முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காலமான பாலக்காடு சுப்பிரமணி எனும் நடிகர் அஜீத் குமார் தந்தை

நடிகர் அஜித் குமார்,  ஹைதராபாத் நகரில் ஒரு கேரளத் தந்தைக்கும், ஒரு சிந்தி தாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.


தமிழ்த் திரைப்படங்களில் நடித்து தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். 1986 ஆம் ஆண்டில் உயர்நிலைக் கல்வியை நிறைவு செய்யாமலேயே  இடைநின்றார். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியைக் காதல் திருமணம் செய்தவருக்கு அனோசுகா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். 52 வயதாகும் அஜீத் குமார்  தந்தையார், பி. சுப்பிரமணியம் தற்போது காலமானார் , இவர் கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த மலையாளியாவார்   அவரது தாயார் மோகினி , மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் . அஜீத்குமாரின் மூன்று சகோதரர்களில் நடு மகனாவார், மற்றவர்கள் அனுப் குமார், முதலீட்டாளராகவும் மற்றும் அனில் குமார், ஐஐடி சென்னை பட்டதாரித் தொழிலதிபருமாகும்


அஜீத்குமார் தனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு முன்பே, பத்தாம் வகுப்பின் போது , ​​ஆசான் மெமோரியல் சீனியர் செகண்டரி பள்ளியிலிருந்து வெளியேறி என்ஃபீல்டு நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு குடும்ப நண்பர் மூலம் மெக்கானிக்காக ஆறு மாதங்கள் பயிற்சி பெற்றார். பின் அவரது தந்தை வற்புறுத்தலின் பேரில் அங்கிருந்து  விலகினார், அவர் அஜித்திற்கு ஒயிட் காலர் வேலை வேண்டும் என்று விரும்பினார் , மேலும் மற்றொரு குடும்ப நண்பரின் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்து வணிக மேம்பாட்டாளராக முன்னேறினார் மற்றும் விற்பனைப் பணிகளில் தொடர்ந்து நாடு முழுவதும் பயணம் செய்தார், அவரது ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்தினார்.  அங்கு ராஜினாமா செய்த பிறகு, அஜித்குமார் மற்ற மூன்று கூட்டாளர்களுடன் சேர்ந்து துணி விநியோகம் செய்யும் ஜவுளி வியாபாரத்தைத் தொடங்கினார். இந்த வணிக முயற்சியானது, அஜீத்குமாரை ஆடைத் துறையில் வேறொரு வேலையைச் செய்யத் தூண்டியது. அந்தக் காலகட்டத்தில், அஜித் குமார் தனது பணியுடன் மாடலிங் பணிகளிலும் பணியாற்றினார். ஹெர்குலிஸ் சைக்கிள் மற்றும் மோட்டார் நிறுவனத்திற்கான விளம்பரம் தயாரிக்கும் போது  ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராமால் அவர் திரையுலகில் கொண்டுவரப்பட்டார் .


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் அஜித் குமார்.தமிழில் முன்னணி 5 ஹீரோக்கள் எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக அஜித்குமார் பெயர் அதிலிருக்கும்.

இவரின் தந்தை பி. சுப்பிரமணியம் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 84. அவருடைய மறைவுக்கு ஏ.ஆர். முருகதாஸ், ஏ.எல். விஜய். தயாரிப்பாளர் தியாகராஜன், சந்திர சேகர் பிரசன்னா, மிர்ச்சி சிவா போன்ற திரைப்பிரபலங்கள் நேரில் இரங்கல் தெரிவித்தனர். மேலும் பல நட்சத்திரங்கள் சமுக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்தனர்.அஜித்குமார் அண்ணன் அனுப் குமார் மும்பையில் தொழில் செய்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் தம்பி அனில் குமார் சென்னை ஐஐடி நிறுவனத்தில் பேராசிரியர் அப்பாவைப் போல அண்ணன், தம்பிகளும் ஊடக வெளிச்சமின்றி வாழ அஜித்குமார் சினிமாவில் நடிகனாகச் ஜொலித்தார். அஜித்குமாரின் அப்பா எப்பொழுதும் ஐ அம் பாலக்காடு சுப்பிரமணி என சொல்லிக் கொள்வாராம்..  அஜித்தின் அப்பா என யாராவது அழைத்தால் ரொம்பவே கோபப்படுவாராம். அவர் தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு என ஐந்து மொழிகளில் பேசக்கூடியவர் ஆனால் அவருக்கும், அஜித்குமாருக்குமிடையே சரியான உறவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் அவர் அஜித் குமாரின் திருமணத்தில் கூட கலந்து கொள்ளவில்லை. முக்கிய நிகழ்ச்சி என்றால் அம்மாவைத் தான் அஜித் குமார் அதிகம் கூப்பிடுவார். அஜித் குமாரின் அப்பா பற்றி எங்கேயும் பேச மாட்டார் குடும்பத்தை விட்டு ஏழு வருடங்கள் பிரிந்திருந்தார், அப்பா, அம்மாவுக்கு சென்னை ஈச்சம்பாக்கம் அருகில் முட்டுக்காட்டில் அரிமளம் சம்பந்தம் செட்டியாரிடம் இடம் வாங்கி ஒரு பெரிய வீடு கட்டிக் கொடுத்து கவனித்துக் கொண்டார் அஜீத்குமார் இருவர்களையும் அக்கறையுடன் கவனித்துக் கொண்டார் அஜித்குமார்  அம்மா மோகினி வயது முதிர்வால் நினைவு தப்பி இருக்கிறார் அப்பாவும் கடந்த சில வருடங்களாக பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று மரணமடைந்தார். அஜித்தின் அப்பா வெளிநாடு சுற்றுப்பயணம் செய்வதில் அதிகம் ஆர்வம் உள்ளவர்.


அப்பாவை சொகுசுக்கப்பலில் தொடர்ந்து ஆறு மாதங்கள்  சுற்றுலாவுக்கு அஜித் குமார் அனுப்பி வைப்பாராம் தனியாகச் சென்று  உல்லாசமாக இருந்தவர் சுப்பிரமணி வாழ்க்கையை அனுபவித்து மறைந்துள்ளார் தனக்கு நெருக்கமான நண்பர்களுடன் நான் ஒரு ஜாலி மனிதர் என அடிக்கடி சொல்வாராம் சுப்பிரமணி. காலை நடைப்பயிற்சி செல்லும் வழக்கம் உடையவர் சுப்பிரமணி கடற்கரை ஒரத்தில் வசித்து மறைந்துள்ளார் பாலக்காடு சுப்பிரமணி.  இவருடைய மறைவுக்கு ஏ.ஆர். முருகதாஸ், ஏ.எல். விஜய். தயாரிப்பாளர் தியாகராஜன், சந்திர சேகர் பிரசன்னா, மிர்ச்சி சிவா போன்ற பிரபலங்கள் நேரில் இரங்கல் தெரிவித்தனர். மேலும் பல நட்சத்திரங்கள் சமுக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்தனர்.    .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு