எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாற்றுக்கட்சியின் உறுப்பினர்களை இழுத்து ஆட்சியைக் கவிழ்ப்பதைத் ஒரு வேளையாகவே செய்கிறது பாரதிய ஜனதா கட்சி என குற்றம் சாட்டும் எதிர்கட்சிகள் கர்நாடகாவில் சட்டமன்றப் பேரவைத் தேர்தல் நடைபெறும் சூழலில்,
பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்கள் ஒவ்வொருவராக விலகுவது, தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி அடியோடு துடைக்கப்படுவதையே காட்டுகிற நிலையில்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறுமென கருத்துக் கணிப்புகள் வந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெகதீஷ் ஜெட்டர் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். அவருக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பும் தரப்பட்டிருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியின் கர்நாடக மாநிலத் தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தற்போதய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோர் ஜெகதீஷ் ஜெட்டரைச் சந்தித்து நேரில் சமரசம் செய்தாலும் அவர்களது முயற்சி தோல்வியடைந்தது.
ஜெகதீஸ் ஷெட்டருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காததற்கு பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் பி.எல். சந்தோஷ் தான் காரணம் என்பதும் முதலமைச்சர் பதவிக்கு ஜெகதீஸ் ஷெட்டர் தமக்குப் போட்டியாக வரக் கூடும் என்பதால், சந்தோஷ் செய்த சதிச் செயல் தான் இது என ஜெகதீஸ் ஷெட்டர் ஆதரவாளர்கள் கருத்து.
பாரதிய ஜனதா கட்சியில் தொகுதி கிடைக்காத பெரும்பாலான தலைவர்கள் ஐக்கிய ஜனதா தளத்தில் ஐக்கியமாகிவிட்ட நிலையில். மூத்த தலைவர்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சியை நோக்கி வந்துள்ளனர். போகிற போக்கைப் பார்த்தால்.. கொடி கட்டுவதற்குக்கூட பாஜக உத்தரப்பிரதேசத்திலிருந்த
கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை தாங்களாகவே விலகி எதிர்க்கட்சிகளில் சாரைசாரையாகச் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே வந்த பின் ஜெகதீஸ் ஷெட்டர் போன்ற தலைவர்கள் அணிச் சேர்க்கை காங்கிரஸ் கட்சியை அம் மாநிலத்தில் பலப்படுத்தியுள்ளது.
கருத்துகள்