முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓடும் ரயில் முன் தள்ளி விடப்பட்டு மாணவி கொல்லப்பட்ட செய்தியறிந்த அவரது தந்தை விஷம் குடித்து தற்கொலை.

சென்னை பரங்கிமலை இரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன் தள்ளி விடப்பட்டு மாணவி கொல்லப்பட்ட செய்தியறிந்த அவரது தந்தை மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை.


மாரடைப்பால் மாணிக்கம் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்ட நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்.

சென்னை  ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 47). அவர் மனைவி வரலட்சுமி (வயது 43). ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுகிறார்,இவர்களது மகள் சத்யா (வயது 20). தியாகராய நகர் தனியார் கல்லூரியில் இளங்கலை வணிகம்  இரண்டாமாண்டு படிக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் தயாளன் மகன் சதீஷ் (வயது 23). இவரும் சத்யாவும் பள்ளி படித்த போது  காதலித்த நிலையில்  சதீஷ் போதை பழக்கம் கொண்டவர் எனத் தெரிந்ததால் அவரை விட்டு சத்யா விலகிய நிலையில் தினமும் கல்லூரிக்கு சத்யா மின்சார இரயிலில் செல்வது வழக்கம். அது போல் நேற்று மதியம் கல்லூரி செல்ல பரங்கிமலை ரயில்நிலையத்திற்கு சத்யா வந்தபோது அங்கு வந்த சதீஷ்,


சத்யாவிடம் பேசியுள்ளார். இதற்கு சத்யா மறுத்துவிட்டார். மீண்டும் மீண்டும் சத்யாவை சதீஷ் தொந்தரவு செய்ததாகத் தெரிகிறது. இவர்களுக்குள் வாக்குவாதமும் நடந்துள்ளது. அந்த சமயம் பார்த்து தாம்பரம் நோக்கி்ச் செல்லும் மின்சார ரயில் வேகமாக வந்து கொண்டிருந்த போது சதீஷ், சத்யாவை தண்டவாளத்தில் தள்ளி விட்டுத் தப்பியோடியதால் 


அப்போது சத்யா மீது ரயில் சக்கரங்கள் ஏறி இறங்கியதால் மாணவியின் தலை தனியாகவும் உடல் தனியாகவும் சிதறி இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சத்யா உயிரிழந்தார்.  தகவலை அறிந்த சத்யாவின் தோழிகள் அழுது கொண்டே ஓடி வந்த நிலையில்  அவர்கள் இரயில்நிலைய காவல் நிலையத்தில்   கொடுத்த. புகாரின் பேரில் சதீஷை பிடிக்க காவல்துறையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தேடப்பட்ட சதீஷ் துரைப்பாக்கத்திலிருப்பதை அறிந்த தனிப்படையினர் அவரை அதிகாலை கைது செய்தனர்.   இதனிடையே சத்யா இறந்த சம்பவம் குறித்து அங்கிருந்த அவரது தோழிகள் சத்யாவின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர் அதை  கேள்விப்பட்ட மாணிக்கம் தனது மகளை நினைத்து கதறியுள்ளார். நேற்று முழுவதும் மன உளைச்சால் புழுங்கியுள்ளார். இந்த நிலையில் மகளின் இழப்பை ஏற்க முடியாமலும் பிரிவை தாங்கி்க் கொள்ள முடியாமலும் மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.


ஒரு தவறான வளர்ப்பில் வந்த இளைஞர் வெறி்ச் செயலால் கொல்லப்பட்ட மாணவியின் உடலும், மகளின் பிரிவால் தற்கொலை செய்த தந்தையின் உடலும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இரு உயிர்கள் பலியான சம்பவம் ஆதம்பாக்கத்தில் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி உயிரிழப்பு குறித்து அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், அந்த பெண்ணிடம் ஒரு பையன் நீண்ட நேரமாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அந்தப் பெண் தி.நகர் செல்ல ரயிலுக்காக காத்திருந்ததாக் தெரிகிறது. அப்போது ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை பிடித்து அந்த இளைஞர் கீழே தள்ளினார். இதனால் பதறியடித்த படி அவரது தோழிகள் காப்பாற்றுவதற்கு ஓடி வந்தனர். அதற்குள் தாம்பரம் நோக்கி வந்த ரயில் அந்த மாணவியின்  மீது ஏறியது. உடனே அனைவரும் கூச்சல் போட்டு ரயிலை நிறுத்தினர். அப்போது அந்த பெண்ணின் உடல் துண்டாகிக் கிடந்தது. இதை பார்த்த அந்த பெண்ணின் தோழிகள் கதறினர். அந்த பெண்ணை ரயில் முன்பு தள்ளிவிட்டுவிட்டு அந்த நபர் தப்பியோடிவிட்டார் எனத் தெரிவித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...