முன்னால் முதல்வர் காலம்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா இவர் தற்போது ஜெயலலிதாவின் சொத்துக்கும் அவரது தண்டணை அபராதத்தின் கடனுக்குமான இரண்டாம் தரப்பு வாரிசுதாரராகவே பார்க்கப்படுகிறார்,
இவர் ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் பேட்ரிக் என்ற நபரை மாதவன் என்ற பெயரில் திருமணம் செய்தவர் அதற்கு அப்போது ஜெ.ஜெயலலிதாவின் ஆதரவில்லை, அவரது உறவுகள் அப்போது சசிக்கலா நடராஜன் சார்ந்து அவரோடு வாழ்ந்து வந்தவர்களே, தற்போது ஜெயலலிதாவின் இரண்டாம் தரப்பில் வாரிசு என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு காரணமாக தீபா மக்களால் ஜெயலலிதா மரணத் தருவாயில் அறியப்படும் நபராவார், அவருக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது, அதை அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என அழைக்கப்படும் ஓ.பன்னீர் செல்வம் சென்று பார்து வந்த நிலையில் தீபாவின் குழந்தைக்கு பெயர்சூட்டும் விழாவை நடத்தத் திட்டமிட்டு அவர் ஒரு அழைப்பிதழ் அடித்தார் அதில் கவிதை என்ற பெயரில் அவர் எழுதிய கவிதையும் உள்ளதில், அரசியல் பிரபலங்களை அழைத்து பெயர் சூட்டு விழா நடத்தினார்,
நேற்று ஜெ.தீபா- மகளுக்குப் பெயர் சூட்டு விழா நடைபெற்றது. அழைப்பிதழில் இடம் பெற்ற கவிதையை எழுதியவர் ஜெ.தீபா என்று அச்சிடப்பட்டிருந்தது.
. அரசியல் பிரபலங்கள் உள்ளிட அறிமுகமான பல தரப்பினருக்கு அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார் ஜெ. தீபா. குறிப்பாக, ஈரோடு இடைத்தேர்தலில் பணியிலிருக்கும் ஓ.பன்னீர் செல்வத்தைச் சந்தித்து பத்திரிகைக் கொடுத்தார். “அரசியல் காரணங்களுக்காக அல்ல. குடும்ப நிகழ்ச்சிக்காக அவர்களை அழைத்திருக்கிறேன்” என்று தீபா கூறிய நிலையில், நேற்று 5-ஆம் தேதி இந்தப் பெயர் சூட்டு விழா நடைபெற்றது,
ஜெ.ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவுக்குக் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி குழந்தை பிறந்தது. அதை அவரது பிறந்த நாளான நவம்பர் 10-ஆம் தேதி அறிவித்தார் தீபா.
அழைப்பில் அழைப்பிதழில் உள்ள கவிதை என்று கூறும் வரிகள் இது
“கடவுள் கொடுத்த கிஃப்ட்தான் என் மகள். என் அத்தையின் ஆசீர்வாதம், என் அம்மாவின் ஆசீர்வாதம், மாதவனின் அம்மா ஆசீர்வாதத்தால்தான் இந்த வாழ்நாள் சந்தோஷம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. தாய்மையில் பூரித்துப்போனேன். இந்த நேரத்தில் இவ்வளவு சந்தோஷமாக இருப்பது நாங்கள்தான்” என்று வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த நிலையில்தான், நேற்று சென்னை தியாகராயநகரிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் ஜெ.தீபா - மாதவன் தம்பதியரின் மகளுக்குப் பெயர் சூட்டுவிழா நடைபெற்றது. அழைப்பிதழில்.
"கீதையின் பொருளாக எது நடக்க இருக்கின்றதோ
அது நன்றாகவே நடக்கும்.
புல்லாங்குழலின் இசையாக
மயிலிறகுபோல் இதமாக இம்மண்ணில்
பாதங்கள் பதிக்க வந்த அருமை மகளே
இன்று உனக்குப் பெயர் சூட்டுகிறோம்.
இல்லறமே நல்லறமாய்
மங்காத நட்சத்திரமாய்
ஒளி சேர்க்கவந்த அருமை மகளே
இன்று உனக்குப் பெயர் சூட்டுகிறோம்.
தாய்மை என்ற சொல்லுக்கு
என் வாழ்வில் அர்த்தம் அளித்து
அம்மா அப்பா என்று நீ அழகாய்
குறும்புகள் செய்ய காத்திருக்கிறோம்.
அருமை மகளே நீ
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க"கவிதை எழுதியது திருமதி ஜெ.தீபா மாதவன் என்று அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருக்கிறது.
அந்த விழாவில் ஓ.பன்னீர் செல்வத்தின் இரண்டாம் மகன் ஜெயபிரதீப் கலந்து கொண்டார்.
வாழ்த்துகள் . ஜெ.தீபா - மாதவன் தம்பதியரின் குழந்தைக்கு!சந்தேகமே வேண்டாம் ஜெயலலிதாவின் வாரிசு தான் நீதிமன்றமே கூறிய நிலையில் யாரும் மறுக்க முடியாது அதான் அவரது அத்தை சொத்து ஒரு இரண்டாம் தரப்பு வாரிசுக்கு வந்து விட்டதே அந்த தீபா தீபக் இருவரிடமும் ஜெயலலிதாவிற்ற்கு விதிக்கப்பட்ட. அபராதத்துக்கு வசூல் செய்யவேண்டுய நிலை வருகிறது
நீதிமன்றம் கூறும் ஒரு தீர்ப்பு இது.
"குற்றவாளி உயிரிழந்துவிட்டாலும் நீதிமன்றம் அவருக்கு விதித்த அபராத தொகையை அவரின் சொத்துகள் மூலமாகவோ அல்லது சொத்துகளை உரிமை கோருபவர்களிடமிருந்தோ வசூலிக்க வேண்டும்" - எனும் தீர்ப்பு வருகிறது கர்நாடக உயர்நீதிமன்றம்
கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த தொட்டிலே கவுடா என்பவர் சட்ட விரோதமாக மின்சாரத்தை பயன்படுத்திய வழக்கில் அவருக்கு 29 ஆயிரத்து 204 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதன் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது வாரிசுகள் யாரும் வழக்கை மேற்கொண்டு நடத்த முன் வராததால் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டது. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும், நீதிமன்றம் அவருக்கு விதித்த அபராத தொகையை செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதாகக் கூறிய நீதிபதி, அவருக்கு சொந்தமான சொத்துகள் மூலமாகவோ அல்லது சொத்துகளை உரிமை கோருபவர்களிடமிருந்தோ அபராதத்தை வசூலிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.ஆயிரம் தற்குறி ஜால்ராக்கள் ஆதரவைக் காட்டிலும் ஒரு புத்திசாலியின் பகை
வலிமையானது. என்பதை முன்னால் சட்ட அமைச்சரும் தற்போது பாஜகவின் மூத்த தலைவருமான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியின் வழக்கில் வந்த தண்டனை
ஆயிரம் அறிவிலிகள் ஆதரவை விட ஒரு அறிவாளியின் எதிர்ப்பு வலிமையானது என்பதை உறுதிப்படுத்திய நீதிபதி குன்ஹா தீர்ப்பு அதை உறுதி செய்த உச்சநீதிமன்றம். முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மரணிக்கும் வரை வெளியில் யாரென்று தெரியாதவர்கள் தீபாவும் தீபக்கும். இப்போது அததைக்கு விரிக்கப்பட்ட அபாரதம் செலுத்துவார்கள் ..அதாவது கவர் டு த ஆர்டர்.
கருத்துகள்