முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்.உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு 388 பக்கத் தீர்ப்பு

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இந்திய அரசின் செயல்பாடுகளில் எந்தக் குறைபாட்டையும் காணவில்லை. என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் நீதிபதி நாகரத்னா மட்டும் ஒரேயொரு விதத்தில் முரண்பட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி  2016- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி  இரவு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாகக் கூறிய போது இந்தியாவில் புழக்கத்திலிருந்த ரூபாய்.500, மற்றும் ரூபாய் .1,000 நோட்டுகளை செல்லாதென அறிவித்தார்.



நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்கவும், தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்கவும், இணையவழி பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும் இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மத்திய அரசின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.  மக்கள் தங்களிடமிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை வங்கிகளில் கொடுத்து சில கட்டுப்பாடுகளுடன் புதிய ரூபாய்  நோட்டுக்களைப் பெற்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலை  குறித்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்.58 நபர்கள்  வழக்குத் தொடர்ந்தனர்.



மேற்கூறிய  மனுக்களை நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.




பண மதிப்பிழப்பு நடவடிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரையில் மட்டுமே மேற்கொள்ள வேண்டுமென வாதிட்ட மனுதாரர் தரப்பின் மூத்த வழக்கறிஞரும் ,முன்னால் அமைச்சருமான  ப.சிதம்பரம், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாகவே குற்றம்சாட்டினார்வரி ஏய்ப்பைத் தடுப்பது உள்ளிட்ட பலகட்ட நன்மைகளைக் கருத்தில் கொண்டு, விரிவான ஆலோசனைக்குப் பிறகே பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதை ரத்து செய்யக் கூடாதென்றும் மத்திய அரசின் சார்பில் வாதிடப்பட்டது. அந்த நடவடிக்கையால் ஆரம்ப கட்டத்தில் சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் நாளடைவில் அவை சரி செய்யப்பட்டதாகவும் இந்திய ரிசர்வ் வங்கியால்  தெரிவிக்கப்பட்டது.




அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் பண பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் டிசம்பர் மாதம் 7- ஆம் தேதி உத்தரவிட்டு. தீர்ப்பையும் தள்ளி வைத்தனர்.

இந்த நிலையில், நீதிபதி எஸ்.அப்துல் நசீர் நாளை (4-ஆம் தேதி) பணிஓய்வு பெறுவதால் பண மதிப்பிழப்பு வழக்கில் இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பு வெளியிட உச்சநீதிமன்றம் முடிவு செய்தது. நேற்று பகல் 11 மணிக்கு தீர்ப்பு வெளியிடப்பட்டது. தீர்ப்பை நீதிபதி கவாய் வாசித்தார். அதில் கூறப்பட்டிருந்தது:-



மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பது பொருளாதார ரீதியிலான அரசின்  கொள்கை முடிவாகும். எனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை திரும்பப் பெற இப்போது உத்தரவு பிறப்பிக்க இயலாது.


மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் செயல்பாடுகளில் எந்தவித குறைபாட்டையும் காண இயலவில்லை. இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்து பேசி உரிய முறையில் தான் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். எனவே இந்த விஷயத்தில் மத்திய அரசைக் குறை கூற முடியாது.

மத்திய அரசின் நடவடிக்கை உரிய முறையில் உள்ளதால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்துத் தாக்கல் செய்த  58 மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம். பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும். மத்திய அரசின் நடவடிக்கை ஏற்புடையது என இந்த நீதிமன்றம்  கருதுகிறது.

இந்த நடவடிக்கையில் உரிய இலக்கு எட்டப்பட்டதா என்பதை விசாரிப்பது பொருத்தமானதல்ல. அரசின் நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தி தருகிறது. எனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை விசயத்தில் எந்த புதிய உத்தரவும் பிறப்பிக்கப்படமாட்டாது.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஏனோதானோவென உடனடியாக திடீரென்று எடுக்கவில்லை. இந்திய ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழுவுடன் சுமார் 6 மாதங்கள் மத்திய அரசு ஆய்வு செய்திருக்கிறது.

போதுமான ஆய்வுகளைச் செய்த பின்னர் தான் மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது. காரணமே இல்லாமல் பணமதிப்பிழப்பு செய்து உள்ளனர் என்று சொல்வதையும் ஏற்க முடியாது. எனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லுபடியாகும்.

என  தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்சில் பெரும்பாலான நீதிபதிகளின் கருத்துக்கள் ஒருமித்த நிலையில் உள்ளன. ஆனால் நீதிபதி நாகரத்னா மட்டும் ஒரே ஒரு அம்சத்தில் சற்று முரண்பாடான கருத்தை தெரிவித்து உள்ளார்.

அவர் இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் 26 (2) பிரிவின் படி மத்திய அரசின் அதிகாரங்கள் தொடர்பாக அவர் மாறுபட்ட கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவரது  தீர்ப்பில், ரூபாய் "500, மற்றும் 1000  நோட்டுக்களை மதிப்பிழக்கச் செய்யும் நடவடிக்கை சட்ட ரீதியில் மட்டுமே இருக்க வேண்டும். வெறும் அறிவிப்பாக இருந்ததை ஏற்க முடியாது.

பணமதிப்பிழப்பு தொடர்பாக ஜனநாயக முறையில் பாராளுமன்றத்தில் சட்ட ரீதியாக விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அதை விடுத்து அரசாணை மூலம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்திருக்கக் கூடாது.

எனவே எனது கருத்துபடி பண மதிப்பிழப்பு நடவடிக்கை சட்டபூர்வமானது அல்ல. ஆனால் மத்திய அரசு நடவடிக்கையை 2016-ஆம் ஆண்டே எடுத்து விட்டதால் அதை திரும்ப பெற இயலாது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை அதிகாரத்தின் படி எடுக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு எதிராக செய்யப்பட்டுள்ளது. எனவே அது சட்டப்பூர்வமான தில்லை என்பதே எனது முதன்மையான கருத்தாகும் என்று கூறினார்.

என்றாலும் மற்ற நான்கு நீதிபதிகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பளித்தனர். இதனால் அரசியல் சாசன அமர்வில் நான்குக்கு ஒன்று என்ற பெரும்பாலான நீதிபதிகளின் கருத்துக்களுடன் தீர்ப்பு வெளியானது.     24 மணி நேரத்தில் எடுத்த அவசர முடிவு. பணமதிப்பிழப்பு நடவடிக்கையே தவறு! தனி நபராக  தீர்ப்பளித்த  பெண் நீதிபதி! 

தனது தீர்ப்பில், இது மிகவும் சீரியசான விஷயம். இதை சட்டத்திற்கு புறம்பாகச் செய்துள்ளனர். இதில் அரசு வெறுமனே அரசாணை வெளியிட்டு முடிவு எடுத்தது தவறு. இதற்காக முறையாக சட்டமியற்றி இருக்க வேண்டும்.  

சட்டம் மத்திய அரசுக்கு குறிப்பிட்ட சீரியஸ் பணத்தை குறிப்பிட்ட அளவு மட்டுமே மதிப்பிழக்கச் செய்ய வழி வகுக்கிறது. ஆனால் மொத்தமாக பணத்தை மதிப்பிழப்பு செய்ய அதிகாரம்  தரவில்லை. 

அதோடு ஆர்பிஐ அமைப்பு இதில் பரிந்துரை செய்யவில்லை. மத்திய அரசின் பரிந்துரையை ஆர்பிஐ ஏற்றுக்கொண்டது.  அதை ஆர்பிஐயின் பரிந்துரையாக ஏற்றுக்கொள்ள முடியாது. 

வெறும் 24 மணி நேரத்தில் இந்த முடிவை எடுத்துள்ளனர். ஆனாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டு வருடங்கள் ஓடிவிட்டதால் இதில் இழப்பீடுகளை வழங்க முடியாது, என்று நீதிபதி பிவி நாகரத்னா தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...