கான்பூர் விமான நிலையத்தின் விமானப்படை தளத்தில் சிவில் விமானப் போக்குவரத்து
தொடங்கப்பட்டிருப்பதற்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
கான்பூர் விமான நிலையத்தின் விமானப்படை தளத்தில் சிவில் விமானப் போக்குவரத்து என்பது பயணத்தை எளிதாக்கும், வாய்ப்புகளை விரிவுபடுத்தும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ட்விட்டர் செய்திக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
" வாழ்த்துகள் பல! கான்பூர் விமான நிலையத்தில் இத்தகைய வசதிகள் விரிவாக்கம் மக்களுக்கு விமானப் பயணத்தை மிகவும் வசதியானதாக மாற்றுவதோடு, பல புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும்
கருத்துகள்