ஸ்ரீராமானுஜாச்சாரியாவின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
ஸ்ரீராமானுஜாச்சாரியாவின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரதமர் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;
“ஸ்ரீராமானுஜாச்சாரியாவுக்கு அவரது பிறந்த நாளில் நான் தலைவணங்குகிறேன். அவரது தெளிவான சிந்தனைகள் லட்சக்கணக்கானவர்களுக்கு தொடர்ந்து பலத்தையும், ஞானத்தையும் வழங்குகிறது. நமது கலாச்சார வேர்களில் அவர் எப்போதும் பெருமிதம் கொண்டிருந்தார். நவீன மற்றும் இணக்கமான சமூகத்தை கட்டமைப்பதற்கும் பாடுபட்டார்.” எனத் தெரிவித்துள்ளார்.ஸ்ரீமதே இராமாநுஜாய நம:
இன்று ஸ்வாமி இராமாநுஜரின் அவதார ஜெயந்தியான சித்திரை திருவாதிரை
"மன்னியதென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடு நாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமானிளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே."
ஓம் நமோ நாராயணா.
கருத்துகள்