முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மின்சாரக் கட்டணம் மாதம் ஒரு முறை கணக்கீடு என்னவாயிற்று விக்ரமராஜா வினா

தமிழ் நாட்டில் மின்சாரக் கட்டணம் மாதம் ஒரு முறை கணக்கிட்டு வசூலிக்கபடும் என்ற அறிவிப்பு என்னவாயிற்று


என ஆளும் திமுக வை எதிர்த்து முதல் முறையாகக் கேட்டுள்ளார் வணிகர்சங்கதலைவர் விக்கரமராஜா இவரது மகன் சட்டமன்ற உறுப்பினரும் கூட ,   மின்சாரக் கட்டணம் என்பது 2 மாதங்களுக்கு ஒருமுறை வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தி, கட்டண நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த வகையில், மக்கள் அந்த 100 ,யூனிட் இலவசமாக வருவது தடுக்கும் வகையான  2 மாதங்களிலும் சேர்த்து ஒரு வீட்டில் 100 யூனிட் மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தால், அந்த 100 யூனிட்டுகளுக்கான மின் கட்டணம் முழுவதும் இலவசம். ஆனால், 100 யூனிட்டுகளுக்கு மேலாக மின் செலவு இருந்தால், 101-வது யூனிட்டில் ஆரம்பித்து 200 யூனிட்டுகள் வரையிலாக உள்ள ஒவ்வொரு யூனிட்டுக்கும் 1 ரூபாய் 50 காசு வசூலிக்கப்பட்டது.

உதாரணமாக, ஒரு வீட்டில் 150 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருந்தால், முதல் 100 யூனிட் மின்சாரத்துக்குக் கட்டணம் கிடையாது. 101-வது யூனிட்டிலிருந்து 150-வது யூனிட் வரையிலான 50 யூனிட்டுகளுக்கு மட்டும் கட்டணம் உண்டு. அதாவது ஒரு யூனிட்டுக்கு 1 ரூபாய் 50 காசு என்ற வகையில், 50 யூனிட்டுக்குமாக மொத்தம் 75 ரூபாய். இதனுடன் நிரந்தரக் கட்டணம் 20 ரூபாயைச் சேர்த்து மொத்தமாக 95 ரூபாயை அம்மாதத்துக்கான மின் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.அடுத்ததாக, இந்தக் கட்டண விதிமுறைகளிலேயே இன்னும் பல பிரிவுகள் இருக்கின்றன. அதாவது, முதல் 100 யூனிட் (0-100) மின்சாரம் இலவசம். 100 யூனிட்டுகளுக்கு மேல் 200 யூனிட்டுகளுக்குள்ளாகப் பயன்படுத்துபவர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 1 ரூபாய் 50 காசு கட்டணம் என்பதையும் ஏற்கெனவே பார்த்தோம். இதற்குமேலாக மின்சாரம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் உள்ள தனித்தனியான கட்டண விதிமுறைகளாக (2016-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கட்டணங்கள் மீண்டும் 2017-ஆம் ஆண்டில் திருத்தியமைக்கப்பட்டன. அந்த வகையில், திருத்தியமைக்கப்பட்ட கட்டணங்களைக் காண்போம்)


200 யூனிட்டிலிருந்து 500 யூனிட்டுகளுக்கு உள்ளாகப் பயன்படுத்துபவர்களுக்கு கட்டண விதிமுறைகள் மாறுகின்றன. அதாவது, இவர்களுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம். 101-வது யூனிட்டிலிருந்து 200-வது யூனிட் வரையிலாக ஒவ்வொரு யூனிட்டுக்கும் 2 ரூபாய் கட்டணம். அடுத்து, 201-வது யூனிட்டிலிருந்து 500 யூனிட் வரையிலான ஒவ்வொரு யூனிட்டுக்கும் 3 ரூபாய் கட்டணம். இந்த மொத்தக் கட்டணத்தோடு நிரந்தரக் கட்டணம் 30 ரூபாயும் சேர்த்து வசூலிக்கப்படும்.அடுத்ததாக, 500 யூனிட்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு, முற்றிலும் வேறான கட்டண நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, இவர்களுக்கும் முதல் 100 யூனிட் வரை இலவசம். 101-வது யூனிட்டிலிருந்து 200 யூனிட் வரையிலாக ஒவ்வொரு யூனிட்டுக்கும் 3 ரூபாய் 50 காசு கட்டணம். 201-வது யூனிட்டிலிருந்து 500-வது யூனிட் வரையிலாக ஒவ்வொரு யூனிட்டுக்கும் 4 ரூபாய் 60 காசு கட்டணம். 500 யூனிட்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு யூனிட்டுக்கும் 6 ரூபாய் 60 காசுகள் வசூலிக்கப்படுகின்றன. மேலும் இந்த மொத்தக் கட்டணத்தோடு நிரந்தரக் கட்டணத் தொகையாக 50 ரூபாயும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.



சாதாரணமாக, வீடுகளில் வசூலிக்கப்படும் மின் கட்டண நடைமுறை இதுதான். இது தவிர உள்ளாட்சி அமைப்புகள், வணிக நிறுவனங்கள், கைத்தறி தொழில், ஆன்மிக தலங்கள் என ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியே கட்டண விதிமுறைகள் பின்பற்றப்பட்டுவருகின்றன. இனி, இப்போதைய பிரச்னைக்கு வருவோம். ஒரு வீட்டில்  இரண்டு  மாதங்களிலும் பயன்படுத்தப்பட்ட மொத்த மின் பயன்பாட்டு அளவு 620 யூனிட் என்று வைத்துக்கொள்வோம். மின் கட்டண விதிமுறைகளின்படி, இந்த 620 யூனிட்களுக்கு மொத்தம் 1,652 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், இது முறையானது அல்ல. எனவே, இப்போது இரண்டு  மாதங்களுக்கும் சேர்த்து கணக்கிடப்பட்டுள்ள மொத்த மின் அளவினை இரண்டால் வகுத்தால், பயன்படுத்திய மின் அளவு கிடைத்துவிடும். அந்த வகையில், மேற்கண்ட 620 யூனிட்டை இரண்டால் வகுத்தால், ஒரு மாதம் பயன்படுத்திய மின் அளவு என்பது 310 யூனிட்டுகள். அதேபோல், மற்றொரு மாத மின் அளவு 310 யூனிட்டுகள் என்பதாகிவிடுகிறது.இப்போது, ஒரு மாத 310 யூனிட் மின்சாரத்தில் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாகி விடுகிறது. அடுத்ததாக 101-லிருந்து 200 வரையிலான யூனிட்டுகளில் ஒவ்வொரு யூனிட்டுக்கும் 2 ரூபாய் வீதம் கணக்கிட்டால் மொத்தம் 200 ரூபாய். அடுத்து, 201-வது யூனிட்டிலிருந்து 310-வது யூனிட் வரையிலாக ஒவ்வொரு யூனிட்டுக்கும் 3 ரூபாய் வீதம் கணக்கிட்டால் மொத்தம் 330 ரூபாய். ஆக மொத்தம் 530 ரூபாய். இதனோடு நிரந்தரக் கட்டணம் ரூபாய் 30-ஐ சேர்த்தால் மொத்தம் 560 ரூபாய் தான். 

இதேபோல், மற்றொரு  மாத மின்சார அளவான 310 யூனிட்டுக்கும் 560 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. ஆக மேற்கண்ட இரண்டு  மாதங்களுக்கும் சேர்த்து மொத்தமாக செலுத்தவேண்டிய தொகை என்பது 560 + 560= 1,120 ரூபாய். அவ்வளவு தான். (தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள மின் கட்டண அட்டவணையைப் பார்க்கவும்) இதை தான் தற்போது வணிகர்கள் சங்கம் சார்ந்த விக்ரமராஜா வினாவாக ஏழுப்பியுள்ளார் மாதா மாதம் மின்சாரக் கட்டணம் கணக்கெடுப்பு செய்தால் மக்கள் பாதிப்புகள் குறையும் தற்போது வினா ஏழுந்துள்ள நிலையில் மாநில மின்துறை அமைச்சர் பதில் இதுவரை பதிவாகவில்லை. .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...