முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மன்னர் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.

புதுக்கோட்டை  சிவகங்கை ஆகிய இரு மாவட்டங்களின்  எல்லைப்பகுதி  தேவகோட்டை வட்டத்தில் சானாவயல் கிராமத்தில்  மதுரை ஆண்ட பிற்காலப்பாண்டியர்களில் சோழர்களை வென்று கொடி நாட்டிய மன்னர் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.

சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை வட்டம், கொடுவூர் ஊராட்சி மன்றம்  சானாவயல்  சிற்றூர் கிராமத்தின்  வயல்வெளியில் பெருமாள் கோவில் மேட்டில் எழுத்துப் பொறிப்புடன் உடைந்த பலகைக் கல்வெட்டின் கீழ்ப்பகுதி நடப்பட்ட நிலையிலும், கல்வெட்டின் மேற்பகுதி உடைந்த இரண்டு துண்டுகளாகவும்  கண்டறிந்த நிலையில்  படியெடுக்கப்பட்டது.                 பிற்காலப் பாண்டியர்களில், சோழர்களின் ஆட்சியை பொண்ணமராவதி யுத்தத்தின்  மூலமாக  முடிவுக்குக் கொண்டு வந்தவர் கோமாறன் திருபுவன சக்கரவர்த்தி எனும்  பட்டமுள்ள முதலாம் மாறவர்மன்  சுந்தர பாண்டியன் (பொ. ஆ.1216 முதல் 1239 வரை) அவரது ஆட்சிக் காலம், இவரது ஆறாவது ஆட்சியாண்டில் (பொ. ஆ.1222 ) தை மாதம் தாழையூர் நாடு, சிற்றானூர், திருத்தெங்கூர் உடையார் திருநாகீஸ்வரமுடைய நாயனார் கோவிலுக்காக ஸ்ரீ கோயில் ஸ்ரீ ருத்ர, ஸ்ரீ மாகேஸ்வரர்கள், படிகாரியஞ் செய்வோர்கள் உள்ளிட்ட அனைவரும் செம்பொன்மாரி அரசு மாளவ மாணிக்கம், திருக்கான பேருடையாரான உடையார் மாளவ சக்கரவர்த்திகளிடம் கலிதாங்கி மங்கலத்துப் பொன்பற்றி உடையான் சேந்தனுய்ய வந்தான் செம்பியன் பல்லவரயர் என்பவர் பெயரில் காணி நிலத்தை பிடிபாடு அதாவது பதிவு செய்து கொடுத்த செய்தியைக் கூறும்  கல்வெட்டு பதிவு செய்துள்ளது.  கல்வெட்டின் அளவு  நான்கரை அடி உயரத்துடனும் ஒன்றே முக்கால் அடி அகலத்துடனும் ஒரு அடி தடிமனுடன் உடைந்த நிலையில் மூன்று புறங்களில் 114 வரிகளுடன் கூடிய எழுத்து கற்பலகைத்தூணில் உள்ளது.


இவற்றில் 103 வரிகள் தெளிவாகவும், கல்வெட்டின் இறுதிப்பகுதி முழுவதுமாக சிதிலமடைந்த  நிலையிலும் உள்ளது.பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன் செம்பொன் மாரியில் தான் சோழரை (பொ. ஆ. 1219) மூன்றாவது ஆட்சியாண்டில் வென்றதாக  இலங்கை வரலாறு கூறுகிறது. அச்செய்தியை மெய்ப்பிக்கும் வகையில் அவரின் ஆறாம் ஆட்சியாண்டில் இக்கல்வெட்டு நடப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. செம்பொன்மாரி அரசு மாளவ மாணிக்கம், திருக்கான பேருடையாரான உடையார் மாளவ சக்கரவத்திகள் என்பார் சுந்தர பாண்டியன் ஆட்சிக்காலத்தில் மிக முக்கிய அரசியல் அதிகாரம் பெற்றவராக அலுவலராக இருந்துள்ளார். அவருடைய நிலமே கோவில் திருப்பணிக்காக பெறப்பட்டுள்ளதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

சானாவயலில் உடைந்து கிடக்கும் துண்டு கல்வெட்டு குறித்து பொறியாளர் மா.இளங்கோவன் அளித்த தகவல் படி , புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனரும், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை ஆய்வாளருமான மங்கனூர் ஆ.மணிகண்டன் தலைமை தாங்கிய  குழுவினர் சமீபத்தில்  ஆய்வு செய்தனர். அது  குறித்து ஆ. மணிகண்டன் கூறியபோது: ''மேலும், இந்நிலத்தில் அறுவடை செய்யும் பொருட்களில் நெல்லாக இருந்தால் பாதியையும், தினை, வரகு போன்ற நவ தாணியப் பொருட்களாக இருந்தால் கால் பகுதியையும் கோயிலுக்கு கட்டளையாகக் கொடுக்க வேண்டும் என்ற தகவலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது, கோப்பலை பட்டன் திருநாஹீஸ்வரமுடையான், மும்முடி சோழன் ஐய்ய நம்பி, திருவேகம்பந் கூத்தாடி கொற்றபட்ட நனாந திருஞாநசம்பந்தப்பட்டந், ஆழித்தேர் வித்தகந், பொந்மா மாளிகைய பிள்ளை, சிகாரியம் சுந்தரப்பெருமாள், கோயிற்கணக்க நாகதேவந், ஸ்ரீமாளவச்சக்கரவத்திகள், கோயிற் தளத்தார்(தேவரடியார்) முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது.மிழலை கூற்றத்தில் (சங்ககால நாட்டுப் பிரிவின் பெயர்), தாழையூர் நாடு தற்போது தாழனூர் என்றும், சிற்றானுர் சிறுகனூர் என்றும், கலிதாங்கி மங்கலம், கதிராமங்கலம் என்றும், பொன்பற்றி பொன்பேத்தி என்றும், மாறியுள்ளதையும் செம்பொன்மாரி, திருத்தெங்கூர் ஆகிய ஊர்கள் அதே பெயருடன் தற்போதும் அழைக்கப்படுவதையும் அறிய முடிகிறது. இதில் பாதி ஊர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலுமுள்ளன. 


மன்னர் மாறவர்மன் சுந்தரபாண்டியன் முன்னதாக, தனது தந்தையின் ஆட்சியில் 3-வது குலோத்துங்க சோழன் மதுரையை அழித்து கழுதையை பூட்டி நிலத்தை உழுததாக நேரில் கண்ட சுந்தர பாண்டியன் பின்னாளில் மதுரையை மீட்டதோடு மட்டுமின்றி சோழநாட்டையும் கைப்பற்றினார்.பொன்பேத்தியில் வீர ராசேந்திர சோழர் ஆட்சிக்காலத்தில் புத்த மித்திரன் எழுதிய வீர சோழியம் எனும் ஐந்திலக்கண நூலுக்கு உரை எழுதியவர் பெருந்தேவனார். இவர், புத்தமித்திரரின் முன்னோர்களில் ஒருவரான, பொன்பேத்தியைச் சேர்ந்த சேந்தன் என்பவர், படைத் தலைவனாக இருந்து, இலங்கையில் இருந்த குறு நில மன்னர்களான சிங்களத்து அரையன், வில்லவன் ஆகியோரை வென்ற செய்தியை குறிப்பிடுகிறார்.

“பொன்பற்றி உடையான் சேந்தனுய்ய வந்தானான” என்ற கல்வெட்டு வரியின் மூலம் செம்பியன் பல்லவரயர் என்பவர், சேந்தன் வழி வந்தவர் என இக்கல்வெட்டு கூறுகிறது. மிக முக்கிய வரலாற்றுத் தகவல்களை கொண்டுள்ள இக்கல்வெட்டானது பல வரலாற்று ஆய்வுகளுக்குச் சான்றாகும் என்றார். ஆய்வின்போது மா. இளங்கோவன், உள்ளிட்டோர் உடனிருந்தனர். முதலாவது இங்கு பார்க்கவேண்டியது . மதுரையை யாரிடம் இருந்து பாண்டியன் மீட்டார்?

இரண்டாவதாக  மாறவர்ம சுந்தர பாண்டியன். பெயருடன் உள்ள வர்மாக்கள் யார்? சுந்தரம் என்பது தமிழில் அழகன் அது வடமொழிச் சொல்(லாக) இருப்பதையும்  கவனியுங்கள். 

நமது காலத்தில் எம்.ஜி.ஆர் தன் அரசியல் களத்தை படு பயங்கரமாக பகுதிவாரியாக கட்டமைத்திருக்கிறார் - மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், ரிக்சாக்காரன், அடிமைப் பெண், ஆயிரத்தில் ஒருவன், மதுரை வீரன் , குடியிருந்த கோயில். இப்படி பல ஆனால் இதில் பொதுநீதி யாதெனில் மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் எனும் திரைப்படத்திற்குத் தரும்


முக்கியத்துவம் கூட உண்மையாண வரலாற்றுக் கல்வெட்டுக்கள் மீது மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பது வருத்தமே



நமது வரலாறு காணாமல் தடயம் அழிந்தாலும் பரவாயில்லை நமக்கு பொய்யான வரலாறு கூறும் பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன், மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படமே போதும் என்பதாக உள்ள நிலை மக்கள் இந்த பொய் மாயையில் இருந்து மாறுவது எப்போது.? என்பதே

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...