முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மன்னர் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.

புதுக்கோட்டை  சிவகங்கை ஆகிய இரு மாவட்டங்களின்  எல்லைப்பகுதி  தேவகோட்டை வட்டத்தில் சானாவயல் கிராமத்தில்  மதுரை ஆண்ட பிற்காலப்பாண்டியர்களில் சோழர்களை வென்று கொடி நாட்டிய மன்னர் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.

சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை வட்டம், கொடுவூர் ஊராட்சி மன்றம்  சானாவயல்  சிற்றூர் கிராமத்தின்  வயல்வெளியில் பெருமாள் கோவில் மேட்டில் எழுத்துப் பொறிப்புடன் உடைந்த பலகைக் கல்வெட்டின் கீழ்ப்பகுதி நடப்பட்ட நிலையிலும், கல்வெட்டின் மேற்பகுதி உடைந்த இரண்டு துண்டுகளாகவும்  கண்டறிந்த நிலையில்  படியெடுக்கப்பட்டது.                 பிற்காலப் பாண்டியர்களில், சோழர்களின் ஆட்சியை பொண்ணமராவதி யுத்தத்தின்  மூலமாக  முடிவுக்குக் கொண்டு வந்தவர் கோமாறன் திருபுவன சக்கரவர்த்தி எனும்  பட்டமுள்ள முதலாம் மாறவர்மன்  சுந்தர பாண்டியன் (பொ. ஆ.1216 முதல் 1239 வரை) அவரது ஆட்சிக் காலம், இவரது ஆறாவது ஆட்சியாண்டில் (பொ. ஆ.1222 ) தை மாதம் தாழையூர் நாடு, சிற்றானூர், திருத்தெங்கூர் உடையார் திருநாகீஸ்வரமுடைய நாயனார் கோவிலுக்காக ஸ்ரீ கோயில் ஸ்ரீ ருத்ர, ஸ்ரீ மாகேஸ்வரர்கள், படிகாரியஞ் செய்வோர்கள் உள்ளிட்ட அனைவரும் செம்பொன்மாரி அரசு மாளவ மாணிக்கம், திருக்கான பேருடையாரான உடையார் மாளவ சக்கரவர்த்திகளிடம் கலிதாங்கி மங்கலத்துப் பொன்பற்றி உடையான் சேந்தனுய்ய வந்தான் செம்பியன் பல்லவரயர் என்பவர் பெயரில் காணி நிலத்தை பிடிபாடு அதாவது பதிவு செய்து கொடுத்த செய்தியைக் கூறும்  கல்வெட்டு பதிவு செய்துள்ளது.  கல்வெட்டின் அளவு  நான்கரை அடி உயரத்துடனும் ஒன்றே முக்கால் அடி அகலத்துடனும் ஒரு அடி தடிமனுடன் உடைந்த நிலையில் மூன்று புறங்களில் 114 வரிகளுடன் கூடிய எழுத்து கற்பலகைத்தூணில் உள்ளது.


இவற்றில் 103 வரிகள் தெளிவாகவும், கல்வெட்டின் இறுதிப்பகுதி முழுவதுமாக சிதிலமடைந்த  நிலையிலும் உள்ளது.பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன் செம்பொன் மாரியில் தான் சோழரை (பொ. ஆ. 1219) மூன்றாவது ஆட்சியாண்டில் வென்றதாக  இலங்கை வரலாறு கூறுகிறது. அச்செய்தியை மெய்ப்பிக்கும் வகையில் அவரின் ஆறாம் ஆட்சியாண்டில் இக்கல்வெட்டு நடப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. செம்பொன்மாரி அரசு மாளவ மாணிக்கம், திருக்கான பேருடையாரான உடையார் மாளவ சக்கரவத்திகள் என்பார் சுந்தர பாண்டியன் ஆட்சிக்காலத்தில் மிக முக்கிய அரசியல் அதிகாரம் பெற்றவராக அலுவலராக இருந்துள்ளார். அவருடைய நிலமே கோவில் திருப்பணிக்காக பெறப்பட்டுள்ளதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

சானாவயலில் உடைந்து கிடக்கும் துண்டு கல்வெட்டு குறித்து பொறியாளர் மா.இளங்கோவன் அளித்த தகவல் படி , புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனரும், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை ஆய்வாளருமான மங்கனூர் ஆ.மணிகண்டன் தலைமை தாங்கிய  குழுவினர் சமீபத்தில்  ஆய்வு செய்தனர். அது  குறித்து ஆ. மணிகண்டன் கூறியபோது: ''மேலும், இந்நிலத்தில் அறுவடை செய்யும் பொருட்களில் நெல்லாக இருந்தால் பாதியையும், தினை, வரகு போன்ற நவ தாணியப் பொருட்களாக இருந்தால் கால் பகுதியையும் கோயிலுக்கு கட்டளையாகக் கொடுக்க வேண்டும் என்ற தகவலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது, கோப்பலை பட்டன் திருநாஹீஸ்வரமுடையான், மும்முடி சோழன் ஐய்ய நம்பி, திருவேகம்பந் கூத்தாடி கொற்றபட்ட நனாந திருஞாநசம்பந்தப்பட்டந், ஆழித்தேர் வித்தகந், பொந்மா மாளிகைய பிள்ளை, சிகாரியம் சுந்தரப்பெருமாள், கோயிற்கணக்க நாகதேவந், ஸ்ரீமாளவச்சக்கரவத்திகள், கோயிற் தளத்தார்(தேவரடியார்) முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது.மிழலை கூற்றத்தில் (சங்ககால நாட்டுப் பிரிவின் பெயர்), தாழையூர் நாடு தற்போது தாழனூர் என்றும், சிற்றானுர் சிறுகனூர் என்றும், கலிதாங்கி மங்கலம், கதிராமங்கலம் என்றும், பொன்பற்றி பொன்பேத்தி என்றும், மாறியுள்ளதையும் செம்பொன்மாரி, திருத்தெங்கூர் ஆகிய ஊர்கள் அதே பெயருடன் தற்போதும் அழைக்கப்படுவதையும் அறிய முடிகிறது. இதில் பாதி ஊர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலுமுள்ளன. 


மன்னர் மாறவர்மன் சுந்தரபாண்டியன் முன்னதாக, தனது தந்தையின் ஆட்சியில் 3-வது குலோத்துங்க சோழன் மதுரையை அழித்து கழுதையை பூட்டி நிலத்தை உழுததாக நேரில் கண்ட சுந்தர பாண்டியன் பின்னாளில் மதுரையை மீட்டதோடு மட்டுமின்றி சோழநாட்டையும் கைப்பற்றினார்.பொன்பேத்தியில் வீர ராசேந்திர சோழர் ஆட்சிக்காலத்தில் புத்த மித்திரன் எழுதிய வீர சோழியம் எனும் ஐந்திலக்கண நூலுக்கு உரை எழுதியவர் பெருந்தேவனார். இவர், புத்தமித்திரரின் முன்னோர்களில் ஒருவரான, பொன்பேத்தியைச் சேர்ந்த சேந்தன் என்பவர், படைத் தலைவனாக இருந்து, இலங்கையில் இருந்த குறு நில மன்னர்களான சிங்களத்து அரையன், வில்லவன் ஆகியோரை வென்ற செய்தியை குறிப்பிடுகிறார்.

“பொன்பற்றி உடையான் சேந்தனுய்ய வந்தானான” என்ற கல்வெட்டு வரியின் மூலம் செம்பியன் பல்லவரயர் என்பவர், சேந்தன் வழி வந்தவர் என இக்கல்வெட்டு கூறுகிறது. மிக முக்கிய வரலாற்றுத் தகவல்களை கொண்டுள்ள இக்கல்வெட்டானது பல வரலாற்று ஆய்வுகளுக்குச் சான்றாகும் என்றார். ஆய்வின்போது மா. இளங்கோவன், உள்ளிட்டோர் உடனிருந்தனர். முதலாவது இங்கு பார்க்கவேண்டியது . மதுரையை யாரிடம் இருந்து பாண்டியன் மீட்டார்?

இரண்டாவதாக  மாறவர்ம சுந்தர பாண்டியன். பெயருடன் உள்ள வர்மாக்கள் யார்? சுந்தரம் என்பது தமிழில் அழகன் அது வடமொழிச் சொல்(லாக) இருப்பதையும்  கவனியுங்கள். 

நமது காலத்தில் எம்.ஜி.ஆர் தன் அரசியல் களத்தை படு பயங்கரமாக பகுதிவாரியாக கட்டமைத்திருக்கிறார் - மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், ரிக்சாக்காரன், அடிமைப் பெண், ஆயிரத்தில் ஒருவன், மதுரை வீரன் , குடியிருந்த கோயில். இப்படி பல ஆனால் இதில் பொதுநீதி யாதெனில் மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் எனும் திரைப்படத்திற்குத் தரும்


முக்கியத்துவம் கூட உண்மையாண வரலாற்றுக் கல்வெட்டுக்கள் மீது மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பது வருத்தமே



நமது வரலாறு காணாமல் தடயம் அழிந்தாலும் பரவாயில்லை நமக்கு பொய்யான வரலாறு கூறும் பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன், மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படமே போதும் என்பதாக உள்ள நிலை மக்கள் இந்த பொய் மாயையில் இருந்து மாறுவது எப்போது.? என்பதே

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.