தஞ்சாவூரை கைப்பற்ற பிஜப்பூர் சுல்தான் முகமது அடில்ஷாவின் படைத்தலைவராக இருந்த சாகாஜி போஸ்லே – துக்காபாய்க்குப் பிறந்த வெங்கோஜி என்ற ஏகோஜி. இவர் சத்ரபதி
சிவாஜியின் சிற்றன்னை மகனும்,இளைய தம்பியுமாவார். தந்தை சாகாஜி போஸ்லேவின் மறைவிற்குப் பின் வெங்கோஜி என்ற ஏகோஜி பெங்களூருவின் ஜாகிர்தாரராக, பிஜப்பூர் சுல்தானால் நியமிக்கப்பட்டார்.
சத்ரபதி சிவாஜி பெங்களூர் மீது படையெடுக்க வரவே, வெங்கோஜி என்ற ஏகோஜி ஜனவரி மாதம் 1676 ஆம் ஆண்டில் தஞ்சாவூர் நாயக்கர்களின் அரசாட்சியை வீழ்த்தி, தன்னை தஞ்சாவூர் மன்னராக அறிவித்துக் கொண்டவர் வெங்கோஜி என்ற ஏகோஜி இறந்த ஆண்டு குறித்து பலவிதமான கருத்துகள் உள்ளன.
வெங்கோஜி என்ற ஏகோஜியின் மகன் முதலாம் சாகுஜி, மதுரை நாயக்கர் அரசிற்கு கப்பம் கட்டிக் கொண்டிருந்த இராமநாதபுரம் சேதுபதி மன்னருடன் உடன்படிக்கை செய்து கொண்டு, மதுரை நாயக்கர்களையும் வென்றார். இதனால் மதுரை நாயக்கர்களின் பிடியிலிருந்து விடுபட்டு இராமநாதபுரம் சேதுபதி மன்னர் தன்னாட்சியுடன் ஆண்டார். வெங்கோஜி என்ற ஏகோஜியின் காலத்தில் தஞ்சாவூர் அரசில் சமஸ்கிருதமும் தெலுங்கும் இலக்கியங்களில் வளர்ச்சி அடைந்தது. மேலும் தெலுங்கு மொழியில் இராமாயணமும் இயற்றப்பட்டது. வீர சிவாஜி மராட்டிய சமஸ்தான ஆட்சியாளராவார். இவர் சத்திரபதி சிவாஜி மகாராஜா என அழைக்கப்படுகிறார். மராத்தா சமூகத்தின் போன்சலே குலத்தைச் சேர்ந்தவராவார். பீஜாப்பூர் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்ததில்ஷாகி சுல்தானகத்திலிருந்து தனது சொந்த சுதந்திர இராச்சியத்தைச் சிவாஜி உருவாக்கினார். இதுவே மராத்தியப் பேரரசின் தொடக்கமாகும். 1674 ஆம் ஆண்டு அலுவல் ரீதியாகத் தனது நிலப்பகுதிகளுக்குச் சத்திரபதியாக இராய்கட் கோட்டையில் முடிசூட்டிக் கொண்டார். சிவாஜியின் தந்தை சாகாஜி போன்சலே தக்காணச் சுல்தானகங்களிடம் பணியாற்றிய ஒரு மராத்தியத் தளபதியாவார். வெங்கோஜி என்ற ஏகோஜி தஞ்சாவூர் மராட்டிய அரசின் நிறுவனர் 1674 -ஆம் ஆண்டு முதல் 1684. ஆம் ஆண்டு வரை ஆட்சியில் 1799 ஆம் ஆண்டில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியை வீழ்ந்த தஞ்சாவூர் மராட்டிய அரசு, 1855 ஆம் ஆண்டு வரை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியாளர்களுக்கு அடங்கிய சுதேச சமஸ்தானமாக 1855 ஆம் ஆண்டு முடிய விளங்கியது. தஞ்சாவூர் மாராட்டிய மன்னர் சிவாஜி ஆண் வாரிசின்றி 1855 ஆம் ஆண்டில் இறந்தார். எனவே அவகாசியிலிக் கொள்கையின் படி, வாரிசுகளற்ற தஞ்சாவூர் மராத்திய அரசை, 1855 ஆம் ஆண்டில் பிரித்தானியக் கிழக்ந்தியக் கம்பெனியின் நேரடி ஆட்சியில் இணைக்கப்பட்டது.
நாயக்கர் மன்னர்களை வீழ்த்தி .தஞ்சாவூரை ஆண்ட தனது தனது தந்தையின் மூத்த மனைவியின் மகனாகிய தம்பி வெங்கோசி என்ற ஏகோஜியை வீழ்த்த முகலாய ஔரங்கசீப்பைக் புலி நகத்தால் கொன்ற வீர சிவாஜி மெட்ராஸ் ராஜதாணி வந்து சோழர் தேசம் வந்தார் என்பது தான் வரலாறு.
வீர சிவாஜிக்கு ஏழு மனைவிகள்.
முதலாவது .சயீ பாய்
இரண்டாவது .சோயரா பாய்
மூன்றாவது .புத்தளி பாய்
நான்காவது .காசி பாய்
ஐந்தாவது .சுகுணா பாய்
ஆறாவது.சக்கர்வார் பாய்
ஏழாவது .குண்வந்தி பாய்
தனது ஆட்சியை நீடிக்க வீர சிவாஜிக்குப் பணம் தேவைப்படுகிறது.
தனது தம்பி வெங்கோசி என்ற ஏகோஜி ஆட்சி செய்யும் பகுதியில் ஒரு பகுதி வருமானத்தைக் கேட்டு கொள்ளிடம் நதிக்கரையில் திருமழப்பாடி அருகே முகாம் அமைத்துத் தூது அனுப்புகிறார். அதற்கு வெங்கோசி என்ற ஏகோஜி தர மறுக்கிறார். தம்பி வெங்கோசி என்ற ஏகோஜியோடு துறையூர் பகுதியில் யுத்தம் நடத்துகிறார். அப்போதய படை எடுப்பில் காட்டு மிருகங்களை விரட்டி வேட்டையாடக் கூட்டிவரப்பட்டவர்கள் தான் தற்போதய நரிக்குறவர்கள் இறுதியில் கொள்ளிடம் வடபகுதியைக் கைப்பற்றுகிறார். இரகுநாத் பந்த் என்பவரை அப்பகுதிக்கு பொறுப்பாக்குகிறார்.
பிறகு வெங்கோஜி என்ற ஏகோஜி மனைவியின் சமாதான முயற்சியால் வீர சிவாஜி வெற்றி பெற்ற பகுதிகளை தம்பி வெங்கோசி என்ற ஏகோஜிக்கே விட்டுக் கொடுக்கிறார். 1674 ஆம் ஆண்டு முதல் 1680 ஆம் ஆண்டு வரை ஆறாண்டுகள் மட்டுமே ஆண்ட வீர சிவாஜி 1680 ஆம் ஆண்டில் மரணமடைகிறார்.
வேலூர், செஞ்சி, கடலூர், திருமழப்பாடி ஆகிய இடங்களுக்கு வீர சிவாஜி வந்த வரலாற்று ஆவணங்கள் இன்றும் தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலில் இருக்கிறது. வீர சிவாஜி சென்னை வரவுமில்லை. காளிகாம்பாளை வழிபடவுமில்லை. அதற்கான வரலாற்று ஆவணங்களும் இல்லை.
சுதேசிமித்திரனில் வெளிவந்த பொய்யான கதையே வீர சிவாஜி சென்னை வந்தார் என்ற கதை.
அப்படியே வந்தாலும் அவர் நோக்கம் அப்போதய சென்னை மாகாணத்தைக் கொள்ளையடிப்பதும், தனது தம்பி வெங்கோசி என்ற ஏகோசியை தோற்கடிக்கவே
தஞ்சாவூர்-மதுரையை ஆண்ட நாயக்கர்களைக் கொன்று குவித்த, மராட்டியர்களைப் பற்றியும்
வெங்கோசி என்ற ஏகோஜியின் வாரிசு துக்கோஜியால் பழிவாங்கப்பட்ட இராமநாதபுரம் சேதுபதியின் வரலாறையும் பேசுவேண்டிய தருணம் இது.
வீர சிவாஜி இறந்தது 1680.ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி இன்றய கொல்கத்தா வழியாக வாரன் ஹோஸ்டிங் தலைமையில் இந்தியாவில் நுழைந்தது. பின் 1757. ஆம் ஆண்டு (பிளாசிப் போர்)... பின்னர் எப்படி வீர சிவாஜி. பிரிட்டாணிய கிழக்கிந்திய ஆங்கிலேயர்களுடன் சண்டை போட்டிருப்பார் ஔரங்கசீப் யுத்தம் தான் அவரை மற்றும் ரஜபுத்திரர்களைத் தைரியமூட்டியது ஆனால் வீர சிவாஜி ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியுடன் யுத்தம் செய்யவில்லை என்பதே உண்மை
கருத்துகள்