்பட்டது. அந்த இனிப்பைச் சாப்பிட்டு மெய்மறந்து போன மைசூர் மகாராஜா. "இதற்கு என்ன பெயர்?" என மடப்பாவிடம்  கேட்டபோது, உடனடியாக ஒரு பெயரைச் சொல்லவேண்டுமே என்ற பதற்றத்தில் - இனிப்புப் பாகில் செய்யப்பட்ட பண்டம் என்பதாலும், மைசூரில் செய்யப்பட்டது என்பதாலும், இரண்டையும் சேர்த்து, 'மைசூர் பாகு' எனச் சொல்லிவிட்டார். மன்னருக்கு அதுவே மிகவும் பிடித்து விட்டதால் அது எல்லோருக்கும் பிடித்துவிட்டது. பெயரும் அப்போது  நிலைத்து விட்டது.

இராஜா விரும்பிச் சாப்பிடும் ராயல் ஸ்வீட் என்பதால் அதை மக்களும் சாப்பிட விரும்பியதால் அரண்மனைக்கு எதிரே கடை அமைத்து மைசூர்ப்பாகு தயாரித்து விற்க காக்கசுரா மடப்பாவை அனுமதித்திருக்கிறார் மன்னர். அந்தக் கடைதான், மைசூர் சயாஜி சாலையிலிருக்கும் குரு ஸ்வீட்ஸ்.

இப்போது ஐந்தாவது தலைமுறையான மடப்பாவின் கொள்ளுப்பேரன் நட்ராஜன் மற்றும் அவரது சகோதரர்களும் இந்தப் பிரபலக் கடையின் உரிமை யாளர்கள். தாத்தாவின் சமையல் திறனைப் பாராட்டி மன்னர் கொடுத்த 12 அறைகள் கொண்ட வீட்டில்  இவர்களுடைய 30 பேர் கொண்ட கூட்டுக் குடும்பம் இன்னும் வசிக்கிறது. மைசூர்ப்பாகு தயாரிப்பும் அங்கே தான்.

“ஒரு வினாடி தவறினால் கூடத் தயாரிக்கப்படும் பாகின் நிலை மாறி மைசூர்ப்பாகின் சுவை மாறிவிடும்'' என்று சொல்லும் இவரது தாயார் தான் இன்றும் இந்த மைசூர்ப்பாகிற்குத் தேவையான பாகைத் தயாரிக்கிறார். மருமகள்கள் உதவி செய்வதால் ரெசிபியின் சீக்ரெட் அடுத்த தலைமுறைக்கும் சென்று கொண்டிருக்கிறது. ''எங்கள் தயாரிப்பு மூன்று  வாரங்கள் வரை சுவை குறையாமல் இருக்கும். ஃப்ரிட்ஜில் வைக்கத் தேவை இல்லை” என்று சொல்லும் நட்ராஜ், "திருமணங்கள், பார்ட்டிகள் போன்ற ஆர்டர்களை நாங்கள் ஏற்பதில்லை' என்கிறார். “பணம் கிடைக்கலாம். ஆனால் தரம் குறையும் வாய்ப்பு இருக்கிறதல் லவா?” என்கிறார். தினசரி தயாரிப்பும் விற்பனையும், தினசரி கடை யின் முன் குவியும் கூட்டமும் இவர்களது தரத்தைச் சொல்லுபவை.

கடையில் மற்ற ஸ்வீட்களும் இருக்கின்றன. ஆனால், எல்லோரும் முதலில் ஆர்டர் செய்வது மைசூர்ப்பாகுதான். அங்கேயே வாங்கிச் சாப்பிடுபவர்களுக்கு இலையில் கொடுக்கிறார்கள். கையில் ஒட்டிக் கொள்ளும் நெய்யைத் துடைக்க டிஷ்யூ கேட்டால், “அதெல்லாம் இல்லை ” என்கிறார்கள்.

கடை ஆரம்பித்த புதிதில் மைசூர்ப்பாகு இப்போது இருப்பது போல் இல்லாமல் செங்கல் சைஸில் கால் கிலோ அளவில் ஒரே கட்டி யாகத்தான் விற்றிருக்கிறார்கள். அப்போது கிலோ மூன்று ரூபாய். அந்த விலையில் எல்லோராலும் வாங்க முடியாததால் சிறுதுண்டுகளாக விற்கும் வழக்கம் தொடங்கியிருக்கிறது என்பதும் இன்னும் சில கர்நாடகக் கிராமங்களில் செங்கல் சைஸ் மைசூர்ப்பாகு விற்பனை தொடர்கிறது என்பதும் இந்தக் கடையினரிடமிருந்து அறிந்துகொண்ட செய்தி. - “இன்று மைசூர் பா என்ற பெயரில் முற்றிலும் வெவ்வேறு வகைகளில் நாடு முழுவதும் மைசூர் பா தயாரித்து விற்கப்படுகிறது. ஆனால் நல்ல நெய் மணத்தோடு கலவையில் கொதிக்கும்போது உண்டான குமிழ்களின் சிறு சிறு துவாரங்கள் அழியாமல் ஒருவிதமான மொறு மொறுப்போடு வாயில் போட்டவுடன் கரைவதை உணர்ந்தால்தான் அது ஒரிஜினல் மைசூர் பாகு. மற்றதெல்லாம் மைசூர் பா என்ற பெயரில் ஒரு ஸ்வீட் அவ்வளவுதான்” என்கிறார் நட்ராஜ்.


இதைத் தவிர்க்க, மைசூர்ப்பாகு என்பது மைசூர் நகருக்குச் சொந்த மான தயாரிப்பு என்பதை நிறுவி மைசூர்பாகின் புவிசார் குறியீட்டிற்கு உரிமை கோரி, காக்கசுரா மடப்பாவிற்கு மன்னர் கொடுத்த சர்டிஃபி கேட், அரண்மனை தசரா விழாவில் அளிக்கப்பட்ட கௌரவம் போன்ற ஆவணங்களைச் சமர்ப்பித்து விண்ணப்பிக்க இருப்பதாகச் சொல்லுகிறார், குரு ஸ்வீட்ஸ் உரிமையாளர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த