முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தலாமா? நடத்த முடியாதா? நீதிபதிகள் வினாவிற்கு இன்று விவாதம் விடைதருமா!

அயல் நாட்டின் சட்டங்கள், நமது நாட்டின் பாம்பரியம் மற்றும் கலாச்சாரம், வரலாற்றுப் பெறுமையுடன் கலந்த காலங்காலமாக வந்த  வாழ்வியல் முறைமை


எல்லாம் அறியாத. நம் நாட்டிற்கு துளியும் சம்பந்தப்படாத பீட்டா ,புளூகிராஸ் போன்ற அமைப்புகள் நமது நாட்டு விழாக்களில் புகுந்து தடை செய்ய முயலும் செயலாகப் பார்க்கும் பீட்டாவின் நீதிமன்ற வாதத்துக்கு மத்தியில் தமிழ்நாட்டில் ஆலயத்தில் நந்தியாக, ஆன்மீகத்தில் ரிஷபமாக, விவசாயத்தில் உதவும் காளைகளை வீட்டில் பாசமாக வளர்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தலாமா? நடத்த முடியாதா? என்பது தான் நமது மக்கள் சார்ந்த வினா ?தற்போதய சட்டம் நீதி சார்ந்த இறுதிக் கேள்வியாக உள்ளதென உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

2011 அம் ஆண்டில் காளைகள் காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு வலுத்தது . பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தடை விதித்தது.

இந்த தடைக்குத் தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பும் எழுந்த நிலையில். 2017 ஆம் ஆண்டில் சென்னை மெரினா கடற்கரையில் பெரிய மக்கள் திரள் போராட்டம் நடந்ததையடுத்து அப்போதிருந்த அதிமுக அரசு ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் அவசர சட்டத்தை கொண்டு வந்தது.


வந்தேரிகளான பீட்டா போன்ற அமைப்புகள் காளைகளைப் பாதுகாக்க ஜல்லிக்கட்டா? ஏற்கவே முடியாது. என வானத்துக்கும் பூமிக்கும் குதியோகுதியெனக் குதித்து  வாதத்தை முன்வைக்க  உச்சநீதிமன்றம் இந்த  சுளீர் கேள்வியை கேட்ட நிலையில் வழக்கு இன்றும் விசாரணைக்கு வருகிறது.

 ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான அவசரச் சட்டத்துக்கு தடைகோரி பீட்டா உள்ளிட்ட அமைப்பினர் உச்சநீதிமன்றத்தி கர்நாடகாவில் நடத்தப்பட்டு வரும் கம்பளா எனும் எருதுகட்டு விடும் போட்டிக்கு தடைகோரியும் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.  உச்சநீதிமன்ற நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நடக்கிறது. நேற்று  காலையில் மீண்டும் விசாரணை நடைபெற்றது.  அதிமுக அரசு ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் பாசமாக வளர்க்கப்படும் காளைகள் பீட்டா வாதத்துக்கு மத்தியில் தமிழ்நாட்டில் காளைகள் பாசமாக வளர்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாமா? நடத்த முடியாதா? என்பது தான் இறுதிக் கேள்வியாக உள்ளதென உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்தாக அமைந்துள்ளது  .நேற்று  மீண்டும் நடந்த  விசாரணையில்


பீட்டா சார்பில் வாதம் செய்த மூத்த வழக்குரைஞர்  ஷ்யாம் திவான் வாதிட்டார். ‛‛பாரம்பரியக் காளைகளை பாதுகாக்க ஜல்லிக்கட்டு பயன்படுகிறது என்ற வாதத்தை ஏற்க முடியாது. ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் சட்டம் இயற்றியிருப்பது உச்சநீதிமன்ற அதிகாரத்தில் தலையிடுவது போன்றதாக உள்ளது. மேலும் காளைகளை பாதுகாப்பதாகக் கூறி அவசரச் சட்டம் வாயிலாக காளைகளை வீரர்களுக்கு மத்தியில் போராட வைப்பது கொடூரமானது. காளையை வளர்ப்பது நல்ல விஷயம் தான். ஆனால் காளைகளை கொடுமைப்படுத்தக்கூடாது. விதிகள், சட்டங்கள் இருந்தாலும் கூட அதனை முழுமையாக பாதுகாப்பானதாக நடைமுறைப்படுத்த முடியாது'' என்றார்.


வாதங்களை கேட்ட நீதிபதிகள் கேஎம் ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி டி ரவிக்குமார் அமர்வு சில கருத்துகளைத் தெரிவித்தனர். அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிக்காக புதிதாக சட்டம் உள்ளது. வழிமுறைகள் உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர்  கண்காணிக்கிறார். விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், ஜல்லிக்கட்டுக் காளைகள் திடீரென இந்த விளையாட்டில் பயன்படுத்தப்படுவது இல்லை. முறையான பயிற்சிகள் வழங்கப்பட்ட பிறகு தான் ஜல்லிக்கட்டில் பயன்படுத்தப்படுகிறது.

இறுதிக் கேள்வி இதுதான்  பல ஆண்டு காலமாக இந்தப் போட்டிகள் நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தனியாகப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும், மிகுந்த பாசத்துடன் காளைகள் வளர்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டை கொடூரமானதென அனைவரும் கூறுவார்களா?. இருப்பினும் காளைகளை கொடுமைப்படுத்தப்படும் செயல்களை அனுமதிக்க முடியாது. தற்போது விதிமீறல் இருப்பதாகத் தெரியவில்லை. எங்களைப் பொறுத்தமட்டில் ஜல்லிக்கட்டை எந்த வடிவத்திலாவது நடத்தலாமா? அல்லது நடத்தவே முடியாதா? என்பது தான் இறுதிக்கேள்வியாக உள்ளது'' எனக்கூறி வழக்கை நேற்று  ஒத்திவைத்தனர். அந்த வழக்கு மீண்டும் இன்று  விசாரணைக்கு வர உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...