முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களை பிரதமர் பகிர்ந்தார்

நேற்று மாலை நடைபெற்ற தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களை பிரதமர் பகிர்ந்துள்ளார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் டாக்டர். எல்.முருகனின் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற  தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியின் காட்சிகளை  பகிர்ந்துள்ளார். தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியின் வீடியோவையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.


பிரதமரின் டுவிட்டர் பதிவு வருமாறு;

"நேற்று மாலை நடந்த தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள் இதோ..."பல்வேறு விழாக்களை முன்னிட்டு பல நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்ற காட்சிகளை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் திரு.ஜான் பர்லா பகிர்ந்துள்ளார்

பல்வேறு விழாக்களை முன்னிட்டு அவை தொடர்பான பல நிகழ்ச்சிகளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்ற காட்சிகளை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் திரு.ஜான் பர்லா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மத்திய இணை அமைச்சர் திரு. எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம், தில்லி சேக்ரெட் ஹார்ட் கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் கொண்டாட்டங்கள், மத்திய அமைச்சர் திரு.பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற கணேஷ் உற்சவ நிகழ்ச்சி மத்திய அமைச்சர் திரு. சர்பானந்த சோனாவால் இல்லத்தில் நடைபெற்ற பிஹு கொண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்ற காட்சிகளில் திரு. ஜான் பர்லா பகிர்ந்துள்ளார்.




மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை இணை அமைச்சரின் ட்விட்டர் பதிவுகளுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“இந்தியாவின் கலாச்சார துடிப்பும் பன்முகத்தன்மையும் நம்மை வலுவாக்குகிறது. மக்கள் மத்தியில் இருந்து அவர்களது தனித்துவமான பாரம்பரிய அம்சங்களைக் கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்“பிரதமர் திரு நரேந்திர மோடி, புத்தாண்டையொட்டி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.





பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு;

“அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இந்தாண்டு அனைவருக்கும் சிறப்பானதாக  அமையட்டும்’’.மகா பிஷூபா பாண சங்கராந்தி மற்றும் ஒடியா புத்தாண்டுக்கு பிரதமர் வாழ்த்து

மகா பிஷூபா பாண சங்கராந்தி மற்றும் ஒடியா புத்தாண்டின் மகிழ்ச்சியான தருணத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:



"மஹா பிஷுபா பானா சங்கராந்தி மற்றும் ஒடியா புத்தாண்டு வாழ்த்துகள். இந்தாண்டு அனைவருக்கும் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியானதாக அமையட்டும்’’மகா பிஷூபா பாண சங்கராந்தி மற்றும் ஒடியா புத்தாண்டுக்கு பிரதமர் வாழ்த்து

மகா பிஷூபா பாண சங்கராந்தி மற்றும் ஒடியா புத்தாண்டின் மகிழ்ச்சியான தருணத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:

"மஹா பிஷுபா பானா சங்கராந்தி மற்றும் ஒடியா புத்தாண்டு வாழ்த்துகள். இந்தாண்டு அனைவருக்கும் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியானதாக அமையட்டும்’’வைசாகி, விஷு, ரோங்காலி பிஹு, நாபா பர்ஷா, வைசாகடி மற்றும் புத்தாண்டு தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து



ஏப்ரல் 14, 15- 2023 அன்று கொண்டாடப்படும் வைசாகி, விஷு, ரோங்காலி பிஹு, நபா பர்ஷா, வைசாகடி மற்றும் புத்தாண்டு தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வைசாகி, விஷு, ரோங்காலி பிஹு, நபா பர்ஷா, வைசாகடி மற்றும் புத்தாண்டு பிறப்பு ஆகிய பண்டிகைகளின் புனிதமான நேரத்தில், நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் இந்த விவசாயிகளின் விழாக்கள், இந்தியாவின் செழுமையான, கலாச்சார பாரம்பரியம் மற்றும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. இந்த விழாக்கள் நமது உணவளிக்கும் விவசாயிகளின் கடின உழைப்பைப் போற்றும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்தின் கொண்டாட்டமாகும்.




இந்த மகிழ்ச்சியான பண்டிகைகள் நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும், நமது மக்களிடையே நல்லிணக்க உணர்வைப் பரப்பவும் நம்மை ஊக்குவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.பைசாகி, மேஷாதி, வைஷாகாதி, புத்தாண்டு, விஷு, நப பார்ஷா, போஹாக் பிஹு பண்டிகைகளையொட்டி நாட்டு மக்களுக்குக் குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

பைசாகி, மேஷாதி, வைஷாகாதி, புத்தாண்டு, விஷு, நப பார்ஷா, போஹாக் பிஹு பண்டிகைகளையொட்டி நாட்டு மக்களுக்குக் குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியின் முழு விவரம்:


“பைசாகி, மேஷாதி, வைஷாகாதி, புத்தாண்டு, விஷு, நப பார்ஷா, போஹாக் பிஹு ஆகிய மகிழ்ச்சியான  விழாக்களையொட்டி மக்கள் அனைவருக்கும் எனது அன்பான, மனமார்ந்த வாழ்த்துக்களை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் இந்த விழாக்கள்  நமது பன்முக கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளன. இவை ஒற்றுமை, நல்லிணக்க, சகோதரத்துவ, உணர்வின்  அடையாளமாக இருக்கின்றன.

இயற்கையின் செழிப்பையும், அறுவடையின் கொடையையும் நாம் கொண்டாடும் தருணத்தில் இயற்கை அன்னையுடனான நமது உறவை நாம் ஒரு கணம் பிரதிபலிக்கவேண்டும். நம்மை பாதுகாக்கின்ற இயற்கை வளங்களை பாதுகாக்கும் நமது பொறுப்பையும் உணரவேண்டும். நமக்கு உணவையும், ஊட்டச்சத்தையும் வழங்குவதற்கு அயராது பாடுபடும் நமது விவசாயிகளின் அர்ப்பணிப்புக்கு மிகுந்த மதிப்பையும், நன்றியையும் நாம் உரித்தாக்க வேண்டும்.

இந்த நன்னாளில் நமது மகத்தான தேசத்தை அடையாளப்படுத்தும் ஒற்றுமை, பன்முகத்தன்மை, அனைவரையும் உட்படுத்துதல் என்ற மாண்புகளுக்கான நமது உறுதிப்பாட்டை  நாம் வலுப்படுத்துவோம். நமது  பன்முகத்தன்மையை நாம் கொண்டாடுவோம். நமது மனிதாபிமானத்தைப் பகிர்வோம்.

இந்த விழாக்கள் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், வளத்தையும் கொண்டு வரட்டும்.”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.