முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பட்டமரத்தான் சுவாமி 63 ஆம் ஆண்டு பூச் சொரிதல் விழா

பொன்னமராவதி. பல நூற்றாண்டு காலத்திற்கு முன் ஒரு தனி நாடு. பொன்னன் அமரன் ஆண்ட மிகச் சிறந்த அரசர்களில்  பேராலேயே ‘பொன்னமராவதி’ என பெயர்


வந்தது ,அமரன் காலத்தில் கோட்டை தளபதியாக இருந்த அழகாண்டத்தேவர் சிறப்புடன் செயலாற்றியவர். பாண்டிய மன்னர் மாறவர்மன் சுந்தரபாண்டியன்  காலத்தில் பொன்னமராவதி தனது எல்லையில் சோழநாட்டு எல்கையில்  அமைந்த சிற்றரசாக  இருந்ததால் அதைக் கவர மூன்றாம் இராஜராஜன்  பாண்டிய நாட்டில்  தொடுத்த

போரிலே அழகாண்டத்தேவர் ஆற்றிய சிறந்த பணியையும், காட்டிய வீரத்தையும் கண்டு மகிழ்ந்த அரசர் பொன்னன், அவருக்கு ஆயுதங்கள் கொடுத்துச் சிறப்பித்து சேர்வை பட்டமுமளித்தார். இச் சமயத்தில், புற்றீசலெனப் பாய்ந்து வந்த எதிரிப் படைகளை தடுத்து நிறுத்தி வெஞ்சமர் செய்த தளபதி அழகாண்டத் தேவர், போரில் உயிர் நீத்தார்.

அவர் கடுஞ்சமர் புரிந்து உயிர் நீத்த இடமே அருள்மிகு பட்டமரத்தான் ஆலயமுள்ள இடம். தளபதி அழகாண்டத்தேவர் உயிர் நீத்த இடத்தில் அவரது சிறந்த வீரத்தைப் பாராட்டி  கொன்றை மரம் நடப்பட்டது. அம்மரமே அழகாண்டத்தேவரின் ஆன்மா சொரூபமாகி பட்டமரத்தான் என விளங்குகிறது. இப்போது அம்மரத்தின் அடிப்பாகம் கவசமிட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. தெய்வீக சக்திகளைக்  கொண்ட அருட் கடலான பட்டமரத்தான் சுவாமி இப்பகுதி மக்களுக்கு கலியுகக் கடவுளாக விளங்குகிறார்.

பொன்னன் அமரன் பெயரில்  பொன்னமராவதியை நிர்மானித்த சிற்றரசன் எனக்கூறும் அதேசமயம், பொன்னன், அமரன் என்ற இரு அரசர்களின் இவ்வரசர்கள் நெடிராஜபாண்டியராலும், நாயக்க மன்னர்களாலும் தோற்கடிக்கப்பட்டனர் எனவும் இவ்வூர் அழகிய நாச்சியம்மன் பாடலில் குறிப்பிடப்படுகிறது. இவ்வூரிலுள்ள வைணவக் கோயிலுக்கு 1527-ஆம் ஆண்டில் பொன்னம்பல நாதத் தொண்டை மான் வீரநரசிங்கராயர் பெயரால் நிலங்களை வழங்கியுள்ளார். 17-ஆம் நூற்றாண்டில் பொன்னமராவதி மருங்காபுரி ஜமீன் சிற்றரசர்களின் ஆட்சியில் இருந்தது. பின்னர் அது இராமநாதபுரம் சேதுபதிகளின் கைக்கு மாறியது. பிறகு புதுக்கோட்டை விஜரகுநாதனாகிய தனது மைத்துனருக்கு இரமநாதபுரம் இரகுநாத கிழவன் சேதுபதியால் விஜய ரகுநாதத்  தொண்டைமானுக்கு வந்தது 

கடந்த 

12-ஆம் நூற்றாண்டில் இங்கு பாண்டியர்-சிங்களவர் போரும்  நடைபெற்றது. அமரன் பெயரால் அமைந்த ‘அமர கண்டான் ஊருணியும்  இங்குள்ளது. இங்குள்ள சிவன் கோயில் இரண்டாம் இராஜராஜ சோழன் காலத்தில் கட்டப் பெற்றது. பைரவர் சந்நதியின் எதிரே சூரிய பகவான், குடும்ப சகிதமாய் அருள்பாலிக்கிறார்.

போரில் இறந்த பொன்னனுக்காக நிறுவப்பட்ட நடுக்கல்லில் பொன்னமராவதி கோட்டையின் நான்கு வாயில்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

1. கிழக்கு வாயில் -யாழி; 2. மேற்கு வாயில் -கோட்டைப் பிள்ளையார்; 3. வடக்கு வாயில் -வலையபட்டி மலையாண்டி சுவாமி; 4.தெற்கு வாயில் -அழகிய நாச்சியம்மன் கோயில். நடுக்கல் என்பது வரலாற்று சிறப்புமிக்க வீரர்களுக்கு வீர வணக்கம் செய்யும் தமிழர் மரபினை வெளிக் காட்டும் சின்னமாகத் திகழ்கிறது. கோட்டைப் பிள்ளையார் கோயில் புதுப்பிக்கப்படாமல், பழைய நிலை யிலேயே உள்ளது.

பொன்னன் அமரனுக்கும் பாண்டிய ருக்குமிடையே நடைபெற்ற போரில் பாண்டியன் வென்றவுடன், பொன்னன் அமரனைப் பார்த்து பொன்னமராவதியின் கருவூலத்தைக் கேட்டான். அமரன், 10 ஏக்கர் பரப்புள்ள ஒரு நிலத்தைக் காட்டி ‘இந்தப் பகுதியில் எங்கோ ஓரிடத்தில் பொக்கிஷம் உள்ளது’ என்றான். இதனை ஆழமாக வெட்டினால், அதாவது, குழிக்குள்ளிருந்து பார்க்கும்போது பறம்புமலை (பிரான்மலை) கண்ணுக்குத் தெரியாமல் மறையும் அளவுக்குத் தோண்டினால் புதையல் கிடைக்கும் என்றும் சொன்னான். 

பாண்டிய வீரர்கள் 10 ஏக்கர் நிலத்தையும் வெட்டி மண்ணைப் பக்கத்தே மலையெனக் குவித்தனர். இறுதி வரை கருவூலம் கண்ணில் படவேயில்லை. ஆனால், பெருமழை பெய்ததும் பள்ளம் நிரம்பி ஓர் அழகான ஊருணி உருவாயிற்று. ‘‘கோள் சொல்லிக் குளம் வெட்டிய குற்றத்திற்காக’ அமரன் பாண்டியர்களால் வெட்டப்பட்டான். அதுவே அமரகண்டான் ஊருணி அதன்பின் பாண்டியர்களின் எல்லை நகராயிற்று பொன்னமராவதி.வழியாக 

கோவலன் -கண்ணகி இருவரும் காவிரிப்பூம்பட்டிணத்திலிருந்து மதுரைக்குச் செல்லும் வழியில் பொன்னமராவதியிலுள்ள அழகிய நாச்சியம்மன் ஆலயத்தில் தங்கிச் சென்றதாக இங்கு பாடப்படும் பழம் பாடல்கள் கூறுகின்றன. வரலாற்றில் சோழ நாட்டையும், பாண்டிய நாட்டையும் இணைத்த சாலை அக்காலத்தில் பொன்னமராவதி வழி சென்று, பறம்பு மலையை (பிரான்மலை) சுற்றிச் சென்றது. அதனால்தான் சோழ -பாண்டிய எல்லைப் போர்கள் பெரும்பாலும் பொன்னமராவதி பகுதியிலேயே நடந்தன என்பதை அறிகிறோம். இந்த வரலாற்றில் அறியப்படும் பட்டமரத்தான் ஆலயம் இந்தாண்டில் 63 வருடமாக ஊர் மக்கள் நடத்தும் பூச் சொரிதல் விழா சிறப்பாக நடந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...