முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒப்பந்ததாரர் பாண்டித்துரை வீட்டில் வருமான வரித்துறையினர் மூன்று நாளாக சோதனை

தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் பாண்டித்துரை வீட்டில் வருமான வரித்துறையினர்

இன்று மூன்றாவது நாளாக சோதனை நடத்தினர். வருமானத்திற்கு மேல் அதிகமாக ரூபாய்.2000 கோடி சொத்துக்களை குவித்ததெப்படி என்று பாண்டித்துரையிடம் அதிகாரிகள் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்

புதுக்கோட்டை பெரியார் நகரைச்  சேர்ந்தவர் பாண்டிதுரை, (வயது 47). நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்ட அலுவலக உதவியாளராகப் பணியில் சேர்ந்தவர், முதற்கட்டமாக நெருக்கமானவர்களுக்கு நெடுஞ்சாலையோரமுள்ள மரங்களுக்கு வர்ணம் பூசும் பணியை கொடுத்துள்ளார்.படிப்படியாக ஊழல் மூலம் வளர்ந்தவருக்கு, கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி.கே.பழனிச்சாமி முதல்வராக இருந்த போது பல்வேறு அரசு ஒப்பந்தங்கள் எடுக்க வாய்ப்புக் கிடைத்ததால் அவரது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று வெளியேறிய பின்னர்.நெடுஞ்சாலைத்துறையில் அரசு ஒப்பந்ததாரராகப் பதிவு செய்து கொண்ட பாண்டித்துரை,



தொடர்ந்து கோடிக்கணக்கில் அரசு பணிகளை ஒப்பந்தமெடுத்து பணி செய்யத் தொடங்கினார்.  2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாண்டித்துரை அடுத்தடுத்து அவருக்கு பல கோடி ரூபாய் அளவில் அரசு ஒப்பந்தங்கள் கிடைத்ததனால் இவரது சொத்து மதிப்பு ஆயிரக்கணக்கான கோடி அளவில் உயர்ந்தது. கடந்த அதிமுக ஆட்சி க்காலத்தில் முறைகேடாக ரூபாய். 5 ஆயிரம் கோடியில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்றம் சென்று, பின்னர் உச்சநீதிமன்றம் வரை சென்றது. முறைகேடாக விடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் பாண்டித்துரை ரூபாய்.500 கோடிக்கு மேல் ஒப்பந்தங்கள் எடுத்து பணி செய்ததாகத் தெரிகிறது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில் பாண்டித்துரையின் வீட்டில் 12 ஆம் தேதி முதல் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோயம்புத்தூரில் பாண்டித்துரை குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில், புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள ஹரிவே லயன்ஸ்'' என்ற பெயரில் இயங்கும் அவரது அலுவலகம், அதே பகுதியிலுள்ள அவரது வீடு, அவரது மேலாளர் பீட்டரின் வீடு உள்ளிட்ட இடங்களில் 30 க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.இதில் முதல் நாளில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை வீட்டிலுள்ள அறையில் பூட்டி வைத்தனர். சோதனையை முடித்துக் கொண்டு புதுக்கோட்டையிலுள்ள ஒரு ஹோட்டலில் வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கினர். இந்த நிலையில் இரண்டாவது நாளாக நேற்று காலை மீண்டும் பாண்டித்துரை வீட்டிற்குச் சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்து முறைகேடு குறித்து விசாரித்து பதிவு செய்தனர். பாண்டித்துரை கோயம்புத்தூர், பொள்ளாச்சி, சேலம், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் கோடிக்கான சொத்துக்களை  வாங்கிக் குவித்துள்ளார். இந்த ரூபாய். 2,000 கோடி சொத்துப் பத்திரங்கள் புதுக்கோட்டை வீட்டிலிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களும் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் கிடைத்துள்ளதாகவும், அவற்றை வைத்து இவ்வளவு சொத்து வாங்கியது எப்படி, இதற்கு பணம் கொடுத்தது யார் என்று ஒரு தனிக் குழு அமைத்து ஆய்வில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதனிடையே மூன்றாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில் பாண்டித்துரையை நேரில் வரவழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பாண்டித்துரையின் வளர்ச்சி என்பது கடந்த அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் நடந்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாண்டித்துரை செய்த முறைகேடுகள் அனைத்தும் நெடுஞ்சாலைத்துறை சம்பந்தப்பட்டது என்பதால் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாண்டித்துரை வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் அடுத்தகட்ட விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் முடுக்கி விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி விசாரிக்கப்பட்டால் அதிமுகவின் பெரும்புள்ளி வரை விசாரணை நீள்வதற்கு வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த