நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்விக்கு மத்திய இரயில்வே தொலைத்தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பதில்
572 ஒரே நிலையம், ஒரே விளைபொருள் திட்டத்தில் 535 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன
உள்ளூர் மக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்ல உதவும் வகையிலும், புறந்தள்ளபட்ட பிரிவைச் சேர்ந்த உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருமானத்தை ஈட்டும் விதமாகவும், ஒரே நிலையம் ஒரே விளைபொருள் (ஓஎஸ்ஓபி) திட்டத்தை இந்திய ரயில்வே செயல்படுத்தி வருகிறது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள 572 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு ஓஎஸ்ஓபி ரயில் நிலையங்களாக மாற்றப்படுகின்றன.
உள்ளூர் உற்பத்தியாளர்களின் விளைபொருட்கள் சந்தைக்கு எடுத்துச் செல்ல இந்தத் திட்டம் உதவும். ஒன்றுக்கும் மேற்பட்ட விளைபொருட்கள் இருக்கும் பட்சத்தில், விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சுழற்சி முறையில் தங்கள் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதி வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் சோதனை முயற்சி கடந்த 2022 மார்ச் 25-ம் தேதி தொடங்கப்பட்டது. இதுவரை இந்தத் திட்டத்தில் 532 ரயில் நிலையங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பின்வரும் பிரிவுகளின் அடிப்படையில் உற்பத்திப் பொருட்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
கைவினைப் பொருட்கள் / கலைப்பொருட்கள்
ஜவுளி மற்றும் கைத்தறி
பாரம்பரிய ஆடைகள்
உள்ளூர் வேளாண் பொருட்கள் /பதப்படுத்தப்பட்ட உணவு / பாதி பதப்படுத்தப்பட்ட உணவு
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே தொலைத்தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.இரயில்வேயில் அனுமதி வழங்கப்பட்ட 2,843 கிலோமீட்டர் தொலைவு பிரத்யேக சரக்கு வழித்தடத்தில் 1,610 கிலோமீட்டர் தொலைவுப் பணிகள் நிறைவு
ரயில்வே அமைச்சகம் 2 அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடங்களை (டிஎஃப்சி) அமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறது. இதற்காக லூதியானா முதல் சோன்நகர் வரையிலான 1,337 கிலோமீட்டர் தொலைவு கிழக்கு பிரத்யேக சரக்கு வழித்தடமும், ஜவஹர்லால் நேரு துறைமுக முனையத்திலிருந்து தாத்ரி வரையிலான 1,506 கிலோமீட்டர் தொலைவு மேற்கு பிரத்யேக சரக்கு வழித்தடமும் அமைக்கப்படுகிறது. மொத்தம் 2,843 தொலைவு இரண்டு பிரத்யேக சரக்கு வழித்தடத்தில் தற்போது 1610 கிலோமீட்டர் தொலைவு வரை கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ளன. இவ்விரு முனையம் அமைக்கப்படுவதுடன் சரக்கு ரயில் போக்குவரத்துத் திறன் மேம்படுத்தப்படும். அதே போல், அதிக அளவிலான சரக்குகளும் கையாளப்படும்.
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே தொலைத்தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.விரைவு சக்தி முனையக் கொள்கையின் கீழ் 79 சரக்கு முனையங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முதன்மை அனுமதி
விரைவுசக்தி சரக்கு முனையக் கொள்கையின்படி (ஜிசிடி) நாடு முழுவதும் 2022 -23, 2023-24 மற்றும் 2024-25 ஆகிய 3 ஆண்டுகளில் 100 சரக்கு முனையங்களை மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே 22 முனையங்கள் ஜிசிடி-யின் கீழ், முனையங்களாக மேம்படுத்தப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளன. இந்தத் திட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 125 விண்ணப்பங்களில் 79 விண்ணப்பங்களுக்கு முதற்கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஜிசிடி-ஆபரேட்டர்கள் ரயில்வேக்கு சொந்தமில்லாத நிலங்களை அடையாளம் கண்டு அங்கு முனையம் அமைப்பதற்கான பணிகளை முடுக்கி விடுவர். மேலும், ரயில்வேக்கு முழுமையாக மற்றும் பகுதியாக சொந்தமான நிலங்களும் கண்டறியப்பட்டு முனையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் டெண்டர் மூலம் தேர்வு செய்யப்பட்டு மேற்கொள்ளப்படும்.
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே தொலைத்தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.இரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 57 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன
ரயில் நிலையங்களில் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் மறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வது குறித்து ரயில்வே அமைச்சகம் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் அடிப்படையில், முக்கிய நகரங்கள், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையொட்டி அமைந்துள்ள ரயில் நிலையங்களில் மறுமேம்பாட்டுப் பணிகளை பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
இதன்படி இந்திய ரயில்வேயின் 43 ரயில் நிலையங்களில் மறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 21 ரயில் நிலையங்களில் மேம்பாட்டுக்கான டெண்டர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்தம் 57 ரயில் நிலையங்களில் மறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது என ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதில் பீகாரின் கயா,. பபுதம் மோதிஹரி மற்றும் முசாபூர் ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளன. இதே போல் மத்தியப் பிரதேசத்தின் ராணி கமலாபட்டி ரயில் நிலையம், குஜராத்தின் காந்திநகர் ரயில் நிலையம், கர்நாடகாவின் விஸ்வேஸ்வரய்யா முனையம் ஆகியவை மேம்படுத்தப்பட்டு செயல்படத் தொடங்கும்.
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே தொலைத்தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்