முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பட்டமரத்தான் சுவாமி 63 ஆம் ஆண்டு பூச் சொரிதல் விழா

பொன்னமராவதி. பல நூற்றாண்டு காலத்திற்கு முன் ஒரு தனி நாடு. பொன்னன் அமரன் ஆண்ட மிகச் சிறந்த அரசர்களில்  பேராலேயே ‘பொன்னமராவதி’ என பெயர்


வந்தது ,அமரன் காலத்தில் கோட்டை தளபதியாக இருந்த அழகாண்டத்தேவர் சிறப்புடன் செயலாற்றியவர். பாண்டிய மன்னர் மாறவர்மன் சுந்தரபாண்டியன்  காலத்தில் பொன்னமராவதி தனது எல்லையில் சோழநாட்டு எல்கையில்  அமைந்த சிற்றரசாக  இருந்ததால் அதைக் கவர மூன்றாம் இராஜராஜன்  பாண்டிய நாட்டில்  தொடுத்த

போரிலே அழகாண்டத்தேவர் ஆற்றிய சிறந்த பணியையும், காட்டிய வீரத்தையும் கண்டு மகிழ்ந்த அரசர் பொன்னன், அவருக்கு ஆயுதங்கள் கொடுத்துச் சிறப்பித்து சேர்வை பட்டமுமளித்தார். இச் சமயத்தில், புற்றீசலெனப் பாய்ந்து வந்த எதிரிப் படைகளை தடுத்து நிறுத்தி வெஞ்சமர் செய்த தளபதி அழகாண்டத் தேவர், போரில் உயிர் நீத்தார்.

அவர் கடுஞ்சமர் புரிந்து உயிர் நீத்த இடமே அருள்மிகு பட்டமரத்தான் ஆலயமுள்ள இடம். தளபதி அழகாண்டத்தேவர் உயிர் நீத்த இடத்தில் அவரது சிறந்த வீரத்தைப் பாராட்டி  கொன்றை மரம் நடப்பட்டது. அம்மரமே அழகாண்டத்தேவரின் ஆன்மா சொரூபமாகி பட்டமரத்தான் என விளங்குகிறது. இப்போது அம்மரத்தின் அடிப்பாகம் கவசமிட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. தெய்வீக சக்திகளைக்  கொண்ட அருட் கடலான பட்டமரத்தான் சுவாமி இப்பகுதி மக்களுக்கு கலியுகக் கடவுளாக விளங்குகிறார்.

பொன்னன் அமரன் பெயரில்  பொன்னமராவதியை நிர்மானித்த சிற்றரசன் எனக்கூறும் அதேசமயம், பொன்னன், அமரன் என்ற இரு அரசர்களின் இவ்வரசர்கள் நெடிராஜபாண்டியராலும், நாயக்க மன்னர்களாலும் தோற்கடிக்கப்பட்டனர் எனவும் இவ்வூர் அழகிய நாச்சியம்மன் பாடலில் குறிப்பிடப்படுகிறது. இவ்வூரிலுள்ள வைணவக் கோயிலுக்கு 1527-ஆம் ஆண்டில் பொன்னம்பல நாதத் தொண்டை மான் வீரநரசிங்கராயர் பெயரால் நிலங்களை வழங்கியுள்ளார். 17-ஆம் நூற்றாண்டில் பொன்னமராவதி மருங்காபுரி ஜமீன் சிற்றரசர்களின் ஆட்சியில் இருந்தது. பின்னர் அது இராமநாதபுரம் சேதுபதிகளின் கைக்கு மாறியது. பிறகு புதுக்கோட்டை விஜரகுநாதனாகிய தனது மைத்துனருக்கு இரமநாதபுரம் இரகுநாத கிழவன் சேதுபதியால் விஜய ரகுநாதத்  தொண்டைமானுக்கு வந்தது 

கடந்த 

12-ஆம் நூற்றாண்டில் இங்கு பாண்டியர்-சிங்களவர் போரும்  நடைபெற்றது. அமரன் பெயரால் அமைந்த ‘அமர கண்டான் ஊருணியும்  இங்குள்ளது. இங்குள்ள சிவன் கோயில் இரண்டாம் இராஜராஜ சோழன் காலத்தில் கட்டப் பெற்றது. பைரவர் சந்நதியின் எதிரே சூரிய பகவான், குடும்ப சகிதமாய் அருள்பாலிக்கிறார்.

போரில் இறந்த பொன்னனுக்காக நிறுவப்பட்ட நடுக்கல்லில் பொன்னமராவதி கோட்டையின் நான்கு வாயில்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

1. கிழக்கு வாயில் -யாழி; 2. மேற்கு வாயில் -கோட்டைப் பிள்ளையார்; 3. வடக்கு வாயில் -வலையபட்டி மலையாண்டி சுவாமி; 4.தெற்கு வாயில் -அழகிய நாச்சியம்மன் கோயில். நடுக்கல் என்பது வரலாற்று சிறப்புமிக்க வீரர்களுக்கு வீர வணக்கம் செய்யும் தமிழர் மரபினை வெளிக் காட்டும் சின்னமாகத் திகழ்கிறது. கோட்டைப் பிள்ளையார் கோயில் புதுப்பிக்கப்படாமல், பழைய நிலை யிலேயே உள்ளது.

பொன்னன் அமரனுக்கும் பாண்டிய ருக்குமிடையே நடைபெற்ற போரில் பாண்டியன் வென்றவுடன், பொன்னன் அமரனைப் பார்த்து பொன்னமராவதியின் கருவூலத்தைக் கேட்டான். அமரன், 10 ஏக்கர் பரப்புள்ள ஒரு நிலத்தைக் காட்டி ‘இந்தப் பகுதியில் எங்கோ ஓரிடத்தில் பொக்கிஷம் உள்ளது’ என்றான். இதனை ஆழமாக வெட்டினால், அதாவது, குழிக்குள்ளிருந்து பார்க்கும்போது பறம்புமலை (பிரான்மலை) கண்ணுக்குத் தெரியாமல் மறையும் அளவுக்குத் தோண்டினால் புதையல் கிடைக்கும் என்றும் சொன்னான். 

பாண்டிய வீரர்கள் 10 ஏக்கர் நிலத்தையும் வெட்டி மண்ணைப் பக்கத்தே மலையெனக் குவித்தனர். இறுதி வரை கருவூலம் கண்ணில் படவேயில்லை. ஆனால், பெருமழை பெய்ததும் பள்ளம் நிரம்பி ஓர் அழகான ஊருணி உருவாயிற்று. ‘‘கோள் சொல்லிக் குளம் வெட்டிய குற்றத்திற்காக’ அமரன் பாண்டியர்களால் வெட்டப்பட்டான். அதுவே அமரகண்டான் ஊருணி அதன்பின் பாண்டியர்களின் எல்லை நகராயிற்று பொன்னமராவதி.வழியாக 

கோவலன் -கண்ணகி இருவரும் காவிரிப்பூம்பட்டிணத்திலிருந்து மதுரைக்குச் செல்லும் வழியில் பொன்னமராவதியிலுள்ள அழகிய நாச்சியம்மன் ஆலயத்தில் தங்கிச் சென்றதாக இங்கு பாடப்படும் பழம் பாடல்கள் கூறுகின்றன. வரலாற்றில் சோழ நாட்டையும், பாண்டிய நாட்டையும் இணைத்த சாலை அக்காலத்தில் பொன்னமராவதி வழி சென்று, பறம்பு மலையை (பிரான்மலை) சுற்றிச் சென்றது. அதனால்தான் சோழ -பாண்டிய எல்லைப் போர்கள் பெரும்பாலும் பொன்னமராவதி பகுதியிலேயே நடந்தன என்பதை அறிகிறோம். இந்த வரலாற்றில் அறியப்படும் பட்டமரத்தான் ஆலயம் இந்தாண்டில் 63 வருடமாக ஊர் மக்கள் நடத்தும் பூச் சொரிதல் விழா சிறப்பாக நடந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.