முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்.உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு 388 பக்கத் தீர்ப்பு

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இந்திய அரசின் செயல்பாடுகளில் எந்தக் குறைபாட்டையும் காணவில்லை. என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் நீதிபதி நாகரத்னா மட்டும் ஒரேயொரு விதத்தில் முரண்பட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி  2016- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி  இரவு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாகக் கூறிய போது இந்தியாவில் புழக்கத்திலிருந்த ரூபாய்.500, மற்றும் ரூபாய் .1,000 நோட்டுகளை செல்லாதென அறிவித்தார்.



நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்கவும், தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்கவும், இணையவழி பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும் இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய அரசின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.  மக்கள் தங்களிடமிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை வங்கிகளில் கொடுத்து சில கட்டுப்பாடுகளுடன் புதிய ரூபாய்  நோட்டுக்களைப் பெற்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலை  குறித்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்.58 நபர்கள்  வழக்குத் தொடர்ந்தனர்.



மேற்கூறிய  மனுக்களை நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.




பண மதிப்பிழப்பு நடவடிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரையில் மட்டுமே மேற்கொள்ள வேண்டுமென வாதிட்ட மனுதாரர் தரப்பின் மூத்த வழக்கறிஞரும் ,முன்னால் அமைச்சருமான  ப.சிதம்பரம், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாகவே குற்றம்சாட்டினார்வரி ஏய்ப்பைத் தடுப்பது உள்ளிட்ட பலகட்ட நன்மைகளைக் கருத்தில் கொண்டு, விரிவான ஆலோசனைக்குப் பிறகே பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதை ரத்து செய்யக் கூடாதென்றும் மத்திய அரசின் சார்பில் வாதிடப்பட்டது. அந்த நடவடிக்கையால் ஆரம்ப கட்டத்தில் சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் நாளடைவில் அவை சரி செய்யப்பட்டதாகவும் இந்திய ரிசர்வ் வங்கியால்  தெரிவிக்கப்பட்டது.




அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் பண பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் டிசம்பர் மாதம் 7- ஆம் தேதி உத்தரவிட்டு. தீர்ப்பையும் தள்ளி வைத்தனர்.

இந்த நிலையில், நீதிபதி எஸ்.அப்துல் நசீர் நாளை (4-ஆம் தேதி) பணிஓய்வு பெறுவதால் பண மதிப்பிழப்பு வழக்கில் இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பு வெளியிட உச்சநீதிமன்றம் முடிவு செய்தது. நேற்று பகல் 11 மணிக்கு தீர்ப்பு வெளியிடப்பட்டது. தீர்ப்பை நீதிபதி கவாய் வாசித்தார். அதில் கூறப்பட்டிருந்தது:-



மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பது பொருளாதார ரீதியிலான அரசின்  கொள்கை முடிவாகும். எனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை திரும்பப் பெற இப்போது உத்தரவு பிறப்பிக்க இயலாது.


மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் செயல்பாடுகளில் எந்தவித குறைபாட்டையும் காண இயலவில்லை. இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்து பேசி உரிய முறையில் தான் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். எனவே இந்த விஷயத்தில் மத்திய அரசைக் குறை கூற முடியாது.

மத்திய அரசின் நடவடிக்கை உரிய முறையில் உள்ளதால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்துத் தாக்கல் செய்த  58 மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம். பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும். மத்திய அரசின் நடவடிக்கை ஏற்புடையது என இந்த நீதிமன்றம்  கருதுகிறது.

இந்த நடவடிக்கையில் உரிய இலக்கு எட்டப்பட்டதா என்பதை விசாரிப்பது பொருத்தமானதல்ல. அரசின் நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தி தருகிறது. எனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை விசயத்தில் எந்த புதிய உத்தரவும் பிறப்பிக்கப்படமாட்டாது.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஏனோதானோவென உடனடியாக திடீரென்று எடுக்கவில்லை. இந்திய ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழுவுடன் சுமார் 6 மாதங்கள் மத்திய அரசு ஆய்வு செய்திருக்கிறது.

போதுமான ஆய்வுகளைச் செய்த பின்னர் தான் மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது. காரணமே இல்லாமல் பணமதிப்பிழப்பு செய்து உள்ளனர் என்று சொல்வதையும் ஏற்க முடியாது. எனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லுபடியாகும்.

என  தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்சில் பெரும்பாலான நீதிபதிகளின் கருத்துக்கள் ஒருமித்த நிலையில் உள்ளன. ஆனால் நீதிபதி நாகரத்னா மட்டும் ஒரே ஒரு அம்சத்தில் சற்று முரண்பாடான கருத்தை தெரிவித்து உள்ளார்.

அவர் இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் 26 (2) பிரிவின் படி மத்திய அரசின் அதிகாரங்கள் தொடர்பாக அவர் மாறுபட்ட கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவரது  தீர்ப்பில், ரூபாய் "500, மற்றும் 1000  நோட்டுக்களை மதிப்பிழக்கச் செய்யும் நடவடிக்கை சட்ட ரீதியில் மட்டுமே இருக்க வேண்டும். வெறும் அறிவிப்பாக இருந்ததை ஏற்க முடியாது.

பணமதிப்பிழப்பு தொடர்பாக ஜனநாயக முறையில் பாராளுமன்றத்தில் சட்ட ரீதியாக விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அதை விடுத்து அரசாணை மூலம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்திருக்கக் கூடாது.

எனவே எனது கருத்துபடி பண மதிப்பிழப்பு நடவடிக்கை சட்டபூர்வமானது அல்ல. ஆனால் மத்திய அரசு நடவடிக்கையை 2016-ஆம் ஆண்டே எடுத்து விட்டதால் அதை திரும்ப பெற இயலாது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை அதிகாரத்தின் படி எடுக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு எதிராக செய்யப்பட்டுள்ளது. எனவே அது சட்டப்பூர்வமான தில்லை என்பதே எனது முதன்மையான கருத்தாகும் என்று கூறினார்.

என்றாலும் மற்ற நான்கு நீதிபதிகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பளித்தனர். இதனால் அரசியல் சாசன அமர்வில் நான்குக்கு ஒன்று என்ற பெரும்பாலான நீதிபதிகளின் கருத்துக்களுடன் தீர்ப்பு வெளியானது.     24 மணி நேரத்தில் எடுத்த அவசர முடிவு. பணமதிப்பிழப்பு நடவடிக்கையே தவறு! தனி நபராக  தீர்ப்பளித்த  பெண் நீதிபதி! 

தனது தீர்ப்பில், இது மிகவும் சீரியசான விஷயம். இதை சட்டத்திற்கு புறம்பாகச் செய்துள்ளனர். இதில் அரசு வெறுமனே அரசாணை வெளியிட்டு முடிவு எடுத்தது தவறு. இதற்காக முறையாக சட்டமியற்றி இருக்க வேண்டும்.  

சட்டம் மத்திய அரசுக்கு குறிப்பிட்ட சீரியஸ் பணத்தை குறிப்பிட்ட அளவு மட்டுமே மதிப்பிழக்கச் செய்ய வழி வகுக்கிறது. ஆனால் மொத்தமாக பணத்தை மதிப்பிழப்பு செய்ய அதிகாரம்  தரவில்லை. 

அதோடு ஆர்பிஐ அமைப்பு இதில் பரிந்துரை செய்யவில்லை. மத்திய அரசின் பரிந்துரையை ஆர்பிஐ ஏற்றுக்கொண்டது.  அதை ஆர்பிஐயின் பரிந்துரையாக ஏற்றுக்கொள்ள முடியாது. 

வெறும் 24 மணி நேரத்தில் இந்த முடிவை எடுத்துள்ளனர். ஆனாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டு வருடங்கள் ஓடிவிட்டதால் இதில் இழப்பீடுகளை வழங்க முடியாது, என்று நீதிபதி பிவி நாகரத்னா தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த