முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிவகங்கை மற்றும் மதுரையில் எடப்பாடிக்கு எழுந்த எதிர்ப்பு அலை வைரலான இளைஞர்

அதிமுக சார்பில் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஓ.பன்னீர் செல்வ ம்  ஆதரவாளர்கள் கருப்பு பலூன்களைப் பறக்கவிட்டும்,


மதுரை விமான நிலைத்தில் நேரடியாக எதிர்ப்புத் தெரிவித்தும், சிவகங்கை மாவட்ட  ஆட்சித் தலைவர்  அலுவலகம் எதிரில் ஓ பன்னீர் செல்வம் அணியினர்  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.   கருப்பணன் பழனிசாமி கட்சியை விட்டு விலகக் கோரி மருது அழகுராஜ் தலைமையில் நடைபெற்றதில்  எதிர்ப்புத் தெரிவித்து ஓபன்னீர் செல்வம்  ஆதரவாளர்கள் கருப்புக் கொடி, கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர் இச் சூழ்நிலையில் மதுரை விமான நிலையத்தில் அவர் வந்த விமானத்தில்  பயணம் செய்த சிங்கம்புணரி வையாபுரிப்பட்டி இராஜேஸ்வரன்  துரோகி எனக் கூறி நேரிலேயே  அலற விட்ட சம்பவம் நடந்த நிலையில் , அது வைரலானது, அதனால் செய்வதறியாது பதறித் துடித்தார் எடப்பாடி கே.பழனிச்சாமி முகத்தை பாத்தாலே.. சீறிய தலைவர்



சிவகங்கையில் இன்று ஒரே நாளில் எடப்பாடி கே.பழனிசயசாமியும்  ஓ.பன்னீர் செல்வம் ஆகிய  இரு தரப்பினருமே குவிந்தனர் அதனால் காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர் 

ஒரே நாளில், ஒரே இடத்தில், எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இரு தரப்பினரும் குவிந்ததால், சிவகங்கையே பரபரப்பானது.



இரு தரப்பிலுமே இன்று ஒரே நாளில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்துவதாக சொல்லி காவல்துறையிடம் அனுமதி கேட்டார்கள்.

ஆனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை காரணமாகக் காட்டி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியும் மறுக்கப்பட்ட நிலையில் அதை எதிர்த்து  இரு தரப்பினருமே மதுரை உயர்நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். விசாரித்த நீதிமன்றம், ஆர்ப்பாட்டத்தால் எந்த வித சட்டம்ஓழுங்குப் பிரச்சனையும் ஏற்படாதென்று மனுதாரர்கள் சிவகங்கை காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் உறுதிமொழிப் பத்திரம் வழங்க வேண்டுமென்ற நிபந்தனையுடன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்ததையடுத்து, ஓ.பன்னீர் செல்வம்  தரப்பினர் காலை 10.30. மணி முதல் 12.30 மணி வரை அரண்மனை வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தவும், எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டத்தை நடத்தவும் காவல்துறை அனுமதியளித்தது. அதனால்  இருபிரிவிலும், போஸ்டர்கள், பேனர்கள் வைத்தனர். மற்றொரு பக்கம், எடப்பாடி கே. பழனிசாமி வருகையைக் கண்டித்து ஓ.பன்னீர்செல்வம்  தரப்பில் பல இடங்களில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன.. இரு தலைவர்களும் ஒரே இடத்துக்கு வருவதால் காவல்துறையினர் நகர் முழுவதும்  குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.. இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தின்  ஓடுதளத்தில் பேருந்தில் சென்ற போது, எடப்பாடியுடன் பயணித்த பயணி ஒருவர், தன்னுடைய செல்போன் மூலமாக திடீரென ஃபேஸ்புக்கில் லைவ் செய்தார்.. அந்த லைவ் நிகழ்ச்சியில் அவர் பேசவும் ஆரம்பித்து விட்டார், அதில், இப்போது நம்முடன் நமது எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் துரோகத்தின் அடையாளம் எடப்பாடியாருடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன்... அண்ணன் எடப்பாடியார், துரோகத்தின் அடையாளம், சின்னம்மாவிற்கு துரோகம் செய்தவர், 10.5 சதவீதத்தை தென்நாட்டு மக்களுக்கு எதிராக அளித்தவர் என்றார்.. இந்த நபர் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போதே,


எடப்பாடி கே.பழனிசாமியுடன் பாதுகாப்பிற்கு வந்த காவலர் அதைக் கவனித்துவிட்டு, செல்போனை பறித்தார் அதனால், அந்த பஸ்ஸுக்குள்ளேயே பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, அந்த நபரைக் கைது செய்து விசாரித்த போது, அவர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகிலுள்ள வையாபுரிபட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் என்பது தெரிந்தது.. மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில், இடைத்தேர்தல் சமயத்தில் இந்த கசப்பு அதிகமாகிய நிலையில் சிவகங்கை.. துரோகி என அலறிய நபரால், பதறிய எடப்பாடி.. முகத்தை பாத்தாலே தெரிந்தது. 


ஈரோடு தேர்தலில் முறைப்படி அழைப்பு விடுக்காத நிலையில், இந்த 3 பேருமே ஈரோட்டுக்கு செல்லவுமில்லை.. பாஜகவாவது அழைப்பு விடுக்குமென்று காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சிதான் மிஞ்சியது.. இதனால், இந்த தலைவர்களின், மொத்த ஆதரவாளர்களும், தொண்டர்களும் கொதிப்பில் உள்ளனர்.. அந்த ஆதங்கத்தைதான், இன்றைய தினம் ஒரே நாளில், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா நடராஜன்  ஆதரவுத்  தொண்டர்கள் எடப்பாடி கே.பழனிசாமி மீதான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். மதுரை ஏர்போர்ட்டில் நடந்த சம்பவம் குறித்து ஓ.பன்னீர் செல்வம்  ஆதரவாளரும், மூத்த தலைவருமான மருது அழகுராஜ் தெரிவித்ததில், 'எடப்பாடி பழனிசாமி முகத்தைப் பார்த்தாலே துரோகத்தை நினைத்து கோபம் வரும்.. தமிழ்நாடு முழுவதும் அவருக்கு எதிராக எதிர்ப்பு வரும்.. அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும், பழனிசாமிக்கு எதிராகவே இருக்கிறார்கள்..



அவருக்கு மக்கள் மத்தியிலுள்ள எதிர்ப்பின் வெளிப்பாடு தான், இன்று விமான நிலையத்தில் வெளிப்பட்டுள்ளது.. அதிமுகவை சாதிக் கட்சியாக பழனிசாமி மாற்றிவிட்டார்.. எடப்பாடி பழனிசாமி செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு எழும்' என்றார்..           இந்த முறை இடைத்தேர்தல் விவகாரத்தில் தங்களை பாராமுகமாக நடத்திய பாரதிய ஜனதா கட்சி மீது ஓ.பன்னீர்செல்வம்  தரப்பு அதிருப்தியிலுள்ளது.. அண்ணாமலையை கண்டித்து தீர்மானமும் இயற்றவும்  சென்றது. தங்களை பாஜக கழட்டிவிட்டதே என்ற கோபத்தில் தான், நாங்கள் மக்களிடம் செல்லப் போகிறோம், மக்களைச் சந்திக்க போகிறோம் என்று  அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் கூறியிருந்தார். அதன்படியே இன்று ஓ.பன்னீர் செல்வம்  தரப்பு ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்துள்ளது.. ஒருபக்கம் பாஜக மறுபக்கம் எடப்பாடி கே.பழனிசாமி என இரு தரப்புமே தங்களின் சுய  பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டுள்ளது. அதன்வெளிப்பாடுதான், இன்றைய மதுரை விமான நிலையம்  மற்றும் சிவகங்கையில் நடந்த நிகழ்வுகள் பார்க்கப்படுகின்றன.           


     எடப்பாடி கே. பழனிச்சாமிக்கெதிராக மதுரை விமான நிலையத்தில் அமமுக கட்சி சார்ந்த வெளிநாடு வாழ் தமிழர் நலப் பிரிவு சிவகங்கை மாவட்ட அணிச் செயலாளரான  ராஜேஸ்வரன் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் மீது அமமுக நிர்வாகி காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதில்  தனது 1,50,000 ரூபாய் மதிப்புள்ள செல் போனைப் பறித்துக்கொண்டதற்காகவும், தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதற்காகவும், காயம் ஏற்படும் வகையில் மதுரை  விமானநிலையத்தில் தன்னை  தாக்கியதாகவும் ,

எடப்பாடி கே. பழனிச்சாமி அவரது PSO கிருஷ்ணன், சிவகங்கை  சட்டமன்ற உறுப்பினர் PR. செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், சட்டமன்ற  உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் உள்ளிட்டோர் மீது  மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதன் நகல் செய்தியின் பார்வைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,