நடிகர் அஜித் குமார், ஹைதராபாத் நகரில் ஒரு கேரளத் தந்தைக்கும், ஒரு சிந்தி தாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
தமிழ்த் திரைப்படங்களில் நடித்து தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். 1986 ஆம் ஆண்டில் உயர்நிலைக் கல்வியை நிறைவு செய்யாமலேயே இடைநின்றார். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியைக் காதல் திருமணம் செய்தவருக்கு அனோசுகா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். 52 வயதாகும் அஜீத் குமார் தந்தையார், பி. சுப்பிரமணியம் தற்போது காலமானார் , இவர் கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த மலையாளியாவார் அவரது தாயார் மோகினி , மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் . அஜீத்குமாரின் மூன்று சகோதரர்களில் நடு மகனாவார், மற்றவர்கள் அனுப் குமார், முதலீட்டாளராகவும் மற்றும் அனில் குமார், ஐஐடி சென்னை பட்டதாரித் தொழிலதிபருமாகும்
அஜீத்குமார் தனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு முன்பே, பத்தாம் வகுப்பின் போது , ஆசான் மெமோரியல் சீனியர் செகண்டரி பள்ளியிலிருந்து வெளியேறி என்ஃபீல்டு நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு குடும்ப நண்பர் மூலம் மெக்கானிக்காக ஆறு மாதங்கள் பயிற்சி பெற்றார். பின் அவரது தந்தை வற்புறுத்தலின் பேரில் அங்கிருந்து விலகினார், அவர் அஜித்திற்கு ஒயிட் காலர் வேலை வேண்டும் என்று விரும்பினார் , மேலும் மற்றொரு குடும்ப நண்பரின் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்து வணிக மேம்பாட்டாளராக முன்னேறினார் மற்றும் விற்பனைப் பணிகளில் தொடர்ந்து நாடு முழுவதும் பயணம் செய்தார், அவரது ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்தினார். அங்கு ராஜினாமா செய்த பிறகு, அஜித்குமார் மற்ற மூன்று கூட்டாளர்களுடன் சேர்ந்து துணி விநியோகம் செய்யும் ஜவுளி வியாபாரத்தைத் தொடங்கினார். இந்த வணிக முயற்சியானது, அஜீத்குமாரை ஆடைத் துறையில் வேறொரு வேலையைச் செய்யத் தூண்டியது. அந்தக் காலகட்டத்தில், அஜித் குமார் தனது பணியுடன் மாடலிங் பணிகளிலும் பணியாற்றினார். ஹெர்குலிஸ் சைக்கிள் மற்றும் மோட்டார் நிறுவனத்திற்கான விளம்பரம் தயாரிக்கும் போது ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராமால் அவர் திரையுலகில் கொண்டுவரப்பட்டார் .
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் அஜித் குமார்.தமிழில் முன்னணி 5 ஹீரோக்கள் எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக அஜித்குமார் பெயர் அதிலிருக்கும்.
இவரின் தந்தை பி. சுப்பிரமணியம் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 84. அவருடைய மறைவுக்கு ஏ.ஆர். முருகதாஸ், ஏ.எல். விஜய். தயாரிப்பாளர் தியாகராஜன், சந்திர சேகர் பிரசன்னா, மிர்ச்சி சிவா போன்ற திரைப்பிரபலங்கள் நேரில் இரங்கல் தெரிவித்தனர். மேலும் பல நட்சத்திரங்கள் சமுக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்தனர்.அஜித்குமார் அண்ணன் அனுப் குமார் மும்பையில் தொழில் செய்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் தம்பி அனில் குமார் சென்னை ஐஐடி நிறுவனத்தில் பேராசிரியர் அப்பாவைப் போல அண்ணன், தம்பிகளும் ஊடக வெளிச்சமின்றி வாழ அஜித்குமார் சினிமாவில் நடிகனாகச் ஜொலித்தார். அஜித்குமாரின் அப்பா எப்பொழுதும் ஐ அம் பாலக்காடு சுப்பிரமணி என சொல்லிக் கொள்வாராம்.. அஜித்தின் அப்பா என யாராவது அழைத்தால் ரொம்பவே கோபப்படுவாராம். அவர் தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு என ஐந்து மொழிகளில் பேசக்கூடியவர் ஆனால் அவருக்கும், அஜித்குமாருக்குமிடையே சரியான உறவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் அவர் அஜித் குமாரின் திருமணத்தில் கூட கலந்து கொள்ளவில்லை. முக்கிய நிகழ்ச்சி என்றால் அம்மாவைத் தான் அஜித் குமார் அதிகம் கூப்பிடுவார். அஜித் குமாரின் அப்பா பற்றி எங்கேயும் பேச மாட்டார் குடும்பத்தை விட்டு ஏழு வருடங்கள் பிரிந்திருந்தார், அப்பா, அம்மாவுக்கு சென்னை ஈச்சம்பாக்கம் அருகில் முட்டுக்காட்டில் அரிமளம் சம்பந்தம் செட்டியாரிடம் இடம் வாங்கி ஒரு பெரிய வீடு கட்டிக் கொடுத்து கவனித்துக் கொண்டார் அஜீத்குமார் இருவர்களையும் அக்கறையுடன் கவனித்துக் கொண்டார் அஜித்குமார் அம்மா மோகினி வயது முதிர்வால் நினைவு தப்பி இருக்கிறார் அப்பாவும் கடந்த சில வருடங்களாக பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று மரணமடைந்தார். அஜித்தின் அப்பா வெளிநாடு சுற்றுப்பயணம் செய்வதில் அதிகம் ஆர்வம் உள்ளவர்.
அப்பாவை சொகுசுக்கப்பலில் தொடர்ந்து ஆறு மாதங்கள் சுற்றுலாவுக்கு அஜித் குமார் அனுப்பி வைப்பாராம் தனியாகச் சென்று உல்லாசமாக இருந்தவர் சுப்பிரமணி வாழ்க்கையை அனுபவித்து மறைந்துள்ளார் தனக்கு நெருக்கமான நண்பர்களுடன் நான் ஒரு ஜாலி மனிதர் என அடிக்கடி சொல்வாராம் சுப்பிரமணி. காலை நடைப்பயிற்சி செல்லும் வழக்கம் உடையவர் சுப்பிரமணி கடற்கரை ஒரத்தில் வசித்து மறைந்துள்ளார் பாலக்காடு சுப்பிரமணி. இவருடைய மறைவுக்கு ஏ.ஆர். முருகதாஸ், ஏ.எல். விஜய். தயாரிப்பாளர் தியாகராஜன், சந்திர சேகர் பிரசன்னா, மிர்ச்சி சிவா போன்ற பிரபலங்கள் நேரில் இரங்கல் தெரிவித்தனர். மேலும் பல நட்சத்திரங்கள் சமுக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்தனர். .
கருத்துகள்