தெலுங்கானா மாநில தலைமை செயலகம் எனும் புதிய சட்டசபை வளாகத்தை முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார்.
10.51 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள சட்டசபைக் கட்டிடம் 265 அடி உயரம் கொண்டது. தரைத்தளம், அடித்தளம் உள்ளிட்ட 6 தளங்களைக் கொண்ட கட்டிடமானது பாரம்பரியக் கட்டிடக்கலையை பின்பற்றி கட்டப்பட்டது.
தலைமை செயலக வளாகம் ரூபாய். 616 கோடியில், 655 அறைகளுடன், 28 ஏக்கர் நிலப் பரப்பளவில் பரந்து விரிந்தது.
அதனுடன் 125 அடி உயரம் கொண்ட அம்பேத்கர் சிலை 2023 ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி திறக்கப்பட்டது.
தெலுங்கானா மாநில பிரிவினைப் போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்தவர்களுக்காக தியாகிகள் நினைவுச் சின்னமும் கட்டப்பட்டு வருகிறது.அதை ஜூன் மாதம் முதல் தேதி திறந்து வைக்கப்படுகிறது இந்த சட்டசபை வளாகத்திற்கு டாகடர் அம்பேத்கார் பெயர் சூட்டப்பட்டுள்ளது
கருத்துகள்