முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கண்ணங்காரக்குடி தர்ம சாத்தா ஐயனார் ஆலயக் குடமுழுக்கும் தமிழர் வழிபாட்டு பாரம்பரிய வரலாறும்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம்  கண்ணங்காரக்குடியில்


அமைந்துள்ள இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் வழிபட்ட


அவர்கள் பிரித்து  வழங்கிய  புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட தர்மசாஸ்தா அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இதன் குடமுழுக்கு விழா இன்று   மங்கள இசை மற்றும் கணபதி பூஜையுடன் தொடங்கியது கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட சிறப்புப் பூஜைகளும் ஆறு கால யாகசாலைப் பூஜைகளும் நடைபெற்றன.

நான்கு நாட்களாக யாகம்  வளர்க்கப்பட்ட நிலையில்  பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட  நீர் யாகசாலையில் கும்பங்களில் நிறைத்து வைத்து சிவாச்சாரியார்களால் பூஜை செய்யப்பட்டது.



அதனைத் தொடர்ந்து மங்கள இசை முழங்க யாகசாலையில் வளர்க்கப்பட்ட புனிதநீர் சிவாச்சாரியார்கள் சுமந்து பின்னர் கோபுரத்தின்  கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. விழாதொடர்ந்து கோயிலில் அமைந்துள்ள பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

கும்பாபிஷேக தரிசனம் பெற விழாவில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த பத்தாயித்திற்க்கும் மேலானோர் குவிந்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதங்கள் மற்றும் அன்னதானங்களும் பலதரப்பட்ட சமூகத்தினர்களால்  வழங்கப்பட்டது  திருமயம் காவல் துறையினர் போக்குவரத்து சீர் செய்தனர் மற்றும் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை தர்மசாஸ்தா நற்பணி மன்றத்தார், கண்ணங்காரைக்குடி ஊரார், தேவஸ்தான அலுவலர்கள் நாட்டார், நகரத்தார் செய்திருந்தனர்.  அய்யனார்  கிராமத்து மக்களின் காவல் தெய்வமாக போற்றப்படுகிறார்.



இவர் பலருக்கும் குல தெய்வமாகவும் இருக்கிறார். அய்யனாருக்கு சிலர் கிடா வெட்டி பொங்கல் வைப்பது வழக்கம். அதே சமயம் சிலர் சைவ முறையிலும் அய்யனாரை வழிபடுகின்றனர். அய்யனாரை எவர் ஒருவர் பூஜித்து வழிபட்டாலும் அவருக்கு வேண்டிய வரத்தை நல்கி எப்போதும் காவலாயிருந்து பார்த்துக்கொள்கிறார். அந்த வகையில் ஐயனார் வழிபாடு பழங்காலம் தொட்டே தமிழர்களிடையே இருக்கிறது. 


தாருகாவனத்திலே மகரிஷிகளின் அகங்காரத்தை அழிப்பதற்காக வேள்வியை குலைக்க வேண்டியிருந்தது. இதற்காக பரமேசுவரன் பிட்சாடனர் உருவமும், விஷ்ணு மோகினி உருவமும் கொண்டனர். பிட்சாடனர் மகரிஷிகளின் பத்தினிகள் வாழும் வீட்டு தெருக்களிலே சென்று பிச்சை கேட்டார். அவரது தோற்றத்தை கண்டவர்களின் மனதில் தடுமாற்றம் ஏற்பட்டது. மோகினியானவள் ரிஷிகள் வேள்விகள் செய்யும் இடத்திற்கு சென்று அவர்களின் மனதை அலைபாய செய்தார். இதனால் வேள்வி தடைபட்டது.


பிச்சாண்டவராக வந்த சிவபெருமானுக்கும், மோகினியாக வந்த திருமாலுக்கும் ஏற்பட்ட உறவால்  உருவான கடவுள்  ஐயனார்.



ஐயனார் ஊருக்குள் விரோதிகள், கள்வர்கள், கொடிய விலங்குகள், தொற்று வியாதிகள் வராமல் பாதுகாப்பார். வயல்களில் விளையும் பயிர்களை காப்பவரும் இவரே.


இவர் குதிரையின் மேல் சவாரி செய்வது போல் இருப்பார். குதிரையின் முன் கால்கள் தூக்கியபடி கம்பீரமாக இருக்கும். யானை மீது அமர்ந்த ஐயனாரும் சில ஊர்களில் காணப்படுகிறார். 

சில ஊர்களில் பெரிய அளவில் செய்யப்பட்ட ஐயனார் சிலை திறந்த வெளியில் வைக்கப்பட்டிருக்கும். இந்த ஐயனார், கிரீடம் அணிந்து பெரிய மீசையுடன் காட்சி தருவார். நெற்றியில் திருநீறு அணிந்திருப்பார். வலது கையில் செங்கோல் அல்லது தண்டம் வைத்திருப்பார். சாட்டை, அரிவாள், வில், அம்பு ஆகியவற்றையும் வைத்திருப்பார். இடது காலை மடித்து வைத்துக்கொண்டு, வலது காலை கீழே தொங்கவிட்டிருப்பார்.


கோவிலின் கருவறையில் உள்ள ஐயனார் தமது மனைவியர்களான பூர்ணா, புஷ்கலா ஆகியோருடன் காட்சி தருகிறார். இவர் ஸ்ரீ பூர்ணா, புஷ்கலா சமேத ஐயனார் என்று அழைக்கப்படுகிறார். சில கோவில்களில் ஐயனார் பூரனை மற்றும் பொற்கலை இன்றி தனித்தும் காணப்படுகிறார்.

பரிவார தெய்வங்கள் இந்திரன், அக்னி, எமதர்மன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானியன் ஆகிய எட்டு திசை தெய்வங்களும், யோகிகள், சித்தர்கள், வித்யாதர்கள், கின்னரர்கள் முதலியோர் ஐயனாரை வணங்கியபடி இருப்பர்.



ஐயனார் வழிபாட்டில் கருப்பர் மிகவும் முக்கியமானவராகும். இவர் பக்தர்களான சாமியடிகள் மீது இறங்கி வந்து அருள்பாலிப்பார். சாமியடிகள் மூலம் வலம் வந்து தீயசக்திகளை விரட்டுகிறார் என்ற நம்பிக்கை இன்று வரை கிராம மக்களிடம் இருந்து வருகிறது.

நம்பியவருக்கு காவலன் எதிர்ப்பவர்களுக்கு எமனாக இருக்கும் காவல் தெய்வம் கருப்பசாமி அதை 


தஞ்சாவூரில் 1944 ஆம் ஆண்டில் பிறந்த நெடுஞ்செழியன்  தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழத்தில் பேராசிரியராக பணியாற்றியவர் முனைவர் பட்டம் பெற்றவர், சிறந்த எழுத்தாளரான "ஆசீவகமும் ஐயனார் வரலாறும்", "தமிழ் இலக்கியத்தில் உலகாயிதம்" போன்ற பதினெட்டு நூல்களுக்கும் மேல் எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தை அடிப்படையாக கொண்டு, தமிழ் இலக்கியத்தில் உலகாயுதம் என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டமும் பெற்றார். மேலும் இம்முனைவர் பட்ட ஆய்வில் ஆசீவகம் பற்றிய ஆய்வு தேவைப்பட்டதால், ஆசீவகத்தின் வேர் பற்றி ஆராயத்தொடங்கினார். தொடக்கத்தில் ஆசீவகம் வடநாட்டு சமயம் என்று நினைத்த பேராசிரியர் பின் ஆசீவகம் தமிழரின் வாழ்வியல் என்பதை கண்டுணர்ந்தார். அவர் தற்போது தான்  காலமானார் ஆசீவகத்தைத் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் தோற்றுவித்தவர் மற்கலி கோசலர். இவர் புத்தரின் சமகாலத்தவரும் மகாவீரரின் நண்பர் என நம்பப்படுகிறது. தமிழகமெங்கும் உள்ள ஐயனார் கோவில்களே ஆசீவகத்தின் அடையாளங்கள்.ஆசீவக நெறி(அமணம்>சமணம்) என்று கூறியவுடன்,


பெரும்பான்மையானோருக்கு ஜைன நெறியைத்தான் விளக்கப் போவதாகத்  தோன்றும். ஆனால் இல்லை, ஆசீவக நெறி என்பது தமிழர்கள் ஆதி காலந்தொட்டு பின்பற்றி வந்த நெறியாகும். அந்த நெறியை, கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சிவ நெறி, சமணர் கழுவேற்றத்தின் பொழுது அழித்தது(சிவனும் ஒரு ஆசீவகரே. அதைப் கடந்த எழுபது ஆண்டுகளில் தமிழர் தொடர்புகளுடன் ஆசீவக நெறியைப் பற்றி ஆய்வுகள் எழும் பொழுதெல்லாம் அது இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கிறது. இதன்மூலம், தமிழர்களின் உண்மையான வரலாறு அவர்களுக்கே இதுவரை தெரியாமல் வந்திருக்கிறது.ஆசீவக நெறி(அமணம்) - தமிழரின் அழிக்கப்பட்ட நெறி(ஆசீவகம் / Ajivika)இயற்றிய பிங்கல நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டில் ஜைனர்களை(அருகர்) சமணரின் ஒரு பிரிவாகக் குறிப்பிடுகிறார்.


“சாவகர் அருகர் சமணர் அமணர்

ஆசீவகர் தாபதர் அத்தவத் தோரே"

- ஐயர் வகை, பிங்கல நிகண்டு.

 ஆய்வுலகில் அமணர் ஜைனர் பற்றிய பொருள் குழப்பம் நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிறது. சமணர் என்ற சொல் அமணர் என்ற தமிழ் வடிவத்தின் திரிபாகும். இச்சொல் வைதீக எதிர்ப்பாளர் என்ற பொருளில் ஆளப்பட்டாலும் தமிழ் இலக்கியங்களில் இச்சொல் ஆசீவகர்களை மட்டுமே குறித்துள்ளது. ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களை அருகர்கள் என்றும் பெரிய புராணம்(பன்னிரெண்டாம் நூற்றாண்டு) இவ்விருவரையும் வேறுபடுத்திக் காட்டுகின்றது. அத்துடன் ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களைச் ஜாதி அமணர் என்றும் பிரித்து அடையாளப் படுத்தும். இப்படிப் பெரிய புராணம் ஆசீவகர்களையும் சைனர்களையும் வேறுபடுத்திக் காட்டுவதை முதன்முதலாக ஆராய்ந்து உரைத்தவர் பேரா. முனைவர் தே. வே. மகாலிங்கம் தமிழ்நாட்டிலுள்ள சங்க காலக் கற்படுக்கைகள் யாவும் ஆசீவகர்களுக்கு உரியன என்பதைச் சான்றுகளோடு நிறுவியவர் அவரே ஆவார். ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வுண்மையை அவர் வெளிப்படுத்தியிருந்த போதிலும் தமிழ் ஆய்வுலகம் அவரை இருட்டடிப்புச் செய்துள்ளது.இந்திய வரலாற்றில் மறைந்து போன சமயங்களில்  ஆசீவகமமும் ஒன்று  சமணத்தை பவுத்தமும், வைதீக சமயமும் அழித்தது நாமறிந்த வரலாறு என்றால், சமணத்தின் ஒரு பிரிவாக ஆசீவகம் பார்க்கப்பட்டதால் சமணமும் சேர்ந்து ஆசீவக வரலாற்றை அழித்தது நாம் அறியாத வரலாறு. 


ஆதிநாதர் முதலான 23 தீர்த்தங்கரர்கள் ஜைனர்கள், ஆசீவகர்கள் - ஆகிய இருவருக்கும் பொது. இதனால்தான் இவர்கள் இருவருமே சமணர்கள்.

ஆனால் ஜைனருக்கு மகாவீரர் 24ஆவது தீர்த்தங்கரர், ஆசீவகர்களுக்கோ மர்கலி 24ஆவது தீர்த்தங்கரர். உண்மையில் ஆசீவகம் ஜைனத்தின் போட்டி சமயம். ஆனால் பின்னர் நலிவடைந்த ஆசீவகத்தை, ஜைனம் கைப்பற்றி சுவடே தெரியாமல் போகுமாறு செய்தது. 

அப்படியாக அழிந்து போயிருந்த ஆசீவக வரலாற்றை அதன் கடைசி சல்லிவேரிலிருந்து மீட்டெடுத்தவர் ஆய்வாளர் பேராசிரியர் காலம்சென்ற க.நெடுஞ்செழியன்


தலைமுடியை தனது கைகளால் அகற்றி (மயிர் பறித்து) மொட்டைத் தலையோடு துறவிகளாகும் ஜைனர்களும், நீண்ட தலைமுடியோடு உள்ள ஆசீவகர்களும் ’சமணர்’ - என்ற பொதுப் பெயரால் அழைக்கப்பட்டனர். ஆனால் இருவருக்கும் வழிபாடுகள் கொள்கைகள் வேறுவேறு. ஜைனர்களும் பௌத்தர்களைப் போல ’வானத்தை பூதமாக ஏற்க இயலாது, மொத்தம் நான்கு  பூதங்களே’ - என்ற போது, ’வானமே முக்கியமானது, மொத்தம் ஐந்து பூதங்கள்’ - என்று சொன்னவர்கள் ஆசீவகர்கள். 

எதையும் விவாதித்து விளக்கும் மரபினர் ஆசீவகர்கள், இவர்கள் வசித்த இடங்களான ‘பள்ளி’கள் மக்களுக்குக் கல்வி கொடுத்ததன் தொடர்ச்சியாகவே பின்னர் கல்வி நிலையங்களுக்கு ‘பள்ளி’ என்ற பெயர் வந்தது. 

மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களாக ஆசீவகர்களைப் பல்வேறு இலக்கியங்கள் குறிக்கின்றன, குறிப்பாக மனநல மருத்துவத்தில் இவர்கள் நிபுணர்களாக இருந்துள்ளனர்.

ஆனால் ‘தீமை என்ற ஒன்று இல்லை, எல்லாம் ஊழ்’ - என்ற வினைக் கோட்பாடு இவர்களை வீழ்தியது. மக்கள் பரிகார லஞ்சங்களோடு வந்த பிற மதங்களின் பக்கம் ஈர்க்கப்பட, அறிவார்ந்த மதமான ஆசீவகம் அழிந்தது.

கி.மு.5 லிருந்து 3 ஆம் நூற்றாண்டுகளில் வட இந்தியா வரை செல்வாக்கோடு இருந்த ஆசீவகம், 13 முதல் 15 ஆம் நூற்றாண்டுகளில் பெரும் தேய்வைச் சந்தித்தது. ஆசீவகம் கடைசி மூச்சை விட்ட இடமும் நமது  தமிழ் தேசம் தான்.

தமிழகத்தில் ‘சமணர் கழுவேற்றம்’ - என்று சொல்லப்படுவது பெரும்பாலும் ஆசீவகர் கழுவேற்றமாகவே இருந்துள்ளது, அதற்கு சடைமுடியோடு ஆசீவகர்கள் கழுவேறும் சிற்பங்களும் ஓவியங்களும் சான்றுகளாகின்றன.

அதுபோல சமணர் ஓவியம் என்று சொல்லப்படும் சித்தன்னவாசல் குகை ஓவியங்களிலும் முடிநீண்ட ஆசீவகர்களே உள்ளனர்.

தமிழகத்தில் ஆசீவகர்கள் சங்ககாலத்தில் இருந்தே வாழ்ந்து வருகின்றனர். கி.மு.5ஆம் நூற்றாண்டு  வரை பழமையானதெனக் கருதப்படும் மாங்குளம் கல்வெட்டில் சமணர் என்ற பெயர் காணப்படுகின்றது. இவர்களின் சான்றுகளைத் திரித்துத் தான், ‘தமிழகத்தில் சங்க காலத்திலிருந்தே ஜைனர்கள் உள்ளனர், வடக்கிலிருந்து தமிழருக்கு எழுத்தை அறிமுகப்படுத்தியவர்களே ஜெயினர்கள்தான்’ - எனும் தகவல்  கட்டமைக்கப்பட்டது.

தங்களுக்கு மொழி இல்லாத காரணத்தால்தான் ஜைனர்கள் சமஸ்கிருதத்தையும் பிராமி எழுத்தையும் எடுத்துக் கொண்டனர் - என்பதுதான் வட இந்திய வரலாறு. ஆனால் எழுத்தே இல்லாதவர்கள் நமக்கு எழுத்து கொடுத்தவர்களாக சித்தரிக்கப்பட்டனர். நாமும் நம்பி வந்தோம்.


அதை உடைத்து, ’சங்க காலத்தில் தமிழகத்தில் இருந்தவர்கள் ஜைனர்கள் அல்ல ஆசீவகர்கள். ஆசீவகம் தமிழரின் அறிவை வடக்குக்கு கொண்டு சென்றது, வடக்கிலிருந்து எழுத்தோ, வானியலோ இங்கு வரவில்லை’  என்பதே உண்மை    நமது ஐயனார் போலவே அவரை வழிபட நன்மை தான் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...