காலை 09.30-க்கு வெளியாக வேண்டிய தேர்வு முடிவுகள் அமைச்சர் வந்தால் தான் வெளியிடுவோம் என்று கா்க்க வைப்பு. அது ஏன் தமிழ்நாடு கல்வி வளாகம் இருக்கும்போது பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அண்ணா நூலகத்தில் வெளியிடும் நிலை
இது வரை எந்த அமைச்சரும் தேர்வு முடிவுகளை வெளியிட்டதில்லை,
இது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதா என்பதே
அரசு நிர்வாக செயல்பாடுகளில் அமைச்சர் ஏன் தலையிட வேண்டும் என்ற வினா எழுகிறது,
இதே போல மற்றொரு நிகழ்வில்
மலேசியாவில் வாழும் தமிழர்கள் கால தாமதமாக வந்த தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனத் தலைவரை துரத்தி விட்டார்கள் எனவும் அறிகிற நிலையில். நேற்று வெளியான தேர்வு முடிவில் தமிழ் பாடத்தில் இருவர் 100 மதிப்பெண்கள், ஆங்கிலத்தில் 15 பேர் 100 மதிப்பெண்கள், இயற்பியலில் 812 பேரும், வேதியியலில் 3 ஆயிரத்து 909 பேரும், உயிரியலில் ஆயிரத்து 494 பேரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தந்தை உயிரிழந்த சோகத்தோடு + 2 தேர்வு எழுதிய மாணவி 479 மதிப்பெண் பெற்றுள்ளது பாராட்டும் படியானது,
அதேபோல், கணிதத்தில் 690 பேர், தாவரவியலில் 340 பேர், விலங்கியலில் 154 பேர், கணினி அறிவியலில் 4 ஆயிரத்து 618 பேர் , வணிகவியலில் 5 ஆயிரத்து 678 பேரும், கணக்கு பதிவியலில் 6 ஆயிரத்து 573 பேரும், பொருளியலில் ஆயிரத்து 760 பேரும், கணினி பயன்பாடுகள் பாடப்பிரிவுல் 4 ஆயிரத்து 51 பேரும், வணிக கணிதம் மற்றும் புள்ளியல் பாடத்தில் ஆயிரத்து 334 பேரும் 100 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளனர். இதுவரை தமிழ் பாடத்தில் 100 வாங்கிய மாணவர்களை இப்போது தான் பார்க்கிறோம், கடந்த காலங்களில் கணிதம் மட்டுமே 100. மதிப்பு பெறலாம் ..கால மாற்றம் முதல் மதிப்பு பெற்ற மானவி நந்தினி எளிய குடும்பம் சேர்ந்தவர் பாராட்டைப் பெறுகிறார். பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ச. நந்தினி,
தமிழ்நாடு முதலமைச்சரிடம் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
கருத்துகள்