முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அறிக்கைகளும் கூறுவதென்ன

தமிழக சட்டசபையில் இன்று (அக்டோபர்.,18) முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா மரணம் குறித்து  ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சமர்பித்த அறிக்கை


தாக்கல் செய்யப்பட்டதில் கூறப்பட்டுள்ள தகவல் சுருக்கம்:



2012 ஆம் ஆண்டு முதல் ஜெ. ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை. 22.9.2016 அன்று ஜெ.ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு தாமதமின்றி அழைத்து சென்றுள்ளனர். அதன் பிந்தைய நிகழ்வுகள் இரகசியமாக்கப்பட்டன.


ஜெ.ஜெயலலிதா வீட்டிலிருந்து மருத்துவமனையில் அனுமதித்த நபர்களிடம் அசாதாரணமான செயல் எதுவும் கண்டறியப்படவில்லை.



 ஜெ.ஜெயலலிதாவிற்கு உயிர் காக்கும் இதய அறுவை சிகிச்சை செய்ய அமெரிக்க மருத்துவர் பரிந்துரை செய்துள்ளார்.



ஜெ. ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ, அறுவை சிகிச்சைக்கு வெளிநாட்டு மருத்துவர்கள் பரிந்துரை செய்தும் ஏன் கடைசி வரை நடக்கவில்லை?



ஆனால் 2 மாதத்திற்குப் பின்னர் மருத்துவ ரீதியாக ஜெ.ஜெயலலிதாவை பரிசோதிக்காமல் இதய அறுவை சிகிச்சை தேவையில்லை என இங்கிலாந்து மருத்துவர் முடிவு செய்துள்ளார்.


இறந்த நாளில் முரண்பாடு ஜெ.ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது வெளியான மருத்துவ அறிக்கைகளில் பல்வேறு முரண்பாடுகள் இருந்துள்ளன.



 ஜெ.ஜெயலலிதாவுக்கு வெஜிடேசன், குடல்நோய் அறிகுறி உபாதைகள் உள்ளிட்டவை குறித்து மருத்துவ அறிக்கையில் குறிப்பிடவில்லை.சசிகலா நடராஜன், டாக்டர் சிவக்குமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.



ஜெ.ஜெயலலிதா இறந்த நாள் குறித்த முரண்பாடான தகவல்கள் உள்ளன.




ஜெ.ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர்.,5 இரவு 11:30 மணி என மருத்துவமனை கூறும் நிலையில், சாட்சியங்கள் டிசம்பர்.,4 ஆம் தேதியில் மதியம் 3 மணியிலிருந்து 3:50 மணிக்குள் எனக் கூறுகின்றனர்.




ஆணையத்தின் பார்வையில், ஜெ.ஜெயலலிதா டிசம்பர்.,4, 2016 ஆம் தேதியில் பிற்பகல் 3:50 மணிக்கு காலமானார். சி.பி.ஆர் (CPR) மற்றும் ஸ்டெர்னோடமி பயனற்றவை என்பதுடன், அவரது மரணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தாமத்திற்கான காரணமாக தந்திரமாக பயன்படுத்தப்பட்டன.



ஜெ.ஜெயலலிதா ஆஞ்சியோ சிகிச்சை தேவைப்பட்டும் அளிக்கப்படவில்லை.




மருத்துவக் கருவிகள் சுத்தம் செய்யும் மூன்று பேரை கொண்டு சிபிஆர் சிகிச்சை

எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை மருத்துவமனைக்கு வந்தும் சிகிச்சை அளிக்கப்படவில்லை.

ஜெ.ஜெயலலிதாவுக்கு 3.50 மணிக்கு இதயம் செயலிழந்த நிலையில் 4.20 மணிக்கு சிபிஆர் சிகிச்சை

உடலில் மின்முறை ரத்த ஓட்டம் நின்ற பிறகு சிபிஆர் சிகிச்சை அளித்தது வியப்பாக உள்ளது

உயிரிழந்ததை தாமதமாக அறிவிக்க தந்திரமாக செயல்பட்டுள்ளனர்.

சிபிஆர் ஸடெர்னோடமி சிகிச்சையை காரணமாகக் கொண்ட தந்திரமாக செயல்பட்டுள்ளனர்.



ஜெ.ஜெயலலிதா போயஸ் கார்டனில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டது.

வீட்டின் குளியல் அறையில் இருந்து திரும்பி படுக்கையை அடைந்த போது ஜெயலலிதா மயங்கி விழுந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐசியு.,வுக்கு மாற்றப்பட்ட போது ஜெயலலிதாவுக்கு சுயநினைவு வந்தது.

20.09.2016 அன்று காவிரி நதிநீர் கூட்டத்தில் தலைமை செயலாளர்களால் ஜெ.ஜெயலலிதா புகைப்படம் எடுக்க அனுமதி கோரப்பட்டது. புகைப்படக் கலைஞருக்காக காத்திருந்த நிலையில், ஜெ.ஜெயலலிதாவின் பிஎஸ்ஓ பெருமாள்சாமி, பேட்டோ எடுக்க அனுமதி மறுத்தார்.

அப்பல்லோ டாக்டர் பாபு ஆபிரகாம் அக்டோபர் மாதம் .,11 ஆம் தேதி அன்று அமெரிக்க டாக்டர் ஸ்டூவர்ட் ரஸ்சலை தொடர்பு கொண்டார்.

ஜெ.ஜெயலலிதாவுக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பது அமெரிக்க டாக்டர்களின் கருத்தாக இருந்தது.

புத்திசாலி பெண்மணியான ஜெ.ஜெயலலிதா, அறுவைச் சிகிச்சையின் முக்கியத்துவத்தை கருதி உடனே ஏற்று கொண்டார்.

முன்மொழியப்பட்ட சிகிச்சைக்கு சுயநினைவுடன் இருந்த ஜெ.ஜெயலலிதா ஒப்புதல் அளித்தார்

ஜெ.ஜெயலலிதா சுய நினைவுடன் இருந்த நிலையில், அவருடன் அமெரிக்க மருத்துவர் சிகிச்சை குறித்த விவாதித்தார்

1.10.2016 அன்று டாக்டர் ரிச்சர்ட் பீலேவால் செப்சிஸ் மற்றும் வெஜிடேசன் உறுதிப்படுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவரது இதுயத்தில் வெஜிடேசன் மற்றும் பெர்பொரேசனும் இருப்பதாக டாக்டர்கள் கண்டறிந்தனர்.

ஜெ.ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிறுநீர் தொற்று காரணமாக செப்சிஸ் ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் .10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நாள் தோறும் முறையே, 1200 மி.பி., 1070 மி.லி.,1040 மி.லி., நுரையீரலில் இருந்து திரவம் வெளியேற்றப்பட்டது.

11.10.2016 ல் அமெரிக்க மருத்துவரான டாக்டர் ஸ்டூவர்ட் ரஸ்ஸல் பரிந்துரைத்த ஆஞ்சியோ செய்யப்படவில்லை.

2 மாதங்களுக்குப் பின் இங்கிலாந்தில் இருந்து வந்த டாக்டரின் கருத்துப்படி அறுவை சிகிச்சை அவசியம் இல்லை என முடிவு செய்யப்பட்டது.

ஆனால் மருத்துவ ரீதியாக ஜெ.ஜெயலலிதாவை பரிசோதிக்காத டாக்டர், எழுத்துப்பூர்வமாக இல்லாமல் வாய்மொழியாக கருத்து தெரிவித்தார்

வீட்டில் இருந்த நபர்களின் செயல்பாட்டில் அசாதாரண நடவடிக்கை எதையும் ஆணையம் கண்டறியவில்லை.      என்பதாக அமைந்துள்ளது. அடுத்ததாக  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டதில், மாவட்ட ஆட்சித்தலைவர்  மற்றும் 17 காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி போராட்டம் நடந்த போது காவல்துறை  நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் 133 பக்க பரிந்துரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்தது.

அதில் முக்கிய விவரங்கள்:-

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது போலீசார் வரம்பு மீறி நடவடிக்கை எடுத்துள்ளது

துப்பாக்கிச்சூடு தொடர்பாக அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்


இறந்தவர்களின் உறவினர்கள், சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்

காவலர்  சுடலைக்கண்ணு மட்டும் 17 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அவரை அடியால் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர்  அலுவலகத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது பூங்காவில் மறைந்திருந்து காவலர்  துப்பாக்கியால் சுட்டுள்ளனர். என்பதாக அமைகின்றன .இதில் பொது நீதி யாதெனில் பின்னால் பிரச்சினைகளே வராத அளவுக்கு ஒழுங்காக ஒரு உயிலை முன்னால் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவுக்கு  எழுதி வைக்க தெரியவில்லை.

அவர் பிறந்த சமூகத்தில் நம்பிக்கைக்குரிய ஒரு இரத்த சம்பந்தத்தை கொண்ட உறவு  கூட கிட்ட சேர்த்து வைக்கிற அளவுக்கு ஒருத்தரையும் அவர் நம்பவில்லை..

என்ன இரும்புப் பெண்மணியோ? 

சசிகலா - ஜெயலலிதா இருவரிடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாமென ஓய்வு நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் தகவல் . 

அப்புறம் இறந்த நேரமும் தேதியுமே மாறுபடுகின்றன. என்ற கருத்து  அதிகமாக இனி விவாதங்கள் நடக்கும், காரணம் சசிக்கலா சர்வ வல்லமை படைத்த அதிகாரம் கொண்ட பதவிகள் இல்லாத நிலையில் இவை சார்தியமா என்பதே இன்னும் எழு வினா. அதற்கு விடை தெரியும் போது தான் சகலமும் நமக்கு புரியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்